சமையல் செய்து கொண்டிருக்கும் போது தீ பற்றியதால் உடல் கருகி பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள சேரம்பாடி பகுதியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லலிதாகுமாரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு நிஷாந்தினி என்ற 7-ஆம் வகுப்பு படிக்கும் மகள் இருந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக லலிதா குமாரி தனது மகளுடன் ராஜாவை விட்டு பிரிந்து […]
