ஊராட்சி மன்ற அலுவலகத்தில் செயலாளர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அம்மன்குப்பம் கிராமத்தில் சண்முகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே ஊரிலேயே ஊராட்சி மன்ற அலுவலகத்தில் செயலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சண்முகம் அவருடைய வீட்டின் அருகாமையில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சண்முகத்தின் உடலை மீட்டு […]
