சாராயம் காய்ச்சுவதற்காக சர்க்கரை கடத்திய ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சங்கராபுரம்-பூட்டை செல்லும் சாலையில் காவல்துறையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்ததில் உர மூட்டைகளுக்கு இடையை 120 லிட்டர் சாராயம் மற்றும் சாராயம் காய்ச்சுவதற்காக சர்க்கரை மூட்டைகள் பதுக்கி வைத்திருந்தது காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து வாகனத்தை ஓட்டிவந்த ஓட்டுநரை காவல்துறையினர் பிடித்து விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் முருகன் […]
