480 லிட்டர் சாராயத்தை காரில் கடத்தி சென்ற 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் காவல்துறை சூப்பிரண்டு உத்தரவின் படி மதுவிலக்கு துணை காவல்துறை சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையில் தனிப்படையினர் சேராப்பட்டு, வெள்ளிமலை மலைப்பகுதிகளில் தீவிர சாராய சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சீவாத்து மூலை பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மற்றும் கார் போன்றவைகளை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். இதில் காரில் 60 லிட்டர் கொள்ளளவுடைய […]
