இடியுடன் மழை பொழிந்தாலும் சந்திராயன் 2 விண்கலம் எவ்வித தடையுமின்றி விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார். சந்திராயன் 1 விண்கல ஆராய்ச்சியை தொடர்ந்து சந்திராயன் 2 விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதை கொண்டு செல்வதற்க்காக ஜிஎஸ்எல்வி மார்க் 2 என்ற ராக்கெட் பிரத்யேகமான முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ராக்கெட் சுமார் 4000 கிலோ எடை வரை தாங்கி செல்லக்கூடிய திறன் கொண்டது. ஆகையால் இதற்கு பாகுபலி என்ற மறுபெயரும் உண்டு. இந்நிலையில் திருப்பதி ஏழுமலை வெங்கடேஸ்வரர் கோவிலில் […]
