தனியார் காப்பகத்தில் 4 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மாவட்ட சமயநல்லூர் பகுதியில் குழந்தைகள் காப்பகமாக மாசா அறக்கட்டளையை கருமாத்தூரைச் சேர்ந்த ஞானபிரகாசம் மற்றும் ஆதிசிவன் ஆகியோர் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த காப்பகத்தில் 25-க்கும் மேற்பட்ட சிறுவர் – சிறுமிகள் தங்கி வருகின்றனர். மேலும் அங்குள்ள சிறுமிகள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாவதாக மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்திற்கு புகார்கள் சென்றன. இந்நிலையில் மாவட்ட குழந்தைகள் நல கமிட்டிஉறுப்பினரான சண்முகம் காப்பகத்திற்கு சென்று திடீர் சோதனை நடத்தினார். மேலும் அங்கு தங்கியுள்ள […]
