கொள்ளிடம் ஆற்றில் குளித்துவிட்டு திரும்பும்போது மணல் குவாரி குழியில் எதிர்பாராத விதமாக தடுமாறி கீழே விழுந்த பள்ளி மாணவி பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள ரெங்கநாதபுரம் பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரது மகள் மாலினி.. 10 வயதுடைய இவர் திருச்சியிலுள்ள நாகமங்கலத்தில் இருக்கும் பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்துவந்தார். கொரோனா ஊரடங்கு விடுமுறை காரணமாக உறவினர் வீடான திருச்செனம்பூண்டி புது பாலத்திலுள்ள தன்னுடைய மாமா வீட்டிற்கு வந்து தங்கி […]
