சலூன் கடைகள் செயல்பட அனுமதி கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச்25ம் தேதியில் இருந்து தமிழகம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் சலூன் கடைகள் செயல் பட தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால், சலூன் கடைகளை திறக்க அனுமதி கோரி தமிழ்நாடு முடிதிருத்துவோர் சங்கத் தலைவர் முனுசாமி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கு விவரம்: அவர் தாக்கல் செய்த மனுவில், “ஊரடங்கிற்கு முன்னதாக 15 ஆயிரம் ரூபாய் வரை […]
