நெல் மூட்டைகள் விற்பனை செய்யாமல் கொள்முதல் நிலையத்தில் வைத்திருந்ததால் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள நாவலூர் உள்பட 5 பகுதிகளில் வசிக்கும் விவசாயிகள் தங்களது நிலத்தில் விளைந்த நெல்லை விற்பனைக்காக கொள்முதல் நிலையத்தில் ஒரு மாதமாக வைத்துள்ளனர். ஆனால் ஆட்கள் பற்றாக்குறை மற்றும் சாக்கு இல்லை எனக் கூறி அந்த நெல் மூட்டைகளை விற்பனை செய்யாமல் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது பெய்த கன மழையில் 5000 நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்ததுடன் […]
