கடலோர மாவட்டங்களில் ‘ஆபரேஷன் சாகர்கவாச் என்னும்’ பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியில் பயங்கரவாதிகள் வேடத்தில் இருந்த ஏழு் காவல் துறையினர் கைது செய்யப்பட்டனர். இந்தியா முழுவதும் கடலோர பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக ஆண்டுதோறும் கடலோர மாநிலங்களில் ‘ஆபரேஷன் சாகர்கவாச்’ என்னும் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடற்கரை பகுதிகளில் உள்ள 18 சோதனை சாவடிகளிலும், துறைமுக கடல் பகுதிகளிலும் கடலோர பாதுகாப்புக் குழும காவல் துறையினர் நேற்று (பிப். 06) படகில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். […]
