நாளைமுதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சி அளிப்பதால் அத்திவரதரை தரிசிப்பதற்கான நேரம் மாற்றப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் மொத்தம் 40 நாட்கள் நடைபெறும் அத்திவரதர் திருவிழா வெகுவிமர்சியாக நடைபெற்று வருகிறது. அத்திவரதரை நாளுக்கு நாள் காண வரும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதைத் தொடர்ந்து இன்று சயனகோலத்தில் அத்திவரதரை காலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நாளை முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சி அளிப்பார் என்றும் ஆகஸ்ட் 17ஆம் தேதி அத்திவரதர் திருவிழா […]
