படகு கவிழ்ந்த விபத்தில் 2 மீனவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள எம்.ஜி.ஆர் திட்டு பகுதியில் வசித்து வரும் குணசேகரன், தமிழன், வீரத்தமிழன் போன்றோரும் சிங்கார குப்பம் பகுதியில் வசித்து வரும் அப்பு என்பவரும் குணசேகரனுக்கு சொந்தமான படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்று உள்ளனர். இவர்கள் மீன்பிடித்து விட்டு வெள்ளாற்று முகத்துவாரம் பகுதியில் இவர்களது படகு வந்து கொண்டிருக்கும் போது, காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் நிலைதடுமாறி படகு கவிழ்ந்துவிட்டது. இதில் படகில் பயணித்த […]
