தரங்கம்பாடி அருகே மனைவியும், அவரது மாமனாரும் சேர்ந்து கணவரை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் தலச்சங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஸ்குமாரும். இவர் அப்பராசபுத்தூரைச் சேர்ந்த கலைமதியை காதல் திருமணம் செய்துக்கொண்டனர். ஆனால் இவர்களுக்கு திருமணமான 5 மாதங்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் கடந்த 14-ம் தேதி தனது தந்தை வீட்டிற்கு சென்ற கலைமதி, பின் காவல்நிலையத்திற்கு சென்று தனது கணவருடன் வாழவிரும்பவில்லை எனப் புகார் அளித்துள்ளார். இதனிடையே கலைமதியின் கணவர் டீசல் வாங்குவதற்காக தனது மனைவியின் ஊரான அப்பராசபுத்தூருக்கு சென்றுள்ளார். அப்போது சதீஸ்குமாரை […]
