கொட்டாம்பட்டி அருகில் வீட்டின் பூட்டை உடைத்து 21 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அடுத்துள்ள குன்னாரம்பட்டியை சேர்ந்தவர் துரைப்பாண்டி. 60 வயதான இவர் விவசாயியாக உள்ளார் . சம்பவத்தன்று துரைப்பாண்டியும், அவரது மனைவியும் சேக்கிபட்டியில் உள்ள தங்களது தோட்டத்திற்கு சென்றுள்ளார். இதனால் துரைப்பாண்டி வீடு பூட்டிக்கிடப்பதை அறிந்த மர்ம நபர்கள் பூட்டை உடைத்து பீரோவில் உள்ள வைக்கப்பட்டிருந்த 21 பவுன் நகைகள் […]
