அரியலூரில் விடுதலை சிறுத்தை கட்சியின் சுவரொட்டியை அவமரியாதை செய்த மர்ம நபர்களை உடனடியாக கைது செய்யக்கோரி ஊர் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அரியலூர் மாவட்டம் த.பழூர் பகுதியில் நேற்றைய தினம் ஒட்டப்பட்டிருந்த விடுதலைகள் சிறுத்தை கட்சியின் சுவரொட்டியை மர்மநபர்கள் நள்ளிரவில் அவமரியாதை செய்து விட்டு தப்பி ஓடியுள்ளனர். இதனை காலையில் பார்த்த கட்சியை சேர்ந்த சிலர் ஆத்திரமடைந்து கட்சி ஆட்கள் மற்றும் ஊர் மக்களை திரட்டி திடீரென ஜெயங்கொண்டம்-அணைக்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது சுவரொட்டியை […]
