இந்தியாவின் 71 வது குடியரசு தின விழா நாளை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. தலைநகர் டெல்லியில் உள்ள ராஜபாதையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடியை ஏற்ற உள்ளார், பின்னர் அவர் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்வார். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பிரேசில் அதிபர் ஜெட் போல்சனர் பங்கேற்க உள்ளார். இந்நிலையில் டெல்லி நகரம் முழு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு […]
