பெண் தனது குழந்தைகளுடன் கணவனின் உடலை வாங்க மறுத்து மருத்துவமனையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சின்னமநாயக்கன்பாளையம் பகுதியில் மனோகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் துப்புரவு பணியாளராக புதூர் பேரூராட்சியில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு அம்பிகா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். இந்நிலையில் அரசு பேருந்தில் அருப்புக்கோட்டைக்கு மனோகரன் வந்தபோது திடீரென மயங்கி விழுந்து இறந்துவிட்டார். இதுகுறித்து உடனடியாக […]
