வெளிமாநிலத்திற்கு கடத்தப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளிலிருந்து சட்டவிரோதமாக அரிசி கடத்தப்படுவதாக காவல்துறை அதிகாரி கணேஷிற்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறை அதிகாரிகள் மகாலிங்கம், பென்சிங், திருமணி, மாணிக்கராஜ், முத்துப்பாண்டி, சாமுவேல், செந்தில் ஆகியோர் கொண்ட குழு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த சமயத்தில் சிலுவைப்பட்டி பகுதியில் உள்ள குடோனில் இருந்து சில முட்டைகளை ஒரு கும்பல் டெம்போ வேனில் ஏற்றுவதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி […]
