உள்ளாட்சி தேர்தலை நேர்மையான முறையில் நடத்த வேண்டுமென தேர்தல் பார்வையாளர் சாந்தா தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆய்வுக் கூட்டத்திற்கு பார்வையாளர் சாந்தா தலைமை தாங்கியுள்ளார். இதற்கு மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் முன்னிலை வகித்துள்ளார். இந்நிலையில் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள சின்னங்கள் மற்றும் வாக்குச்சீட்டுகளை அச்சடித்து வருகின்றனர். இதனை அடுத்து அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சின்னங்கள் சரியாக அச்சடிக்கப்பட்டு […]
