நகராட்சியில் பணிபுரிந்த பெண் ஊழியர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காந்திநகர் பகுதியில் ஜோதி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜோதி நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள பயன்பாடற்ற கிணற்றில் சடலமாக கிடந்துள்ளார். இதைப் பார்த்த பணியாளர்கள் நகராட்சி அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பின் தீயணைப்பு துறையினரை வரவழைத்து கிணற்றில் இருந்த ஜோதியின் சடலத்தை மீட்டு மேலே கொண்டு வந்தனர். இதனை அடுத்து இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]
