முழு ஊரடங்கு உத்தரவின் காரணமாக பள்ளிவாசல்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் இஸ்லாமியர்கள் தங்கள் வீடுகளிலேயே தொழுகை நடத்தியுள்ளனர். இஸ்லாமியர்கள் ஆண்டுதோறும் ரம்ஜான் பண்டிகையை வெகு விமர்சையாக கொண்டாடுவது வழக்கம். கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் காரணமாக ரம்ஜான் பண்டிகை எளிமையாகவே கொண்டாடப்பட்டுள்ளது. இந்த ஆண்டும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலையின் காரணமாக கடந்த 10ஆம் தேதி முதல் வருகிற 24-ஆம் தேதி வரை தமிழக அரசு முழு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவால் தமிழகம் முழுவதும் பள்ளிவாசல்கள் […]
