சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புகளின் சான்றளிக்கப்படும் நகல்கள் தமிழில் வழங்கப்பட வேண்டும் என்று குடியரசு தலைவர் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் சிறப்பு பட்டமளிப்பு விழாவானது சென்னை தரமணியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமாணி சட்டத்துறை அமைச்சர் C.V.சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் சதாசிவம்,பாப்டே, தஹில் ரமாணி உள்ளிட்ட 3 நீதியரசர்களுக்கு மாண்பமை […]
