திருச்சி மணப்பாறையில் கனமழையால் ரயில் தண்டவாளத்தில் ஜல்லி அகன்று திடீர் பள்ளம் ஏற்பட்டது. திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியில் நேற்று மாலை முதல் நள்ளிரவு வரை கனமழை பெய்தது. இந்நிலையில் பாலக்காடு ரயில்வே பாலத்தில் ரயில் இருப்புபாதை சுற்றி போடப்பட்டிருந்த ஜல்லி கற்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு தண்டவாளத்தின் கட்டைகள் அந்தரத்தில் தொங்குவது போல காட்சி அளித்தன. இதனை பராமரிப்பு பணியின் போது கண்டுபிடித்த ஒரு ரயில்வே ஊழியர் ஒருவர் உடனடியாக ரயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். […]
