சென்னை தண்டையார்பேட்டை மருத்துவ முகாமில் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை கண்டு அஞ்ச வேண்டாம், பரிசோதனைகளை அதிகப்படுத்தி இருக்கிறோம் என கூறியுள்ளார். சென்னையில் சராசரியாக நாளொன்றுக்கு 9,000 முதல் 10,000 வரை பரிசோதனை செய்யப்படுகிறது. சென்னையில் 1,974 குடிசைப் பகுதிகள் கண்டறியப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது, வீடுதோறும் சென்று ஆய்வு நடத்தப்படுகிறது. கண்ணகி நகர், திடீர் நகரில் நோய்த்தொற்று கட்டுக்குள் வந்துள்ளது என தகவல் அளித்துள்ளார். […]
