புதுவையில் கூலித்தொழிலாளி, இளம்பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி, குமரகுருபள்ளத்தை சேர்ந்த 35 வயதான கீதா, தனது 2 குழந்தைகளுடன் கணவனை பிரிந்து, கீதா சாரம் ஜெயராம் நகரில் வாடகைக்கு வீடு எடுத்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில், அவருக்கும் தட்டுவண்டி தொழிலாளியான ஆனந்த் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது .திருமணமான ஆனந்த் அவ்வப்போது கீதாவின் வீட்டிற்கு வந்துள்ளார். நேற்று இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த ஆனந்த் கீதாவை சரமாரியாக தாக்கியுள்ளார். […]
