கடன் பாக்கியை பேரூராட்சி முறையாக செலுத்தாததால் மாமல்லபுர கடற்கரையின் முகப்பு வாசலில் வைக்கப்பட்டிருந்த 10 அடி உயரம் கொண்ட புத்தர் சிலையை அதன் உரிமையாளர் எடுத்து சென்ற சம்பவம் அதிருத்தியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் கடற்கரையில் மூன்று மாதங்களுக்கு முன் பாரத பிரதமர் நரேந்திர மோடி சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். இதில் இரு நாட்டு தலைவர்களும் மாமல்லபுரத்தில் உள்ள புராண காலத்தை ஞாபகப்படுத்தும் வகையில் உள்ள சின்னங்களையும் சிற்பங்களையும் கண்டு […]
