மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள முள்ளிப்பட்டி கிராமத்தில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணி என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் மணி தனது நண்பர்களான கிஷோர் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார். இவர்கள் கும்பக்குடி அருகே சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த 2 பேரையும் அருகில் […]
