கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. தமிழகத்திலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மதுரையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் 1 முதல் 9ம் வகுப்பு வரை பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.அதேபோல 10ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெற்றுள்ளது. 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த 2ம் தேதி தொடங்கிய நேற்றுடன் நிறைவு பெற்றது. நேற்று வேதியியல், கணக்கு பதிவியியல் தேர்வுகள் நடைபெற்றன. […]
