அடிக்கடி விபத்து நடைபெறும் சாலையில் வேகத்தடை அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள கல்லணை சாலையில் இருந்து 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். இவர்கள் திருவளர்சோலை பனையபுரம் அருகே சென்று கொண்டிருந்த போது வாலிபர்களின் மோட்டார் சைக்கிள் மீது எதிரே வந்த லாரி மோதிவிட்டது. இதனால் படுகாயமடைந்த வாலிபர்களை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் நடந்து சிறிது நேரத்தில் […]
