ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் நகராட்சி ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் 120 துப்புரவு பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட கலெக்டர் அறிவித்தபடி 259 ரூபாய் மட்டுமே அவர்களுக்கு ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் அவர்களுக்கு உயர்த்தப்பட்ட சம்பளமான 292 ரூபாய் வழங்கப்படவில்லை. இதுகுறித்து ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் […]
