போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சப்-இன்ஸ்பெக்டரின் மனைவி தனது உறவினர்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அவலூர் பேட்டை காவல் நிலையத்தில் இளங்கோவன் என்பவர் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இந்துமதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இந்துமதி தனது தாய் மற்றும் உறவினர்கள் உடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்று திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். […]
