போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு இளம்பெண் தனது பெற்றோருடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்த 3 பேர் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் விராலிப்பட்டி பகுதியில் வசிக்கும் கௌசல்யா தனது பெற்றோருடன் தர்ணாவில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதுகுறித்து கௌசல்யா கூறும்போது, நான் பொன்னகரத்தில் இருக்கும் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் படிக்கும் போது ஒட்டன்சத்திரம் பகுதியில் வசிக்கும் வாலிபர் ஒருவர் […]
