சம்பள பாக்கியை வழங்க வலியுறுத்தி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேவர்சோலையில் தனியார் தேயிலை எஸ்டேட் அமைந்துள்ளது. இந்நிலையில் எஸ்டேட் நிர்வாகத்தினர் கடந்த டிசம்பர் மாதம் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளத்தை இதுவரை கொடுக்கவில்லை. இதனால் தொழிலாளர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் டிசம்பர் மற்றும் ஜனவரி மாத சம்பள பணத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி எஸ்டேட் தொழிலாளர்கள் திடீரென வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த […]
