மகாத்மா காந்தி மீது பாஜகவினர் உண்மையான அன்பு வைத்திருந்தால், ஆனந்த் குமார் ஹெக்டே, பிரக்யாசிங் தாகூர் ஆகியோரை கட்சியை விட்டுவிலக்கி வைக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் தெரிவித்தார். டெல்லி சட்டப்பேரவை தேர்தல் பரபரப்புகளுக்கிடையே காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் பிரபல தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- பாஜகவினர் ஒவ்வொரு நிமிடமும், நொடியும் தேசப்பக்தி குறித்து பாடம் எடுக்கின்றனர். மற்றவர்களை தேசவிரோதி என்று முத்திரை குத்துகின்றனர். ஆனால் […]
