கோட்சேவை தேசபக்தர் என்று கூறியதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் பிரக்யா சிங் தாக்கூர் நாடாளுமன்றத்தில் மன்னிப்புக் கோரினார். மாலேகன் குண்டுவெடிப்பில் குற்றம்சாட்டப்பட்ட பிரக்யாசிங் தாக்கூர், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று எம்பியானார். இவர், ஏற்கனவே செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், காந்தியை படுகொலை செய்த கோட்சே தேசபக்தர் என்று கூறியிருந்த நிலையில், தற்போது நாடாளுமன்றத்திலும் அதையே மீண்டும் கூறினார். சிறப்பு பாதுகாப்பு சட்டத்திருத்த மசோதா நேற்று நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவால் நிறைவேற்றப்பட்டது. இம்மசோதா மீதான விவாதத்தின்போது திமுக […]
