பிரசவ அச்சத்தால் மாத்திரை சாப்பிட்ட கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கொரட்டூர் தந்தை பெரியார் நகரில் குமாரி கஞ்சக்கா என்பவர் தனது கணவர் பிரதாப் உள்காவுடன் வசித்து வந்துள்ளார். இந்த தம்பதியினர் ஒடிசாவை சேர்ந்தவர்கள். பிரதாப் சென்னையில் கூலி தொழிலாளியாக பணிபுரிகிறார். மேலும் குமாரி ஏழு மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், அவரது மதினி, பிரசவத்தின்போது உயிரிழந்துள்ளார். அவரின் இறுதி சடங்குக்கு சென்றுவிட்டு சென்னை திரும்பிய குமாரிக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. […]
