சேதமடைந்து இருக்கும் சிமெண்ட் கட்டைகளை உடனுக்குடன் சரி செய்து நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் மாநகராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள திருப்பாதிரிபுலியூர் பகுதியில் வணிக வளாகங்கள், நகைக்கடைகள், மார்க்கெட் மற்றும் துணிக்கடைகள் என பல நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் திருவந்திபுரம் வழியாக பண்ருட்டிக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் சுப்பராய செட்டி தெரு வழியாக சென்று வருகின்றது. இதில் நாள்தோறும் ஆயிரத்திற்கும் அதிகமான வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் அவ்வழியாகச் செல்கின்றனர். ஆனால் பாதாள சாக்கடையில் மூடப்பட்டுள்ள […]
