தபால் மூலம் பழனி முருகன் கோவிலின் பிரசாதத்தை வீட்டிலிருந்தே பெற்று கொள்ள புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள தலைமை தபால் நிலைய முதல்நிலை அஞ்சல் அதிகாரி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் பழனி முருகன் கோவில் நிர்வாகம் தபால் துறையுடன் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தி இருப்பதாக தெரிவித்துள்ளார். அந்த ஒப்பந்தத்தின்படி கொரோனா காலகட்டங்களில் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல முடியாத காரணத்தால் தங்களது வீடுகளில் இருந்தே பழனி பஞ்சாமிர்தம், ராஜ அலங்கார திருவுருவப்படம், விபூதி […]
