ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர், பேராவூரணி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பேராவூரணி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வைத்து ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் உள்ள உதவி பொறியாளர், ஒன்றிய பொறியாளர், பணி மேற்பார்வையாளர் மற்றும் உதவி இயக்குனர் நிலையிலான பணிகளுக்கான பதவி உயர்வுகளை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். இந்த ஆர்ப்பாட்டமானது மாநில செயற்குழு உறுப்பினர் […]
