இலவச மனைப்பட்டா வழங்குமாறு பொதுமக்கள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள பொண்ணடம் பகுதியில் இருக்கும் பிரளயகாலேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான கருங்குழி தோப்பு பகுதியில் உள்ள இடத்தில் 25-ற்கும் அதிகமான குடும்பத்தினர் கடந்த 30 வருடங்களாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் தங்களுக்கு மின்சார வசதி பெறுவதற்காக மனை ரசீது கேட்டு பலமுறை போராட்டம் நடத்தியும் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து கோவிலில் குடியிருக்கும் மக்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்குமாறு ஒடுக்கப்பட்டோர் […]
