குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான திமுகவின் போராட்டம் தொடரும் என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கடந்த ஒரு வாரமாக திமுக கையெழுத்து இயக்கம் நடத்தியது. இதற்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்த அக்கட்சித் தலைவர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,”நாம் எவ்வளவு சரியான பாதையில், முறையாகவும் எச்சரிக்கையாகவும் அளந்து அடியெடுத்து வைத்துச் செல்கிறோம் என்பதை, அரசியல் எதிரிகளின் அலறலில் இருந்தே அறிந்து கொள்ள முடியும். திராவிட முன்னேற்றக் கழகத்தின் […]
