Categories
செய்திகள் வைரல்

ஆளுங்கட்சி கூட்டம் போனால் எவர் சில்வர் குடம்…… வைரலாகும் வீடியோ…!!

அதிமுக கூட்டத்திற்கு வந்த பொதுமக்களுக்கு எவர் சில்வர் குடம் கொடுப்பதை போன்ற வீடியோ வெளியாகி வைரலாகி வருகின்றது. நாடு முழுவதும் 7 கட்டமாக நடக்கும் மக்களவை தேர்தல் வரும் 11_ஆம் தேதி தொடங்குகிறது . தேர்தல் நடத்தை விதிகள் அமலில் வந்த நாள் தொடங்கி தேர்தல் பறக்கும் படையினர் நாடு முழுவதும் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர் . உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லும் பணம் மற்றும் பொருட்களை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்கின்றனர். மேலும் […]

Categories
செய்திகள் வைரல்

“தலையில் பலா பழம் வைத்து பிரச்சாரம்” வைரலாகும் சுயேச்சை வேட்பாளர்…..!!

தலையில் பலா பழத்தை வைத்துக்கொண்டு சுயேச்சை வேட்பாளர் பிரசாரம் செய்யும் வீடியோ வைரலாகி வருகின்றது. இந்தியாவில் மக்களவைத் தேர்தல் வருகின்ற 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை  என 7 கட்டமாக நடைபெறுகின்றது. இந்த தேர்தலுடன் சேர்த்து ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தலும் நடைபெற உள்ளது. இதற்கான தீவிர பிரச்சார பணியில்  அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. தேர்தல் அறிக்கைகள்  மூலமாக  மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்து, பரப்புரை  மேற்கொண்டுள்ளன. பிரதான அரசியல் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள் வைரல்

“பொதுக்கூட்ட மேடையில் செருப்பு வீச்சு” வைரலாகும் வீடியோ…!!

திராவிட கழகம் நடத்திய பொதுக்கூட்டத்தில் கல் எறிந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.   ஹிந்துக்கள் வணங்கும் தெய்வமாக வழிபடும்  கிருஷ்ண பகவானை, பொள்ளாச்சி பாலியல் விவகாரத்துடன் இணைத்து திராவிட கழகத் தலைவர் கீ.வீரமணி பேசிய வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி ஹிந்துக்களிடமும் ,  கிருஷ்ணரை வழிபடுவோரிடமும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.மேலும் கீ.வீரமணி மற்றும் திராவிட கழகத்திற்கு எதிராக போராட்டத்தையும் முன்னெடுத்தனர். இந்நிலையில் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் திருநாவுக்கரசரை ஆதரித்து […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

7_ஆம் தேதி பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு……!!

வருகின்ற 7_ஆம் தேதி பாஜக தனது மக்களவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை வெளியிடுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியாவில் மக்களவைத் தேர்தல் வருகின்ற 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை  என 7 கட்டமாக நடைபெறுகின்றது. இந்த தேர்தலுடன் சேர்த்து ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தலும் நடைபெற உள்ளது. இதற்கான தீவிர பிரச்சார பணியில்  அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. தேர்தல் அறிக்கைகள்  மூலமாக மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்து, பரப்புரை  மேற்கொண்டுள்ளன. இந்நிலையில்  மிகுந்த எதிர்பார்ப்புக்கு […]

Categories
அரசியல் சினிமா தமிழ் சினிமா

அரசியல் ஆசையில் நடிகை ஸ்ருதி ஹாசன்…!!!

பிரபல நடிகை ஸ்ருதிஹாசன் சினிமாவில்  நடிக்காமல் விலகி இருப்பதற்கு விளக்கம் அளித்துள்ளார்.  நடிகை ஸ்ருதி ஹாசன் கடந்த 2 வருடமாக நடிப்பில் இருந்து விலகியுள்ளார். இதற்கு காரணம் அவர் ஒரு இசை ஆல்பம் தயாரித்து வருகிறார். இது குறித்து அவர் கூறுகையில் நடிக்கவில்லை தவிர நடிப்பில் இருந்து நான் ஒய்வு பெற வில்லை. இன்னும் சில நாள்களில் ஒரு தமிழ் படத்தில் நடிக்கவுள்ளேன். இந்தி  படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளேன். என் தந்தை கமல்ஹாசன் அரசியலில் நுழைந்த பின் எனக்கும் அரசியல் மீது ஆர்வம் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அதிமுக_வின் பேனரை கிழித்தெறிந்த அமமுக_வினர்….. உசிலம்பட்டியில் பரபரப்பு…!!

உசிலம்பட்டியில் அதிமுகவினரின் வைத்திருந்த பேனர்களை அமமுகவினர் கிழித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.  பார்வட் ப்ளாக் கட்சியின் மறைந்த மாநில பொதுச்செயலாளர் பி.கே.மூக்கையாத் தேவருக்கு  97_ஆவது பிறந்த தினத்தையொட்டி உசிலம்பட்டியில் உள்ள அவரின் நினைவிடத்தில் அமமுகவை சேர்ந்த தங்கத்தமிழ்செல்வன் மரியாதை செலுத்தினார். அப்போது அங்கு அதிமுகவினரின் பேனர்கள் இருந்தனர். இதையடுத்து தேர்தல் நேரத்தில் அதிமுகவினர் பேனர் வைத்ததை கண்டித்து, அமமுகவினர் அப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கே பெரும் பரபராப்பு ஏற்படது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை […]

Categories
அரசியல்

தேர்தலில் வெற்றி பெற்று எதும் செய்யவில்லை என்றால் ராஜினாமா….கமல்ஹாசன் அதிரடி….!!

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று எதும் செய்யவில்லை என்றால் பதவியை ராஜினாமா செய்வார்கள் என்று  கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். விருதுநகர் மக்களவைத் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் முனியசாமியை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் திருப்பரங்குன்றத்தின் பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், கட்சியில் சிறிய தவறு நடந்தாலும் அதனை திருத்திக் கொள்ளும் தைரியம் எங்களுக்கு உண்டு எனக் கூறிய  கமல்ஹாசன் மக்களின் அடிப்படை வசதிகயை கூட செய்து கொடுக்காத இந்த ஆட்சி அகற்றப்பட […]

Categories
அரசியல்

“ஆட்சியில் இல்லாதவர்களின் அழகான தேர்தல் அறிக்கை பயனற்றது” முதல்வர் விமர்சனம்…!!

ஆட்சியில் இல்லாதவர்கள் வெளியிட்டுள்ள அழகாக தேர்தல் அறிக்கையால் ஒரு பயனுமில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். நெல்லை மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் மனோஜ் பாண்டியனை ஆதரித்து வள்ளியூர் பகுதியில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டு வாக்கு சேகரித்தார். அவர் பேசும் போது , தாங்கள்தான் ஆட்சியில் இருப்பதாகவும், அதனால், தங்களின் தேர்தல் அறிக்கைகளில் இடம்பெற்றுள்ள திட்டங்கள்தான் நடைமுறைக்கு வரும் என்று அவர் தெரிவித்தார். மேலும் முதல்வர் பேசுகையில் , திமுக ‌தலைவர் முக.ஸ்டாலின், வெறும் விமர்சனங்களை மட்டும் […]

Categories
மாநில செய்திகள்

சட்டம் – ஒழுங்கு குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை…..!!

நாடாளுமன்ற தேர்தல் ப‌ண‌ப்‌புழக்கம் மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்து  உ‌யர் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையர்கள் இன்று ஆலோசனை நடத்த இருக்கின்றனர். நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு வருகின்ற ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுகின்றது. மேலும் பாராளுமன்ற முதல் கட்ட வாக்குப் பதிவுக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில், தேர்தல் பரப்புரை உச்சக் கட்டத்தை எட்டியுள்ளது. தமிழகத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவாக வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி நாடாளுமன்றம் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற இருக்கின்றது. இதற்காக […]

Categories
அரசியல்

மோடி வந்தாலும் , மோடியின் டாடி வந்தாலும் அதிமுக_வை காப்பாற்ற முடியாது… டிடிவி தினகரன் சாடல்…!!

 இடைத்தேர்தலில், அதிமுக 8 இடங்களில் வெற்றிபெறாவிட்டால் தமிழகத்தில் நடைபெறும் ஆட்சியை பிரதமர் மோடி அல்ல மோடியின் டாடி வந்தாலும் காப்பாற்ற முடியாது என்று டிடிவி தினகரன் தெரிவித்தார் பொள்ளாச்சி தொகுதி போட்டியிடும் அமமக வேட்பாளர் முத்துக்குமாரை ஆதரித்து அக்கட்சியின் துணைபொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உடுமலை பேருந்துநிலையம் முன்பு பரப்புரை செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய டிடிவி தினகரன், “ ஜெயலலிதா இருந்திருந்தால் இந்நேரம் பொள்ளாச்சி சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள்   அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்திருப்பார்கள். ஆனால் இப்போது […]

Categories
தேசிய செய்திகள்

வயநாட்டில் ராகுல் காந்தி இன்று வேட்பு மனு தாக்கல்…….!!

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி‌ கேரள மாநிலம் வயநாடு மக்‌களவைத் தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்கின்றார். உத்தரப்பிரதேச மாநிலத்தின் அமேதி மக்களவைத் தொகுதியில் தொடர்ந்து 3 முறை களமிறங்கி வெற்றி பெற்‌ற இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி, 4-வது முறையாக அதே தொகுதியில் போட்டியிடுகிறார்.மேலும் அவர் கேரளாவின் வ‌யநாடு தொகுதியிலும் போட்டியிடப் போவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் கேரள மாநிலத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்ய இன்று தான் கடைசி நாள். இதையடுத்து ராகுல்காந்தி இன்று தனது வேட்புமனுவை தாக்கல் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“காங்கிரஸ்ஸின் தவறை சரி செய்யவே 5 ஆண்டுகள்” பிரச்சார கூட்டத்தில் மோடி விமர்சனம் ….!!

காங்கிரஸ்ஸின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு செய்த தவறுகளை சரிசெய்வதற்கே 5 ஆண்டுகள் செலவழித்தாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு வருகின்ற ஏப்ரல் 11_ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுகின்றது. முதல் கட்ட வாக்குப் பதிவுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் மாநில மற்றும் தேசிய கட்சிகளின் தேர்தல் பரப்புரை உச்சக் கட்டத்தை எட்டியுள்ளது. நாடு முழுவதும் அரசியல் கட்சியின் தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“சுயேட்சைகளுக்கு குக்கர்” சிக்கி தவிக்கும் அமமுக வேட்பாளர்கள்…..!!

அமமுக வேட்பாளர்களின் பெயரைருடன் கூடிய சுயேச்சை வேட்பாளர்களுக்கு 4 தொகுதிகளில் குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது சர்சையை ஏற்படுத்தியுள்ளது. R.K  நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் குக்கர் சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிட்டு வென்றார். இதனையடுத்து நடைபெற உள்ள மக்களவை மற்றும் 18 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பொதுச் சின்னமாக குக்கர் சின்னத்தை அமமுக வேட்பாளர்களுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். உச்சநீதிமன்றம் வரை சென்ற டிடிவி தினகரனின் இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அதேசமயம் அமமுகவிற்கு பரிசுப்பெட்டி சின்னத்தை பொதுச் சின்னம் வழங்க […]

Categories
அரசியல்

“ஸ்டாலினுக்கு நோபல் பரிசு வழங்கலாம்” பிரச்சாரத்தில் முதல்வர் பேச்சு….!!

பொய் பேசுவதற்கு மு.க.ஸ்டாலினுக்கு நோபல் பரிசு வழங்கலாம் என்று தமிழக   முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். அதிமுக- பாஜக கூட்டணி சார்பில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் வேட்பாளராக போட்டியிடும் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை ஆதரித்து கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்த வேனில் தேர்தல் பரப்புரை செய்தார். அப்போது பேசிய தமிழக முதலமைச்சர் பழனிசாமி, “மக்களவைத் தேர்தலில் மத்தியில் நிலையான ஆட்சி அமைய வேண்டும். திறமையான பாரத பிரதமரை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். அப்படி திறமையான, […]

Categories
அரசியல் கன்னியாகுமாரி

“தேர்தல் விதிமீறய மத்திய இணையமைச்சர்” பொன்.ராதாகிருஷ்ணன் மீது வழக்குப் பதிவு…!!

கன்னியாகுமரி பா‌ஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் தேர்தல் நடத்தி விதிமீறல் செய்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் கடந்த 30-ஆம் தேதி தக்கலை சுற்றுவட்டாரப் பகுதியில் திறந்த வாகனத்தில் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தேர்தல் பரப்புரை செய்தார். அவருக்கு ஆதரவாக கூட்டணிக் கட்சியினரும் பல வாகனங்களில் வந்து வாக்கு சேகரித்தனர். இதையடுத்து தேர்தல் கண்காணிப்பு குழு அலுவலர் தாஜ் நிஷா எவ்வித முன் அனுமதியுமின்றி கட்சி கொடிகள் கட்டிய 4 மற்றும் 2 சக்கர வாகனங்களில் பொன்.ராதாகிருஷ்ணன் தேர்தல் பரப்புரை செய்ததாக […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“பிரிவினைவாதிகளுகான தேர்தல் அறிக்கை” நிர்மலா சீதாராமன் விமர்சனம்…!!

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை தீவிரவாதிகளுக்கும் , பிரிவினைவாதிகளுக்கும் ஆதரவான தேர்தல் அறிக்கை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்  விமர்சித்துள்ளார். காங்கிஸ் கட்சி நேற்று பாராளுமன்ற தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அந்த தேர்தல் அறிக்கையில், ஆயுதப் படையின் சிறப்பு அதிகாரச் சட்டம் குறித்து மறுபரிசீலனை செய்யப்படும், தேசத்துரோக சட்டம் நீக்கம் , ஜம்மு-காஷ்மீர் மாநிலதலைவர்களுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை  உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் இந்த தேர்தல் அறிக்கை மீது மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார். […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பாராளுமன்ற தேர்தலில் மோதிக்கொள்ளும் ஒலிம்பிக் வீரர்கள்……!!

ராஜஸ்தான் மணிலா ஒரு மக்களவைத் தொகுதியில் முன்னாள் ஒலிம்பிக் வீரர்கள் இருவர் களம் காணுகின்றனர். ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் ஜெய்பூர் கிராமப்புற மக்களவைத் தொகுதியில் முன்னாள் ஒலிம்பிக் வீரர்களாக விளையாடிய ராஜ்யவர்தன் சிங் ராவுதர் (49) மற்றும் கிருஷ்ண பூணியா (36) ஆகியோர் வேட்பாளராக மோதுகின்றனர். ராஜ்யவர்தன் சிங் தற்போது பாஜக கட்சியில் நிர்வாகியாகவும், மத்திய அமைச்சரைவையிலும் இடம்பெற்றுள்ளார்.  இவர் கடந்த 2014_ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் இதே தொகுதியில் காங்கிரஸின் மூத்த தலைவர் ஜோஸியை தோற்கடித்தார். இந்நிலையில் பாஜக சார்பில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரூ 1,76,000,00,00,000 ரொக்கம்….. வேட்பாளரின் அதிரவைக்கும் ஒப்புதல்…..!!

தனது வங்கிக் கணக்கில் 1,76,000 கோடி ரொக்கம் இருப்பதாக  வேட்புமனுவில் பெரம்பூர் இடைத்தேர்தல் வேட்பாளர் ஒப்புதல் அளித்திருப்பது அதிர்ச்சியளித்துள்ளது. பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் ஜே. மோகன்ராஜ் என்ற வேட்பாளர் தான் ‘ஜெபமணி ஜனதா’ என்ற கட்சி சார்பில் போட்டியிடுவதாக வேட்புமனுவில் தெரிவித்திருந்தார். அதில், தன் மனைவியிடம் சுமார் 20 ஆயிரம் ரூபாய் ரொக்கமும், இரண்டு லட்சத்து 50‌ ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 13 சவரன் ‌நகை , மயிலாப்பூர் சவுத் இந்தியன் வங்கியில் சுமார் 3 லட்ச […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“எந்த போனையும் எடுப்பதில்லை” தமிழக தேர்தல் அதிகாரி மீதே புகார்…!!

தமிழக தேர்தல் அதிகாரி எந்த போனையும் எடுப்பதில்லை என்று காங்கிரஸ் கட்சி சார்பில்  சத்ய பிரதா சாகு மீது புகார் அளிக்கப்பட்டது. நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தல் குறித்த ஆலோசனைகள் மேற்கொள்ள தேர்தல்  ஆணைய அதிகாரிகள் நேற்று சென்னை வந்தனர். இதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன் தேர்தல் நடத்த முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்று ஆலோசனை கூட்டம்  தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் தேர்தல் ஆணையர்கள் அசோக் லவசா , சுஷில் சந்திரா மற்றும் தேர்தல் ஆணைய இயக்குனர்கள் திலீப் சர்மா , திரேந்திர ஓஜா ஆகியோர்  […]

Categories
அரசியல்

ஜனநாயகத்தை நம்பும் எங்களுக்கு “பணத்தின் மீது நம்பிக்கை இல்லை” அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி…!!

பணத்தின் மீது நம்பிக்கை இல்லை ஜனநாயகத்தை தான் நம்புகின்றோம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தல் குறித்த ஆலோசனைகள் மேற்கொள்ள தேர்தல்  ஆணைய அதிகாரிகள் நேற்று சென்னை வந்தனர். இந்நிலையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன் தேர்தல் நடத்த முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்று ஆலோசனை கூட்டம்  தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் தேர்தல் ஆணையர்கள் அசோக் லவசா , சுஷில் சந்திரா மற்றும் தேர்தல் ஆணைய இயக்குனர்கள் திலீப் சர்மா , திரேந்திர ஓஜா ஆகியோர்  அரசியல் அக்கட்சி […]

Categories
அரசியல்

பணத்தை இவர்களே வைத்து விட்டு “தேர்தலை நிறுத்த திட்டம்”…. TTV தினகரன் விமர்சனம்…..!!

உளவுத்துறை மூலமாக இவர்களே பணத்தை வைத்து விட்டு தேர்தலை நிறுத்த திட்டமிடுவதாக அமமுக துணை பொதுச்செயலாளர் TTV தினகரன் குற்றசாட்டியுள்ளார். ஊட்டியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தினகரன் , நடைபெற இருக்கும் சட்டமன்ற மற்றும் இடைத்தேர்தலை நிறுத்த வேண்டும் தேர்தலில் தோல்வி அடைந்து விடுவோம் என்ற பயத்த்தால்  வேட்பாளர்கள் வீட்டில் இவர்களே பணத்தை வைத்து  தேர்தல் அதிகாரியை வைத்து பிடிக்க வைத்து தேர்தலை நிறுத்துவதற்கு திட்டமிடுகிறார்கள். துரைமுருகன் வீடு, குடோன், அவரது உதவியாளர் வீடு ஆகிய இடங்களில் சோதனை நடத்தி பணம் எடுத்ததாக […]

Categories
அரசியல்

“பணத்தை நம்பி திமுக” TTV  தினகரன் குற்றசாட்டு…!!

பணத்தை நம்பித்தான் தி.மு.க. தேர்தலில் போட்டியிடுகிறது என்று  டிடிவி தினகரன் விமர்சனம் செய்துள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் TTV தினகரன் தேர்தல் பரப்புரை சென்ற போது  ஊட்டியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது கூறுகையில், வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு கிடைக்கும் தகவலின்படி சோதனை நடத்தினால் தவறு இல்லை. அதே நேரத்தில் திட்டமிட்டு  குறிவைத்து எதிர்க்கட்சி வேட்பாளர்களிடம் வருமான வரித்துறை சோதனை நடைபெறுகின்றது என்கிற எண்ணம் ஏற்படுகின்றது. தி.மு.க.வை தாண்டி ஆளுங்கட்சியினர் பணம் கொடுக்க திட்டமிட்டுள்ளார்கள் என்று எல்லோருக்கும் தெரியும். மக்கள் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை பொய் , பாசாங்கு….. மோடி விமர்சனம்…!!

காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை பொய்களையும் ,  பாசாங்குதனத்தையும் கொண்டது என்று பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். மக்களவை தேர்தல் வருகின்ற 11_ஆம் தேதி முதல் 7 கட்டமாக நடைபெறுகின்றது.இதையடுத்து அரசியல் கட்சிகள் தொடர்ந்து தீவிர பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றனர். இதையடுத்து  அருணாச்சல பிரதேச மாநிலத்தின் கிழக்கு சைங் மாவட்டத்தில் இருக்கும் பசிகாட் என்ற இடத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில் , வடகிழக்கு மாநிலங்களுக்கு காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் உரிய முக்கியத்துவம் […]

Categories
மாநில செய்திகள்

அரசியல் கட்சியினருடன் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது…!!

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தல் குறித்த ஆலோசனைகள் மேற்கொள்ள தேர்தல்  ஆணைய அதிகாரிகள் நேற்று சென்னை வந்தனர். இந்நிலையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன் தேர்தல் நடத்த முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்று ஆலோசனை கூட்டம்  தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் தேர்தல் ஆணையர்கள் அசோக் லவசா , சுஷில் சந்திரா மற்றும் தேர்தல் ஆணைய இயக்குனர்கள் திலீப் சர்மா , திரேந்திர ஓஜா ஆகியோர்  அரசியல் அக்கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொள்கின்றனர். […]

Categories
மாநில செய்திகள்

தேர்தல் ஆணையர்கள் , அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் இன்று ஆலோசனை…..!!

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை மேற்கொள்கிறார். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18-ஆம் தேதி நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. வாக்குப்பதிவு நெருங்கிவிட்ட நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் தேர்தல் அதிகாரிகள் வாக்குப்பதிவு கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று சென்னையில் ஆலோசனை நடத்த உள்ளனர். இதற்காக டெல்லியில் இருந்து தேர்தல் ஆணையர்கள் அசோக் லவசா , […]

Categories
தேசிய செய்திகள்

வாக்குப்பதிவு எந்திரத்தில் குளறுபடி செய்தாவது ஜெயிக்க வேண்டும்….. சிவசேனா எம்.பி சஞ்செய் ராவத் கருத்து…!!

தேர்தல் நடத்தை விதியை மீறியதாக சிவசேனா எம்.பி சஞ்செய் ராவத்திற்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்த மாணவர் சங்க முன்னாள் தலைவர் கன்னையாகுமார் நாடாளுமன்ற தேர்தலில் பீகார் மாநிலத்தில் உள்ள பெகுசராய் பாராளுமன்ற தொகுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.அவருக்கு எதிராக சிவசேனாவின் சாம்னா பத்திரிகையில் ‘ரோக் தோக்’ என்ற தலைப்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கட்டுரை ஓன்று வெளியானது. இதில், கன்னையா குமார் ஒரு விஷம் என்றும் , அவரை கட்டாயமாக நாடாளுமன்றத்துக்குள் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“நீட் தேர்வு இரத்து” விவசாயிகளுக்கு தனி அமைச்சகம்….. அசத்தும் காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை…!!

காங்கிரஸ் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வு இரத்து உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளது.   பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 11_ஆம் தேதி தொடங்குகின்றது. இதனால் அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை தயாரிப்பதற்காக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு தீவிரமாக தேர்தல் அறிக்கையை  தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ராகுல் காந்தி….!!

நாடாளுமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி  வெளியிட்டார். பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 11_ஆம் தேதி தொடங்குகின்றது. இதனால் அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை இன்று வெளியிடுகின்றது. ஏற்கனவே தேர்தல் அறிக்கையை தயாரிப்பதற்காக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு தீவிரமாக தேர்தல் அறிக்கையை  தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைமை […]

Categories
அரசியல் ஈரோடு

“எனக்கு ஒட்டு போடு , இல்லாட்டி போ” ஈரோட்டில் சீமான் பேச்சு….!!

எனது கட்சிக்கு ஓட்டு போட்டால் போடுங்கள் இல்லாவிட்டால் போங்கள் என்று சீமான் ஈரோட்டில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார். தமிழகத்தில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி நடைபெற இருக்கின்றது. தமிழகத்தை பொறுத்தவரை இந்த தேர்தல் 5 முனை போட்டியாக பார்க்கப்படுகின்றது. அதிமுக தலைமையிலான கூட்டணியும் , திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியும் பிரதானமாக மோத இருக்கும் இந்த தேர்தல் களத்தில் அமமுக , மக்கள் நீதி மைய்யம் மற்றும் நாம் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார் ராகுல் …..!!

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை இன்று ராகுல் காந்தி வெளியிடுகிறார் . பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 11_ஆம் தேதி தொடங்குகின்றது. இதனால் அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை இன்று வெளியிடுகின்றது. ஏற்கனவே தேர்தல் அறிக்கையை தயாரிப்பதற்காக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு தீவிரமாக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்ற சூழலில் இன்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் தலைவர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“பணத்துக்கும் எங்களுக்கும் சம்மந்தமில்லை” துரைமுருகன் பேட்டி…..!!

வருமானவரிதுறையினர் சோதனை நடத்தியத்தில் கைப்பற்றிய பணத்துக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தம் இல்லை என்று தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் வீட்டில் இரண்டு நாட்களுக்கு முன்பு மற்றும் நேற்று  வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். மேலும் வேலூரில் உள்ள சிமெண்ட் தொழிற்சாலையில் கட்டுகட்டாக பணம் கைப்பற்றப்பட்டது. மேலும் இது திமுக . பொருளாளர் துரைமுருகன் பணமென்றும் , அவரின் நெருங்கிய நண்பருடைய சிமெண்ட் தொழிற்சாலை என்றும் தகவல் வெளியாகியது. கட்டு கட்டாக இருந்த பணத்தை கைப்பற்றி சென்ற […]

Categories
தேசிய செய்திகள்

“சரத்பவார் பிரதமர் கனவில் இருந்தார்” மோடி விமர்சனம்……!!

ஒரு காலத்தில் சரத் பவார் பிரதமர் ஆக வேண்டுமென்ற கனவில் இருந்ததாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். நாடளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெறுகின்றது. மத்தியில் ஆட்சியை பிடிக்க வேண்டுமென்று பிஜேபி , காங்கிரஸ் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மஹாராஷ்டிரா மாநிலத்தில் பிஜேபியுடன்  கூட்டணி அமைத்து தேர்தலை சந்திகின்றது. இதையடுத்து வேட்பாளர்களை ஆதரித்து வார்தாவில் நேற்று  தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது தொண்டர்களிடம் பேசிய மோடி , காங்கிரஸ் […]

Categories
அரசியல்

“IT துறையின் வளர்ச்சிக்கு திமுக தான் காரணம்” பிரசார கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு…!!

IT துறையின் வளர்ச்சிக்கு திமுக தான் முக்கிய காரணம் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்தார். திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை போட்டியிடுகின்றார். இந்நிலையில் இவரை ஆதரித்து சோழிங்கநல்லூரில் உள்ள கண்ணகி நகரில் நேற்று தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது . இதில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் , திமுக மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் பேசிய முக.ஸ்டாலின் , அனைவரும் படிக்க  வேண்டும் என்று […]

Categories
மாநில செய்திகள்

தலைமை தேர்தல் ஆணையர் இன்று தமிழகம் வருகை….!!

முக்கிய ஆலோசனைகள் நடத்த தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று சென்னை வருகின்றனர். இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் தேர்தல் ஆணையர்கள் அசோக் லவாசா, சுஷீல் சந்திரா ஆகியோர் அடங்கிய குழு இன்று பிற்பகல் சென்னை வருகின்றனர். இந்தக் குழு நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகத்தில் தேர்தல் முன்னேற்பாட்டு பணிகள் குறித்து முக்கிய ஆலோசனைகளை மேற்கொள்ள இருக்கின்றார்கள். மேலும் தமிழகத்தில் உள்ள  அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த கட்சி பிரதிநிதிகளுடன் நாளை (புதன்கிழமை) […]

Categories
பல்சுவை மாநில செய்திகள்

நில்லுங்க..! நில்லுங்க..! போகாதீங்க ? மக்களிடம் கெஞ்சிய அதிமுக_வினர்…. !!

மான்னர்குடியில் முதல்வர் பிரசாரத்திற்கு வந்த போது கூடியிருந்த மக்கள் வீட்டுக்கு கலைந்து சென்றது அதிமுக_வினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது  மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெறுகின்றது. தமிழகத்தில் ஏப்ரல் 18_ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் சூழலில் அதிமுக , திமுக என 5 முனை போட்டியாக தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் முதல்வர் பழனிசாமி மன்னர்குடியில் தேர்தல் பிரசாரம் செய்த போது பொதுமக்கள் கண்டுகொள்ளாமல் சென்றது அதிமுக_வினரிடையே […]

Categories
மாநில செய்திகள்

முதல்வர் மீது செருப்பு வீச்சு…… வைரலாகும் வீடியோ……!!

தஞ்சையில் பிரசாரம் செய்த முதல்வர் மீது செருப்பு வீசிய வீடியோ சமுக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெறுகின்றது. தமிழகத்தில் ஏப்ரல் 18_ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் சூழலில் அதிமுக , திமுக என 5 முனை போட்டியாக தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் அரசியல் கட்சிங்கள் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தஞ்சாவூரில் தேர்தல் […]

Categories
மாநில செய்திகள்

பாதிக்கப்பட்ட மாணவியின் பெயரை வெளிட்ட கோவை SP…… பணியிடை மாற்றம் செய்து அரசு நடவடிக்கை ….!!

பொள்ளாச்சி விசாரணையில்  மாணவியின் பெயரை வெளியிட்ட கோவை SP பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கோவை மாவட்டம் பொள்ளாட்சியில் ஒரு கும்பல் மாணவிகள் மற்றும் இளம்பெண்களை ஏமாற்றி பழகி பாலியல் தொந்தரவு செய்து ஆபாசமாக வீடியோ எடுத்தது சமூக வலைதளத்த்தில் பரவி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.  இதில் ஆளும் அதிமுக அரசியல் பின்புலம் இருப்பதாக பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.  இந்த பாலியல் சம்பவத்துக்கு தமிழகம் முழுவதும் ஒருசேர கண்டனம் எழுந்தது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மேலும் இந்த வழக்கில் 4 பேருக்கு குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள் வைரல்

கட்டுக்கட்டாக பணம்…… வைரலாகும் வீடியோ….. கதறும் திமுக தலைமை….!!

திமுக பொருளாளர் துரைமுருகன் கல்லூரியில் நடைபெற்ற சோதனையில் கட்டுக்கட்டாக பணம் கிடைத்த வீடியோ வெளியாகியுள்ளது. நேற்று முன்தினம் திமுக பொருளாளர் துரைமுருகனின் வேலூர் காட்பாடி இல்லத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். மேலும் அவருக்கு சொந்தமான பண்ணை வீடு , கல்லூரி என இந்த சோதனை தொடர்ந்து நடத்தைப்பெற்றது. மேலும் இந்த சோதனையில் இரண்டு கட்டைப்பையில் ஆவணங்கள் மற்றும் 10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினர் தெரிவித்தனர். இந்நிலையில் இன்று துரைமுருகனின் நண்பரும் திமுக நிர்வாகியுமான சீனிவாஸ் என்பவரின் குடோனில் […]

Categories
தேசிய செய்திகள்

பிரசாரத்துக்கு வந்த தலைவரின் தங்கையிடம்……. தொண்டர்கள் இப்படி செய்யலாமா…?

YSR காங்கிரஸ் கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்த ஜெகன்மோகன் சகோதரியிடம் மோதிரம் திருடப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வருகின்ற ஏப்ரல் 11_ஆம் தேதி ஆந்திர மாநிலத்தில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகின்றது. தேர்தலில் போட்டியிடும் YSR  காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ‌ஷர்மிளா தீவிர பிரசாரம் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று குண்டூரில் YSR காங்கிரஸ் கட்சி தொண்டர்களை ஆதரித்து பிரசாரம் செய்த ஷர்மிளா_வை கான ஏராளமான தொண்டர்கள் திரண்டிருந்தனர். அப்போது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தேர்தல் பயிற்சி முகாம் தீவிரம்..!

திருநெல்வேலி மாவட்டம் குற்றாலம் பகுதியில்  நடைபெற்ற தேர்தல் பயிற்சி முகாம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் குற்றாலம் பகுதியில் தேர்தல் பயிற்சி முகாம் நடைபெற்றது. அந்த பயிற்சி முகாமில்  ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டமாக வரும் 11_ஆம் தேதி தொடங்குகிறது . இந்த தேர்தலின் போது தேர்தல் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கும் முகாம் நடத்தப்பட்டது. தேர்தல் நடத்தை விதிகள் பற்றி பயிற்சி வகுப்பில் வாக்கு இயந்திரங்களை கையாளும் முறை, அதில் ஏற்படும் சிறிய பழுதுகளை எவ்வாறு […]

Categories
அரசியல்

“தமாகா_வுக்கு ஆட்டோ சின்னம்” தேர்தல் ஆணையம் அறிவிப்பு….. !!

தஞ்சை தொகுதியில் போட்டியிடும் தமாகா_விற்கு ஆட்டோ சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக , பாமக , புதிய தமிழகம் , தேமுதிக , புதிய நீதி கட்சி மற்றும்  தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இடம் பெற்றுள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு தஞ்சை பாராளுமன்ற தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அக்கட்சியின் வேட்பாளராக நடராஜன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தஞ்சையில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னத்தை தேர்தல் ஆணையம் […]

Categories
அரசியல்

“அஞ்சா நெஞ்சனும் ஸ்டாலின்” மதுரையில் நடந்த சுவாரஸ்யம்…!!

 திமுக கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக மதுரையில் ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார். மதுரை மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் , மார்க்கெட் , கடை வீதிகள் என நடந்து சென்று தி மு க தலைவர் ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டு வாக்கு சேகரித்தார். அப்போது மார்க்கெட்டில் வணிகர்கள் , மக்களிடம் , கலந்துரையாடிய ஸ்டாலின் பின்னர் அங்கிருந்த கடை ஒன்றில் வேட்பாளருடன் சேர்ந்து குடித்தார். இதையடுத்து அங்கிருந்த ஏராளமான இளைஞர்கள் […]

Categories
அரசியல்

“பணம் என்றால் சவப்பெட்டியில் படுப்பார்கள்” TTV.தினகரன் விமர்சனம்….!!

பணம் என்றால் எடப்பாடி பழனிசாமி சவப்பெட்டியில் படுப்பார் என்று வேலூரில் TTV தினகரன் தெரிவித்துள்ளார். வேலூர் மக்களவை தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பாண்டு ரங்கன் வேட்பாளராக போட்டியிடுகின்றார். இவருக்கு ஆதரவாக அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் TTV.தினகரன் வாக்கு சேகரித்தார். அப்போது  வேலூர் வாலாஜாபேட்டையில் மக்களிடையே பேசும் போது ஆளும் அதிமுக அரசை கடுமையாக விமர்சித்தார். அப்போது அவர் கூறுகையில் , நம்மால் ஆட்சியில் அமர்ந்திருப்பவர்கள் நமக்கு துரோகம் செய்தது மட்டுமில்லாமல் தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்கிறார்கள். அம்மாவின் […]

Categories
அரசியல்

“மதிமுக_வில் உள்ள மா_வை நீக்க வேண்டும்” ஒருமையில் பேசிய முதல்வர்…!!

மதிமுகவில் உள்ள மா_வை நீக்கி விட்டு திமுக என்று மாற்றிக்கொள்ளவும் என தமிழக முதல்வர் விமர்சித்துள்ளார். விழுப்புரம் மக்களவைத் தொகுதி பாமக வேட்பாளர் வடிவேல் ராவணன் ஆதரித்து பிரசாரம் செய்த முதல்வர் பொதுக்கூட்டத்தில் மதிமுக_வை கடுமையாக விமர்சித்தார். அப்போது பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில் , மதிமுக  கட்சியின் ஒரு  சின்னத்தை வைத்துக் கொண்டு அடுத்த கட்சியின் சின்னத்தில் நிற்கிறார் என்றால் அவரெல்லாம் தலைவரா மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் மா_வை நீக்கிவிட்டு திராவிட முன்னேற்ற […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“108 கிலோ தங்கம் பறிமுதல்” தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆய்வு….!!

பறிமுதல் செய்யப்பட்ட 108 கிலோ தங்க நகைகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி தமிழகத்தில் மக்களவை தேர்தலுடன் சேர்த்து 18 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கும் சேர்த்து வாக்குப்பதிவு நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்ததையடுத்து தேர்தல் நடத்தை விதி அமுலுக்கு வந்தது.  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் ஈடுபடுத்தப்பட்டு உரிய ஆவணம் இல்லாமலால் கொண்டு செல்லும் பணத்தை முதலிய பொருட்களை கை பற்றி வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தின் எல்லா இடங்களிலும் காவல்துறையினர் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“சிக்கியது 108 கிலோ தங்கம்” தூத்துக்குடியில் பரபரப்பு….!!

தூத்துக்குடியில் 108 கிலோ தங்கம் கொண்டு சென்ற வண்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி தமிழகத்தில் மக்களவை தேர்தலுடன் சேர்த்து 18 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கும் சேர்த்து வாக்குப்பதிவு நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . மேலும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் நடத்தை விதி அமுலுக்கு வருவதாக தேர்தல் ஆணையம் அறிவித்ததையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றது.தேர்தல் ஆணையம் சார்பில் பணப்பட்டுவாடாவை தடுக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் […]

Categories
அரசியல்

“வேட்புமனு திரும்ப பெற அவகாசம் நிறைவு” தமிழகத்தில் 939 வேட்பாளர்கள் போட்டி…!!

மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் திரும்பப்பெறும் கால அவகாசம் நிறைவடைந்தது. தமிழகத்தில் மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறுகிறது அதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 19ஆம் தேதி தொடங்கி 26 ஆம் தேதி  3 மணி வரை நடைபெற்றது.இந்நிலையில் வேட்பு மனுதாக்கல் நிறைவடைந்த நிலையில் 27ம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது.அதில் அதிமுக திமுக கூட்டணி வேட்பாளர்கள் மக்கள் நீதி மையம் வேட்பாளர்கள் அதிமுக வேட்பாளர்கள் […]

Categories
அரசியல்

“துரோகிகள் ஆட்சி” “டாடி மோடி , மோடியோட டாடி” வந்தாலும் காப்பாற்ற முடியாது…. TTV தினகரன் அதிரடி பேட்டி…!!

அதிமுக_வின் ஆட்சியை இவர்களின்  டாடி மோடி அல்லது மோடியின் டாடியோட டாடி வந்தாலும் காப்பாற்ற முடியாது என்று TTV தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி தமிழகத்தில் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி, அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும் மோதுகின்றன இது தவிர டிடிவி தினகரனின் அமமுக  SDPI கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. அமமுக_த்திற்கு தேர்தல் ஆணையம் பரிசுபெட்டி சின்னத்தை ஒதுக்கியுள்ளது.   இந்நிலையில் ,காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அம்மா மக்கள் […]

Categories
அரசியல்

“அம்மாவின் நினைவாக பரிசுப்பெட்டி சின்னம்” TTV தினகரன் பேட்டி…!!

அம்மாவின் நினைவாக பரிசுபெட்டி சின்னத்தை தேர்வு செய்துள்ளதாக அமமுக துணை பொதுச்செயலாளர் TTV தினகரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி தமிழகத்தில் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி, அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும் மோதுகின்றன இது தவிர டிடிவி தினகரனின் அமமுக  SDPI கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. இரட்டை இலை சின்னம் அதிமுகவிற்கு உறுதி செய்யப்பட்டதால் அமமுக சார்பில் TTV.தினகரன் தங்கள் கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு […]

Categories
அரசியல்

திணறும் OPS ,EPS ….. இந்தியளவில் ட்ரெண்டாகும் பரிசுபெட்டி…. கலக்கிய TTV….!!

அமமுக_வுக்கு பரிசுப்பெட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியத்தை எடுத்து பரிசுப்பெட்டி சின்னம் இந்தியளவில் ட்ரெண்டாகி வருகிறது… நாடாளுமன்ற ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி தமிழகத்தில் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி, அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும் மோதுகின்றன இது தவிர டிடிவி தினகரனின் அமமுக  SDPI கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. இரட்டை இலை சின்னம் அதிமுகவிற்கு உறுதி செய்யப்பட்டதால் அமமுக சார்பில் TTV.தினகரன் தங்கள் கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்ய […]

Categories

Tech |