Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிகாரத்துக்கு வர என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்…. பாஜகவை சீண்டிய நாராயணசாமி …..!!

அதிகாரம் வேண்டுமானால் பாஜகவினர் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்று புதுவை முதல்வர் எச்சரித்துள்ளார். தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று நடைபெற்றது.  இதில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் கொண்டு பேசிய புதுவை முதல்வர் நாராயணசாமி பேசுகையில், CAA சட்டத்தை எதிர்த்து பாஜக கூட்டணியில் உள்ள அகாலிதளம் இந்த சட்டத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று கூறுகிறார்கள். பீகாரில் பாஜக கூட்டணி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எடப்பாடிக்கு 3 விஷயம் சொல்கிறேன் – அறிவுறுத்திய புதுவை முதல்வர் ..!!

CAAவை எதிர்த்து மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் நாராயணசாமி கலந்து கொண்டு பேசினார். தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று நடைபெற்றது.  இதில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் கொண்டு பேசிய புதுவை முதல்வர் நாராயணசாமி பேசுகையில், தமிழ்நாட்டில் ஒரு முதலமைச்சர் இருக்கிறார். மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உங்களுக்கு அதிகாரம் இல்லை…. எங்களுக்கு சொல்லாதீங்க – புதுவை முதல்வர் ஆவேசம் …!!

மதம் குறித்து மோடியோ , அமித்ஷாவோ எங்களுக்கு சொல்லி கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை என புதுவை முதல்வர் தெரிவித்துள்ளார். தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று நடைபெற்றது.  இதில் கலந்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் கொண்டு பேசிய புதுவை முதல்வர் நாராயணசாமி பேசுகையில், இந்த நாட்டில் 7 யூனியன் பிரதேசங்கள் இருக்கின்றன. புதுச்சேரி மற்றும் டெல்லியில் சட்டமன்ற உள்ள யூனியன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக பாஜகவுக்கு முட்டு கொடுக்கின்றது – நாராயணசாமி விமர்சனம் …!!

CAA சட்டம் நிறைவேற்ற அதிமுக பாஜகவுக்கு முட்டு கொடுத்துள்ளது என்று நாராயணசாமி விமர்சித்துள்ளார். தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று நடைபெற்றது.  இதில் கலந்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் கொண்டு பேசிய புதுவை முதல்வர் நாராயணசாமி பேசுகையில் , CAA சட்ட மசோதா மக்களவை நிறைவேற்றி மாநிலங்களவைக்கு வந்தபோது அதற்கு பெரும்பான்மை இல்லாத நேரத்தில் அதிமுக உறுப்பினர்கள் முட்டுக் கொடுத்து பாராளுமன்ற மேலவையில் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

மன்னிப்பு கேளுங்க…. ஜெயிலுக்கு போயிருவீங்க…. EPSயை விளாசிய ஸ்டாலின் …!!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டுமென்று முக.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றது.  இதில் கலந்து கொண்டு பேசிய திமுக தலைவர் மு.க ஸ்டாலின் , அதிமுகவை கடுமையாக விமர்சித்தார். NPR கணக்கெடுப்பை தமிழகத்தில் நடத்த அனுமதிக்க கூடாது என்று நான் சட்டமன்றத்திலே கேட்டேன். குடியுரிமை சட்டத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் வராது என்று முதலவர் எடப்பாடி பழனிச்சாமி […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

சபாஷ் நண்பா, அப்படி வாங்க… இது தான் தனி வழி ….. கைகோர்த்த கமல் …!!

டெல்லி வன்முறை குறித்து நடிகர் ரஜினிகாந்த் கருத்துக்கு கமல் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார். சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில்  நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் , டெல்லி வன்முறைக்கு  மத்திய அரசு உளவுத்துறையின் தோல்வியே காரணம்.நான் பாஜகவில் ஊதுகுழல் என்கிறார்கள். மதத்தை வைத்து அரசியல் செய்வது வன்மையாக கண்டிக்கின்றேன். அறவழியில் போராடலாம் , ஆனால் போராட்டம் வன்முறையாக மாறக்கூடாது .வன்முறையை ஒடுக்கவிட்டால் ராஜினாமா செய்யுங்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் பாஜகவை கண்டித்து பேசியுள்ளார். […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

இது கூரான கத்தி…. பதம் பார்க்கும்…. பசி தீராது…. முக.ஸ்டாலின்  கண்டனம் …!!

மதமும் , ஜாதியும்  இரு கூரான கத்திகள் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றது.  இதில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் , புதுச்சேரி முதலமைச்சர் ராமசாமி இந்து ராம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதில் பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின் கூறுகையில் , மதமாக இருந்தாலும் சரி , சாதியாக இருந்தாலும் சரி அது இரண்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முஸ்லீம் மக்களுக்கு பாதிப்பு…. எடப்பாடி ஒப்புதல் வாக்குமூலம் ….. ஸ்டாலின் விமர்சனம் …!!

CAA , NPR சட்டத்தால் மக்களுக்கு பாதிப்பு இருக்கின்றது என்று முதல்வர் ஒப்புதல் அளித்ததாக முக.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றது.  இதில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் , புதுச்சேரி முதலமைச்சர் ராமசாமி இந்து ராம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதில் பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின், குடியுரிமை சட்டத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் வராது என்று முதலவர் எடப்பாடி […]

Categories
அரசியல் சற்றுமுன்

இந்துக்களுக்காக அவதாரம் எடுத்தவர்கள் எங்கே ? முக.ஸ்டாலின் கேள்வி …!!

இந்துக்களை பாதுகாக்க பிறந்தவர்கள் என்று சொல்பவர்கள் எங்கே சென்றார்கள் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றது.  இதில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் , புதுச்சேரி முதலமைச்சர் ராமசாமி இந்து ராம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதில் பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின், குடியுரிமை  சட்டத்திற்க்கெதிரான போராட்டம் என்பது முஸ்லீம் மக்களுக்கானது அல்ல. இந்தியர்களை கக்கூடிய  போர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

குடியுரிமை போராட்டம் : இந்தியர்களை பாதுகாக்கக்கூடிய போர் – முக.ஸ்டாலின் கருத்து …!!

குடியுரிமை சட்ட போராட்டம் என்பது இந்தியர்களை பாதுகாக்கக்கூடிய போர் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றது.  இதில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் , புதுச்சேரி முதலமைச்சர் ராமசாமி இந்து ராம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதில் பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின் , இது முஸ்லீம் மக்களுக்கான பிரச்சினை மட்டும் அல்ல. ஒட்டு மொத்த நாட்டு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : ”ராஜினாமா செய்யுங்கள்” பாஜக மீது பாய்ந்த ரஜினிகாந்த் …!!

டெல்லி வன்முறை சம்பவம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் மத்திய அரசை கண்டித்துள்ளார். சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில்  நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் , டெல்லி வன்முறைக்கு  மத்திய அரசு உளவுத்துறையின் தோல்வியே காரணம். போராட்டத்தை மத்திய அரசு இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் . ட்ரம்ப் போன்ற தலைவர்கள் வரும் நேரத்தில் போராட்டத்தை மத்திய அரசு கட்டுப்படுத்தி இருக்க வேண்டும். நான் பாஜகவில் ஊதுகுழல் என்கிறார்கள். நான் உண்மையை சொல்கிறேன். […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ரூ.15,00,000 கொடுத்தேன்…. ”மகன் தேர்ச்சி பெற வேண்டும்”….. நீட் முறைகேட்டில் அதிர்ச்சி ….!!

நீட் தேர்வு ஆள்மாறாட்டம் செய்ய 15 லட்சம் கமிஷன்  இடைத்தரகருக்கு கொடுத்தத்த்தாக மாணவர் தனுஷ் குமார் தந்தை தெய்வேந்திரன் தெரிவித்துள்ளார். கடந்த 2018ல் மருத்துவ படிப்பில் சேர்ந்த தனுஷ் குமார் என்ற மாணவர் பீகாரில் இந்தி மொழியில் நீட் தேர்வு எழுதியுள்ளார். இந்தி தெரியாத மாணவர் பீகாரில் நீட்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றதையடுத்து சந்தேகம் அடைந்த கல்லூரி முதலவர் பூக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.  இதையடுத்து மோசடி , கூட்டுசதி ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்திலும் தீர்மானம்…. EPSயின் திடீர் முடிவால் பாஜக அதிர்ச்சி ….!!

தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமுல்படுத்தப்பபோவதில்லை என்ற தீர்மானம் பரிசீலனையில் உள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் உட்பட்ட போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. கடந்த 3 நாட்கள் நடைபெற்று வரும் வன்முறையில் இதுவரை 20க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 160க்கும் அதிகமானோர் வன்முறையால் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழ்நாட்டிலும் வண்ணாரப்பேட்டையில் CAAக்கு எதிரான போராட்டம் நடைபெற்று வருகின்றது. இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில் , தமிழ்நாட்டைப் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : குரூப் 1 முறைகேடு ? -சிபிஐ விசாரணை கோரி திமுக வழக்கு …!!

குரூப் 1 தேர்வு முறைகேட்டை சிபிஐ விசாரிக்க உத்தரவிட கோரி உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. குரூப்-1 தேர்வில் முறைகேடு புகாரை மத்திய குற்றவியல் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு விசாரணையை சிபிஐ விசாரிக்க உத்தரவிட கோரி சேனனி உயர்நீதிமன்றத்தில் திமுக அமைப்பு செயலாளர் RS பாரதி வழக்கு தொடர்ந்துள்ளது. அதில் குறிப்பிட்ட சில பயிற்சி நிறுவனங்களில் படித்தவர்கள் அதிக அளவில் தேர்ச்சி அடைந்து இருப்பதாகவும், அந்த பயிற்சி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக எங்களுக்கு தருவாங்க….. நம்பிக்கையுடன் காத்திருக்கின்றோம் – பிரேமலதா விஜயகாந்த் …!!

நாடாளுமன்ற ராஜ்யசபா உறுப்பினர் இடம் அதிமுக கொடுக்கும் என்று நம்புகின்றோம் என்ற பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற ராஜ்யசபா உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற இருக்கின்றது. இதில் அதிமுக சார்பில் தேமுதிகவுக்கு இடம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்தநிலையில் சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்த பிரேமலதா கூறுகையில், முதலில் கூட்டணி அமைக்கும் போது தெரிவித்திருந்தோம். கூட்டணி தர்மத்தை என்றைக்கும் கேப்டனும் , நாங்களும் கடைபிடிக்கிறோம். முதலமைச்சரும் உறுதியாக கூட்டணி தர்மத்தை மதிப்பார் என்று நம்புகின்றோம். ராஜ […]

Categories
சினிமா மாநில செய்திகள்

முஸ்லீம் மக்களுக்கு சின்ன பிரச்சனை வந்தாலும் முதல் ஆளாக தேமுதிக இருக்கு – பிரேமலதா விஜயகாந்த்

இஸ்லாமியர்களுக்கு பிரச்சனை என்றால் முதல் ஆளாக தேமுதிக களமிறங்கும் என்று அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் உட்பட்ட போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. கடந்த 3 நாட்கள் நடைபெற்று வரும் வன்முறையில் இதுவரை 20க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 160க்கும் அதிகமானோர் வன்முறையால் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தேமுதிகவின் பொருளாளர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், இந்தியாவின் பாதுகாப்பு மிக முக்கியம் அதை […]

Categories
மாநில செய்திகள்

குடும்பத்தோடு எடப்பாடியை சந்தித்த கருணாஸ் …!!

திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் திரு.கருணாஸ் அவர்கள் தனது 50-வது பிறந்தநாளையொட்டி சந்தித்து வாழ்த்து பெற்றதோடு, காவிரி டெல்டா பகுதிகளை “பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்” ஆக அறிவித்து அதனை சட்டமாக நிறைவேற்றி தந்தமைக்காக நன்றியும் தெரிவிந்து கொண்டர்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் மருத்துவமனையில் அனுமதி …!!

க.அன்பழகன் ஒரு தமிழக அரசியல்வாதி ஆவார். தமிழக அமைச்சரவையில் நிதி அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். திராவிடக் கொள்கையில் பற்று கொண்ட இவர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆரம்ப காலம் முதல் முக்கியப் பங்கு வகிக்கின்றார். இவர் 1977 முதல் திமுகவின் பொதுச் செயலாளராக உள்ளார். கடந்த சில வருடங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டிருந்த க.அன்பழகன் அரசியல் நிகழ்வுகளில் பங்கேற்காமல் ஓய்வெடுத்து வந்தார்.இந்நிலையில் திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் உடல்நலக்குறைவு காரணமாக தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் திமுகவினர் கவலையடைந்துள்ளனர். இவருக்கு 97 வயது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

மோடி – ட்ரம்ப் நிகழ்ச்சியில் ஏன் பங்கேற்கவில்லை – முதல்வர் விளக்கம் …!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இரண்டுநாள் பயணமாக இந்தியா வந்தார். சமர்பதி ஆசிரமம் சென்ற ட்ரம்ப் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அமெரிக்கா அதிபர் வருகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக சொல்லப்படும் நிலையில் நாளை வரை அமெரிக்க அதிபர் இந்தியாவில் இருக்கின்றார். இந்நிலையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிச்சாமி கோவையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம்  மோடி – […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அவரு ஒரு ஆளு கிடையாது….. நாங்க வட்டி செலுத்தி வருகின்றோம் – முதல்வர் பழனிச்சாமி

திமுக ஆட்சிக்காலத்தில் வாங்கிய கடனுக்கு நாங்கள் வட்டி செலுத்திக் கொண்டு இருக்கின்றோம் என்று முதல்வர் தெரிவித்தார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் , தாழ்த்தப்பட்ட மக்களை மிகவும் தரக்குறைவாக பேசிய திமுகவின் RS பாரதி ஊடகங்கத்தையும்  மிக அவதூறாக விமர்சனம் செய்தார்.   அதை ஊடகம் கண்டுகொள்ளவில்லை. 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் தான் இறுதி முடிவெடுக்க வேண்டும்.திமுக […]

Categories
மாநில செய்திகள்

கோவை, சென்னை சிறப்பு : இரவிலும் பெண்கள் செல்லலாம் – முதல்வர்

தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பாக இருக்கலாம் , இரவிலும் செல்லலாம் என்று முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளர். இன்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில் , ஜெயலலிதா பிறந்தநாள் மாநில பெண்கள்  குழந்தை பாதுகாப்பு நாளாக அறிவிக்கப்பட்டு, இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் இரவு நேரங்களில் பெண்கள் அச்சமின்றி பாதுகாப்பு செல்ல முடிகின்றது. தமிழகத்தின் பெண்கள் பாதுகாப்பில் சிறந்த நகரமாக சென்னை மற்றும் கோவை திகழ்கிறது.சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு […]

Categories
மாநில செய்திகள்

போராட்டம் நடத்தலாம்…. அனுமதி கொடுப்போம்….. கட்டுப்படுத்த மாட்டோம் …. முதல்வர் உறுதி …!!

இது ஜனநாயக நாடு என்பதால் போராட்டம் செய்வதற்கு உரிமை உண்டு, போராட்டத்தை கட்டுப்படுத்துவது என்று கிடையாது என்று முதல்வர் தெரிவித்துள்ளார். இன்று  கோவையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், குடியுரிமை திருத்த சட்டத்தால் எந்த ஒரு சிறுபான்மை இன மக்களும் அச்சப்பட தேவையில்லை. அதிமுக ஆட்சிக்கு இடையூறு செய்ய வேண்டும் என்பதற்காக பொய்யான தகவலை திமுகவினர் பரப்பி வருகின்றனர். அரசின் திட்டங்களுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்ததால் திமுக தலைவர் மு க […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : டெல்லி வன்முறையில் காவலர் உயிரிழப்பு …!!

டெல்லி வன்முறை சம்பவத்தில் தலைமை காவலர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. டெல்லியில் யமுனா விஹார் என்ற பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராடுபவர்களுக்கும் , குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக இருப்பவர்களுக்குமிடையே ஏற்பட்ட மோதலில் இந்த வன்முறை நிகழ்ந்துள்ளது.   யமுனா விகார் […]

Categories
அரசியல்

அத்தைகளுக்கு ஆபத்து…! ஆபத்து….! CPIM மூத்த தலைவர் கருத்தால் சர்ச்சை…..!!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் அருணன் ட்விட்டரில் பதிவிட்ட கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான பேராசிரியர் அருணன் மேற்குவங்க பாஜக தலைவரை கிண்டலடித்தும்,  விமர்சித்தும் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், இந்திய பசுக்கள் அனைத்தும் நமக்கு தாய். வெளிநாட்டு பசுக்கள் அனைத்தும் நமக்கு அத்தை. இந்திய பசுக்களை தாய்போல் கருதி பேணி பாதுகாத்து வளர்க்க வேண்டியது நமது கடமை. வெளி நாட்டு பசுக்களான   அத்தைகளை […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.10,00,000 தாரேன்…. தலையை வெட்டுங்க…. கொல்லுங்க …. ஸ்ரீராம் சேனா அறிவிப்பு …!!

பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட மாணவியின் தலைக்கு 10 லட்சம் நிர்ணயம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 20ஆம் தேதி AIMIM கட்சி சார்பாக நடந்த போராட்டத்தில் மேடையில் பேசுவதற்காக வந்த மாணவி ஒருவர் மேடையில் ஏறியதும் பாகிஸ்தான் வாழ்க என்று முழக்கமிட்டார். இது பெரும் சர்ச்சையை  ஏற்படுத்தியது. இதையடுத்து கைது […]

Categories
தேசிய செய்திகள்

நாங்கள் அனுப்பியிருக்க மாட்டோம்’ – கண்கலங்கவைக்கும் வீடியோ …!!

திருப்பூர்-அவினாசி சாலை பேருந்து விபத்தில் உயிரிழந்த ஜோஃபி பால்லின் கண்கலங்கவைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த 20ஆம் தேதி பெங்களூருவில் இருந்து கொச்சி நோக்கிச் சென்ற கேரள அரசு சொகுசு பேருந்து திருப்பூர் மாவட்டத்தின் அவினாசி அருகே சரக்கு லாரியுடன் மோதி விபத்தானது.இதில் 19 பேர் உயிரிழந்தனர். 25 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்த 19பேரில் ஒருவரான  கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த ஜோஃபி பாலு பெங்களூருவில் உள்ள ஜோய் […]

Categories
தேசிய செய்திகள்

இது குளிர்காலம்…. சிலிண்டர் விலை உயர்வுக்கு.. அமைச்சரின் புது விளக்கம் ….!!

குளிர்காலம் என்பதால் எரிவாயு சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். பெட்ரோல், டீசல் விலை தினமும் மாற்றியமைப்பதை போல சமையல் எரிவாயு சிலிண்டர் விலையையும் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன.  மாதந்தோறும் மாற்றிய அமைக்கப்படும் சிலிண்டர் எரிவாயு விலை நடந்து முடிந்த தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவடையும் வரை ( அதாவது 2019 டிசம்பர், 2020 ஜனவரி வரை )  2 மாதங்கள் விலை உயரவில்லை. தேர்தல் முடிந்ததும் சமையல் […]

Categories
மாநில செய்திகள்

எனக்கு ஒட்டு போடுங்க….. ”நான் இந்திய குடிமகன் கிடையாது”…. சீமான் பரபரப்பு பேச்சு ….!!

நான் இந்திய குடிமகனாக இருக்க விரும்பவில்லை என சீமான் அறிவித்த்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்ட மசோதாவுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் நடைபெற்று வரும் போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். கோவையில் நடைபெற்று வரும் போராட்டத்தில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார். அவர் பேசியதில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முஸ்லிம்களை நாங்கள் விடமாட்டோம் – திருமாவளவன் ஆவேசம் …!!

முஸ்லீம் மக்களை தனிமை படுத்த விடுதலை சிறுத்தைகள் விடாது என திருமாவளவன் உறுதியளித்துள்ளார். நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருச்சியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தேசம் காப்போம் என்ற முழக்கத்தில் பேரணி நடைபெற்றது. இதில் அக்கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்  பங்கேற்றார்.இதில் குடியுரிமை சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு , தேசிய குடியுரிமை பதிவேடு ஆகியவற்றை இரத்து செய்ய வேண்டும், இட ஒதுக்கீடு உரிமை பாதுகாத்திட வேண்டும்  என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பின்னர் பேசிய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அது ஒரு மிஸ்டு கால் கட்சி…. ”மிஸ்டு கால் தலைவரை தேடுது”…. தெறிக்கவிட்ட வீரமணி …!!

பாஜக ஒரு மிஸ்டு கால் கட்சி என்பதால் தமிழ்நாட்டில் அக்கட்சிக்கான மிஸ்டு கால் தலைவரை தேடுவதாக திராவிடர் கழகத் தலைவர் கீ.வீரமணி  விமர்சித்துள்ளார். திருவாரூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற திராவிடர் கழகத் தலைவர் கீ.வீரமணி செய்தியாளர்களை சந்தித்த போது , மோடியை விமர்சித்தால் ஸ்டாலினால் முதல்வராக முடியாது என பா.ஜ.கவின் முரளிதர ராவ் கூறியுள்ளது, தன்னுடைய பதவியை தக்கவைத்துக் கொள்ள என்று குற்றம் சாட்டினார். மேலும் பாஜகவை கடுமையாக சாடிய அவர் ,தமிழ்நாட்டில் தலைவரை நியமனம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”இம்ரான்கானின் கைக்கூலி ஸ்டாலின்” வெளுத்து வாங்கிய பாஜக ….!!

பாகிஸ்தான் பிரதமரின் கைப்பாவையாக முக.ஸ்டாலின் செயற்படுகின்றார் என்று பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ் குற்றம் சாட்டியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாற்றுக் கட்சிகளில் உள்ளவர்கள் அங்கிருந்து விலகி பாஜகவில் இணையும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றதது. இதில் வீரப்பனின் மூத்த மகள் வித்யா ராணி, பா.மாக_வின் முன்னாள் மாவட்ட செயலாளர்கள் சிவகுமார் , மீசை அர்ஜூனன் உள்ளிட்டோர்  பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ் , முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் தங்களை பாஜகவில் இணைத்துக் கொண்டனர். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒரே போடு… ”ரஜினிக்கு ரிவிட் அடித்த சீமான்” இது எப்டி இருக்கு?

தூத்துக்குடியில் அருணா ஜெகதீசன் ஆணையத்தில் ரஜினி விசாரணைக்கு ஆஜராகாதது குறித்து சீமான் விமர்சித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற ஸ்டெர்லைட் போராட்டத்தில் சமூக விரோதிகளின் ஊடுருவியுள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரித்து வரும் அருணா ஜெகதீசன் ஆணையம் ரஜினியின் தெரிவித்த கருத்து குறித்து விசாரிப்பதற்காக நாளை மறுநாள் பிப்ரவரி 25ஆம் தேதி தூத்துக்குடியில் உள்ள அலுவலகத்தில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியது . ஆனால் ரஜினி தரப்பில் நேரில் ஆஜரானால் […]

Categories
அரசியல்

அரசியல் வேண்டாம்….. வனவாசம் போறேன்…. ஸ்டாலினுக்கு சவால் …!!

CAAவால் இஸ்லாமியர் பாதிக்கப்படுவார்கள் என ஸ்டாலின் நிரூபித்தால் நான் வனவாசம் செல்ல தயார் என்று பாஜகவின் முரளிதர ராவ் சவால் விடுத்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாற்றுக் கட்சிகளில் உள்ளவர்கள் அங்கிருந்து விலகி பாஜகவில் இணையும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றதது. இதில் வீரப்பனின் மூத்த மகள் வித்யா ராணி, பா.மாக_வின் முன்னாள் மாவட்ட செயலாளர்கள் சிவகுமார் , மீசை அர்ஜூனன் உள்ளிட்டோர்  பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ் , முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் […]

Categories
உலக செய்திகள்

ஜனாதிபதியின் திடீர் தீர்மானம்…. கலங்கிய 60 உறுப்பினர்கள்…!!

நாடாளுமன்றத்தை கலைக்க தீர்மானம் எடுத்திருப்பதாக கோட்டபாய ராஜபக்ஷ அறிக்கை வெளியிட்டுள்ளார் மார்ச் மாதம் 2ஆம் தேதி நாடாளுமன்றத்தை கலைக்க தீர்மானம் எடுத்திருப்பதாக இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிக்கை வெளியிட்டுள்ளார். நாடாளுமன்றம் ஆரம்பித்து ஐந்து வருடங்கள் முடிவதற்கு முன்னரே அதனை கலைப்பதால் உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் பெறும் வாய்ப்பு பறிபோகும் நிலை உருவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து 60 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். மே மாதம் 12ஆம் தேதி புதிய நாடாளுமன்றம் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

மைதானத்தை டிரம்ப் திறக்கலை…. திடீர் மாற்றம் ஏன் ? வெளியுறவுத்துறை விளக்கம் …!!

அகமதாபாத் வரும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மோதேரா மைதானத்தை திறந்து வைக்கப்படுவதில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் பெருமைகளில் ஒன்றாக இணைய உள்ள அகமதாபாத் மோதேரா கிரிக்கெட் மைதானத்தை  கிரிக்கெட் மைதானத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திறந்து வைக்கப் போவதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. 2 நாள் அரசு முறை பயணமாக திங்கட்கிழமை இந்தியா வரும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பிரதமர் மோடியுடன் இணைந்து மோதேராமை தானத்தை பார்வையிட மட்டுமே செய்வார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அத்துடன் […]

Categories
மாநில செய்திகள்

துரத்தும் தூத்துக்குடி… மிரளும் ரஜினி …. ஹேஷ்டேக் ட்ரெண்ட்டால் ரசிகர்கள் அதிர்ச்சி …!!

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரித்து வரும் அருணா ஜெகதீசன் ஆணையம் முன்பு ஆஜராவதிலிருந்து நடிகர் ரஜினிகாந்துக்கு விலக்கு கோரியிருக்கிறார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் சமூக விரோதிகளின் ஊடுருவியுள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்திருந்தார்.இந்நிலையில் துப்பாக்கிச் சூடு குறித்து விசாரித்து வரும் அருணா ஜெகதீசன் ஆணையம் ரஜினியின் கருத்து குறித்து விசாரிப்பதற்காக பிப்ரவரி 25ஆம் தேதி தூத்துக்குடியில் உள்ள அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பியது . ஆனால் ரசிகர்கள் ஆஜரானால் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்து , […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : டெல்டா வேளாண் மண்டலம் – அரசிதழில் வெளியீடு …!!

காவேரி டெல்டா பகுதியை வேளாண் மண்டலமாக சட்டப்பேரவையில் நிறைவேற்றபட்ட மசோதா அரசிதழில் சட்டமாக வெளியிடப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து முதலமைச்சர் வெளியிட்டிருந்தார். அதை தொடர்ந்து காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த சட்டமுன்பதிவு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதனால் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் சட்டமாக இயற்றப்பட்டதை தொடர்ந்து இந்த சட்டமசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த நிலையில் இது  சட்டமாக  அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

BREAKING : பெட்ரோலிய மண்டலம் – அரசானை ரத்து ….!!

கடலூர் நாகை மாவட்டங்களில் அமைய இருந்த பெட்ரோலிய மண்டல அரசாணையை தமிழக அரசு ரத்து செய்து இருக்கின்றது. காவேரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ , கார்பன் உள்ளிட்டதிட்டங்களுக்கு அனுமதி கொடுக்காமல் இருக்க இந்த பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து , விவசாயத்தை மேன்படுத்த வேண்டுமென்று டெல்டா பகுதி விவசாயிகள் நீண்ட ஆண்டு காலமாக கோரிக்கை முன்வைத்து வந்தனர். இதனை கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழக அரசு சட்டமாக இயற்றி தஞ்சையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது. […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மோடியுடன் சந்திப்பு…. ”யு டர்ன் அடித்த சிவசேனா”…. கூட்டணிக்குள் உரசல் …!!

மஹாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா , காங்கிரஸ் கூட்டணிக்குள் உரசல் முற்றியுள்ளது. மத்திய அரசு கொண்டுவந்த CAA , NPR , NRC ஆகிய சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் இஸ்லாமிய மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக அவர்களுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் ஆதரவு குரல் எழுப்பி வருகின்ற நிலையில் , பல்வேறு மாநிலங்களில் இந்த சட்டமசோதாவுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்றப்பட்ட்டுள்ளது. சிவசேனா தலைமையிலான காங்கிரஸ் , தேசியவாத காங்கிரஸ் கூட்டணிஆட்சி நடந்து வரும் மகாராஷ்டிரா மாநிலத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் அதே கோஷம்…. ”சிக்கிய மற்றொரு மாணவி”….. பெங்களுருவில் பரபரப்பு …!!

பாகிஸ்தான் ஜிந்தாபாத் எனக் கோஷமிட்ட அமுல்யாவிற்கு எதிராக பெங்களுருவில் நடந்த போராட்டத்தில் மற்றொரு மாணவியும் அதே கோஷமிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நேற்று AIMIM கட்சி சார்பாக நேற்று போராட்டம் நடைபெற்றது. இதில் AIMIM கட்சி தலைவர் ஒவைசி பங்கேற்றார்.அப்போது மேடையில் பேசுவதற்காக வந்த அமுல்யா என்ற மாணவி ஒருவர் […]

Categories
தேசிய செய்திகள்

‘பாகிஸ்தான் வாழ்க’ கோஷமிட்ட மாணவி…… ஆப்பு வைத்த நீதிமன்றம் …!!

ஓவைசி தலைமையில் நடத்தப்பட்ட CAA எதிர்ப்பு கூட்டத்தில் ‘பாகிஸ்தான் வாழ்க’ என்று கோஷமிட்ட மாணவிக்கு 14 நாள்கள் நீதிமன்ற காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நேற்று AIMIM கட்சி சார்பாக நேற்று போராட்டம் நடைபெற்றது. இதில் AIMIM கட்சி தலைவர் ஒவைசி பங்கேற்றார்.அப்போது மேடையில் பேசுவதற்காக வந்த மாணவி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு” முக.ஸ்டாலின் ட்வீட் …!!

தாய்மொழி தின வாழ்த்துக்கள் சொல்லும் வகையில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார். உலகில் வாழும்  அனைத்து மக்களின் மொழி உரிமையைப் பாதுகாக்க 21ஆம் தேதி பிப்ரவரி மாதம் 1999-ம் ஆண்டு முதல் சர்வதேச தாய்மொழி நாள் என்று யுனெஸ்கோ அறிவித்தது. உலக அமைதியை நிலைநாட்டவும் , பன்மொழிப் பயன்பாட்டை முன்னேற்றவும், பன்முகப் பண்பாடுகளைப் போற்றவும், உலகில் உள்ள அனைத்துத் தாய்மொழிகளையும் பாதுகாக்க உலக தாய்மொழி நாள் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் தனது ட்வீட்டர் […]

Categories
அரசியல் சென்னை மாவட்ட செய்திகள்

மதிய உணவுத்திட்டம்…… காங்கிரஸ்…. திமுக…. அதிமுக….. அப்ப கூட அப்படி இல்ல…. கனிமொழி வேதனை….!!

சென்னை  லயோலா கல்லூரியில் பேசிய திமுக MP கனிமொழி மதிய உணவுத்திட்டம் தனியார்மயமாக்கப்படுவதற்கு வேதனை தெரிவித்துள்ளார். சென்னை லயோலா கல்லூரியில் நேற்றையதினம் நடைபெற்ற கருத்தரங்கில் திமுக எம்பி கனிமொழி கலந்துகொண்டு சகிப்புத் தன்மையில் இருந்தும், மரியாதையில் இருந்தும் அமைதி பிறக்கிறது என்ற தலைப்பில் பேசினார். அப்போது பேசிக்கொண்டிருந்த அவர் தனியார்மயமாதல் குறித்து கருத்து ஒன்றைத் தெரிவித்தார். அதில் தற்போது மத்தியில் இருக்கும் அரசு ரயில்வே உள்ளிட்ட பொதுத் துறைகளை தனியாருக்கு தாரைவார்த்து வருகிறது. அந்தவகையில், தற்போது தமிழகத்தில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இஸ்லாமியர்களின் அரணாக அதிமுக செயல்படும் – OPS , EPS கூட்டறிக்கை ..!!

சிறுபான்மை மக்களின் நம்பிக்கை அரணாக அதிமுக அரசு விளங்கும் என்று OPS , EPS கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். சிறுபான்மை மக்களுடைய பாதுகாப்பு அரணாக அதிமுக விளங்கும் என்பதை வலியுறுத்தக் கூடிய வகையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் , இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் கூட்டாக அறிக்கை மூலமாக தெளிவு படுத்தி இருக்கின்றார்கள். குறிப்பாக இஸ்லாமிய மக்களுக்கு மறைந்த முதல்வர் எம்ஜிஆர் காலம் முதல் இப்போது வரை பல்வேறு நன்மைகளை செய்து அதிமுக அரசு விளங்குவதாகவும் , தமிழக முதலமைச்சர் எடப்பாடி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி …!!

திமுக பொருளாளர் துரைமுருகன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளார். திமுகவின் மூத்த தலைவர்களின் ஒருவராகவும் , கட்சியின் பொருளாளராகவும் இருப்பவர் துரைமுருகன். இவர் அதிகமாக உணர்ச்சிவசப்படடுவார். அவருக்கு இருதய தொந்தரவு இருப்பதால் அவ்வப்போது மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருவார் இருக்கிறது.கடந்த ஜூன் மாதம் மற்றும் நவம்பர் மாதத்தில் கூட உடல்நலத்தில் ஏற்பட்ட பிரச்சனைக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார் . இந்நிலையில் தற்போது ஏற்பட்ட தீடீர் உடல்நலக்குறைவால் நெஞ்சுவலி ஏற்பட்டு சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை […]

Categories
தேசிய செய்திகள்

”பாகிஸ்தான் வாழ்க” இளம் பெண்ணுக்கு நக்சலைட்டுக்களுடன் தொடர்பு – எடியூரப்பா

கர்நாடகாவில் பாகிஸ்தான் வாழ்க என இளம்பெண்ணை அமுல்யாவுக்கு நக்சலைட் உடன் தொடர்பு இருப்பதாக முதலமைச்சர் எடியூரப்பா குற்றம்சாட்டியுள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் AIMIM கட்சித் தலைவர் ஓவைசி தலைமையில் நடைபெற்ற CAA எதிர்ப்புப் போராட்டத்தில் அமுல்யா என்ற இளம்பெண் பாகிஸ்தான் வாழ்க என்று முழக்கம் எழுப்பினார். இதனால் மேடையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த ஒவைஸி இளம் பெண் அமுல்யாவுக்கும் , AIMIM கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கூறினார். […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

BREAKING : ”அரிசிக்கு பதில் பணம் – ஆளுநர் உத்தரவு செல்லும்” நீதிமன்றம் அதிரடி …!!

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அரிசிக்குப் பதில் பணம் வழங்க அங்குள்ள துணை நிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவு செல்லும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரியில் இலவச அரிசிக்கு பதிலாக பணம் கொடுக்க துணைநிலை ஆளுநர் ஒரு உத்தரவை பிறப்பித்திருந்தார். ஆளுநரின் உத்தரவை எதிர்த்து முதல் அமைச்சர் நாராயணசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் , மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞ்சர் இந்த வழக்கை தாக்கல் செய்ததற்கு முதல்வருக்கு அடிப்படை உரிமை கிடையாது என்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING : ”விஜய் வந்தால் ஏற்போம்” காங்கிரஸ் கட்சி திடீர் அழைப்பு …!!

நடிகர் விஜய் தமிழக காங்கிரஸ் கட்சியின் இணைந்தால் ஏற்றுக் கொள்வோம் என்று கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். பிகில் படம் தொடர்பாக நடிகர் விஜய் வீட்டில் நடத்தப்பட்ட வருமானவரித்துறை சோதனை அரசியல் ரீதியாக பல்வேறு கருத்துக்களை எழுப்பிய நிலையில், ரஜினி எதிர்ப்பு , விஜய் ஆதரவு என்ற சூழ்நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வந்தது. ரஜினி கூறக்கூடிய கருத்து அனைத்துக்கும் எதிர்ப்பு  தெரிவித்து வந்தார் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி. அதே போல நடிகர் விஜயிடம் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : TNPSC முறைகேடு – ”சிபிஐ விசாரணை” பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு ….!!

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடுகள் பற்றிய வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றுவது குறித்து பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்திருக்கிறது. மதுரை மேலூரை சேர்ந்த ஸ்டாலின் என்பவர் , மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் 2017- 18 ஆண்டில் குரூப் 2 தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.அந்த வழக்கில் சென்னை சேர்ந்த கவிதா என்பவர் ஜாமீன் கோரி வழக்கு தொடர்ந்தபோது அவருடைய மனுவில் இந்த வழக்கு தொடர்புடைய வேறு சிலரின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மோடியும், ட்ரம்ப்பும் ஒரு தாய் பிள்ளைகள் – சீமான் விமர்சனம் …!!

அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் வருகை குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்  இந்தியா வர இருக்கிறார். வருகின்ற பிப்ரவரி 24 , 25 இல் இரண்டு நாட்கள் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். 2015ஆம் ஆண்டு இந்தியா வந்தார் ஒபாமா. அதற்கு பிறகு ஐந்து ஆண்டுகள் கழித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் வர இருப்பதால் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுப்பதற்காக குஜராத் தயாராகியிருக்கிறது. அங்கு இருக்கக்கூடிய மோடேரா […]

Categories

Tech |