Categories
அரசியல் மாநில செய்திகள்

வாக்காளர்களுக்கு நன்றி “அரவக்குறிச்சி சென்ற ஸ்டாலின்” புதுமண தம்பதிக்கு ஆசிர்வாதம்..!!

 திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க அரவக்குறிச்சி சென்ற போது அங்கு புதுமண தம்பதிக்கு ஆசிர்வாதம்  வழங்கினார். சமீபத்தில் நடந்து முடிந்த  மக்களவை தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்பட 38 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது. அதுமட்டுமில்லாமல் சட்ட பேரவை  இடைத்தேர்தலிலும் திமுக 13 தொகுதிகளை கைப்பற்றியது. திமுக கைப்பற்றிய தொகுதிகளில் கட்சியில் தன்னை இணைத்து கொண்ட செந்தில் பாலாஜி போட்டியிட்ட அரவக்குறிச்சி தொகுதியும் ஒன்றாகும். இந்த நிலையில், வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்க்கு தி.மு.க. […]

Categories
அரசியல்

அதிமுக செய்தி தொடர்பாளர்கள் ஊடகங்களை சந்திக்க தடை..!!

அதிமுக செய்தி தொடர்பாளர்கள் மறு அறிவிப்பு வரும் வரை எந்த ஒரு கருத்தையும்  ஊடகங்களில் தெரிவிக்க வேண்டாம் என்று அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது    அதிமுக கட்சி நிர்வாகிகள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின்  தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டம் முதல்வர் இபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் அதிமுக எம்பி, எம்.எல்.ஏ க்கள் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.  இக்கூட்டத்தில் நடந்து முடிந்த தேர்தல் தோல்வி, உட் கட்சியின் பிரச்சனை, கட்சிக்கு ஒற்றை தலைமை வேண்டும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சிரித்துக் கொண்டே போனோம் , சிரித்து கொண்டே வந்தோம்…. ராஜேந்திர பாலாஜி பேட்டி…!!

எப்படி சிரித்துக்கொண்டு உள்ளோ போனோமோ அப்படியே சிரித்துக் கொண்டு வெளியே வந்தோம் என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் தோல்வி குறித்தும் , நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல் குறித்தும் , கட்சியின் தலைமை உள்ளிட்ட பல்வேறு விவகாரம் குறித்து விவாதிப்பதற்காகசென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக  கட்சியின்  தலைமையகத்தில்   முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இதில் அதிமுகவின்  மாவட்ட  செயலாளர்கள், MLA-க்கள் , MP_க்கள் மற்றும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“முழுமையாக ஒதுக்கிவிட்டார்கள்” அதிமுகவில் இணைந்த ராதாரவி பேட்டி..!!

திமுகவில் என்னை முழுமையாக ஒதுக்கிவிட்டார்கள் என்று எண்ணியதால் நான் கட்சியிலிருந்து விலகிவிட்டேன் என்று நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார்  கடந்த ஏப்ரல் மாதம் கொலையுதிர் காலம் பட விழாவில் பங்கேற்று பேசிய ராதாரவி, நடிகை நயன்தாரா பேயாகவும் நடிக்கிறார், சீதையாகவும் நடிக்கிறார் என்றும், “இப்போது பார்த்தவுடன் கும்பிடத் தோன்றுபவர்களும்,பார்த்தவுடன் கூப்பிடத்தோன்றுபவர்களும் நடிக்கலாம்” என்று நயன்தாராவை விமர்சித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதற்கு விக்னேஷ் சிவன், தமிழ் திரையுலகினர் மற்றும் திமுக தலைவர் முக ஸ்டாலினும் சமூக வலைத்தளங்களில் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவிற்கு  ஒற்றை தலைமை பிரச்சினை இல்லை…அமைச்சர் ஜெயக்குமார் கருத்து…!!

அதிமுகவில் ஒற்றை தலைமை என்பது ஒரு பிரச்சினையே இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா செய்தியாளர்களிடம் அதிமுகவின் தலைமை குறித்து கடுமையாக விமர்சனம் செய்தார். குறிப்பாக அதிமுகவிற்கு ஜெயலலிதா போல ஒற்றைத்தலைமை வேண்டும். தற்போதைய நிலையில் அதிமுகவின் அதிகாரம் யாரிடம் இருக்கின்றது என்று அடுக்கடுக்கான விமர்சனங்களை முன்வைத்தார். MLA  ராஜன் செல்லப்பா_வின் இந்த கருத்துக்கு சில MLA _க்களின்  ஆதரவையடுத்து அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டடு அதிமுக_வின் தலைமை அனைத்து தொண்டர்களுக்கும் […]

Categories
அரசியல்

அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் 5 தீர்மானம் நிறைவேற்றம்..!!

அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த அக்கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில்  5 தீர்மானம் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் அதிமுக கட்சி நிர்வாகிகள் கூட்டம் அக்கட்சியின்  தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. முதல்வர் இபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ் தலைமையில் நடந்த  இக்கூட்டத்தில் அதிமுக எம்பி, எம்.எல்.ஏ க்கள் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.  இக்கூட்டத்தில் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி, உட்க்கட்சியின் பிரச்சனை, கட்சிக்கு ஒற்றை தலைமை வேண்டும், பொது குழுவை கூட்டுவது தொடர்பாக விவாதிக்கப்படும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒன்றரை மணி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“செல்போனுக்கு அனுமதியில்லை” கட்டுப்பாடுடன் முடிந்தது அதிமுக ஆலோசனை கூட்டம்..!!

அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளும் அதிமுகவினருக்கு  செல்போன் கொண்டு செல்ல கட்டுப்பாடு விதிக்கப்பட்ட்து. நடந்து முடிந்த மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தலில் அதிகப்படியான இடங்களில் தோல்வியுற்ற அதிமுக அதிஷ்டவசமாக ஆட்சியை தக்க வைத்துக்கொண்டது. இதையடுத்து அதிமுகவில் தலைமை குறித்து பல்வேறு நிர்வாகிகள் , சட்டமன்ற உறுப்பினர்கள் கருத்து கூற ஆரம்பித்தார்கள். அதிமுகவிற்கு ஒரு தலைமை வேண்டும் என்ற கோரிக்கையை அதிமுக MLA தொலைக்காட்சியில் பேட்டி முதற்கொண்டு அளிக்க தொடங்கினார்கள்.   இதனால் அதிமுகவில் சலசலப்பு […]

Categories
அரசியல்

“அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நிறைவு” உள்ளாட்சி தேர்தலை சிறப்பாக எதிர்கொள்ள நடவடிக்கை..!!

சென்னையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை சிறப்பாக எதிர்கொள்ள வேண்டுமென கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  சென்னை ராயப்பேட்டையில் உள்ள  தலைமை அலுவலகத்தில் அதிமுக கட்சி நிர்வாகிகள் கூட்டம்  நிறைவு பெற்றுள்ளது. அதிமுக எம்பி, எம்.எல்.ஏ க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்ற, இக்கூட்டத்தில் மக்களவை தேர்தலில் ஏற்பட்ட படு தோல்வி, உட்க்கட்சி பிரச்சனை, கட்சியின் ஒற்றை தலைமை மற்றும் பொது குழுவை கூட்டுவது தொடர்பாக விவாதிக்கப்படும் என்று   முன்னதாக தகவல் வெளியானது. இந்நிலையில் ஒன்றரை மணி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“அதிமுக ஆலோசனை கூட்டம்” அமைச்சர் , MLA என 6 பேர் பங்கேற்கவில்லை…!!

அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் சட்டமன்ற உறுப்பினர் கூட்டத்தில்  அமைச்சர் உட்பட 6 பேர் பங்கேற்கவில்லை. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமையகத்தில் அக்கட்சியினரின் நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் அதிமுகவின் தோல்விகள் குறித்தும் ,   கட்சியின் தலைமை விவகாரம் மற்றும் பொதுக்குழுவை கூட்டுவது பற்றிய பல்வேறு முடிவுகள் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.இந்த கூட்டத்தில் அதிமுக_வின் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் என மொத்தம் 6 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“திமுகவில் இருந்து நீக்கம்” அதிமுகவில் இணைந்த ராதாரவி..!!

நடிகர் ராதாரவி திமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார்  கடந்த ஏப்ரல் மாதம் கொலையுதிர் காலம் பட விழா நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்று பேசிய ராதாரவி, நடிகை நயன்தாரா பேயாகவும் நடிக்கிறார், சீதையாகவும் நடிக்கிறார் என்றும், “இப்போது பார்த்தவுடன் கும்பிடத் தோன்றுபவர்களும்,பார்த்தவுடன் கூப்பிடத்தோன்றுபவர்களும் நடிக்கலாம்” என்று நயன்தாராவை சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதற்கு விக்னேஷ் சிவன், தமிழ் திரையுலகினர் மற்றும் திமுக தலைவர் முக ஸ்டாலினும் சமூக வலைத்தளங்களில் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து ராதாரவி திமுக அடிப்படை […]

Categories
அரசியல்

எடப்பாடியாரே! அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்க வாருங்கள்.! பரபரப்பை கிளப்பிய போஸ்டர்..!!

 அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்க வாருங்கள் எடப்பாடியாரே என்று போஸ்டர் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது  சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில்  அதிமுக கட்சி நிர்வாகிகள் கூட்டம் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் அதிமுக எம்பி, எம்.எல்.ஏ க்கள் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். இக்கூட்டத்தில் மக்களவை தேர்தலில் ஏற்பட்ட தோல்வி, உட்க்கட்சி பிரச்சனை, கட்சியின்  தலைமை, பொது குழுவை கூட்டுவது தொடர்பாக விவாதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக கட்சிக்கு ஒற்றை தலைமை தேவை என்று […]

Categories
அரசியல்

அதிமுக நிர்வாகிகள் கூட்டம்…. “உடல்நலம்” காரணமாக குன்னம் எம்.எல்.ஏ பங்கேற்கவில்லை…!!

சென்னையில் இன்று நடைபெறும் அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் குன்னம் எம்.எல்.ஏ ஆர்.டி.ராமச்சந்திரன் உடல் நலம் காரணமாக பங்கேற்கவில்லை. சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று அதிமுக கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட தோல்வி, உட்க்கட்சி பிரச்சனை கட்சியின்  தலைமை, பொது குழுவை கூட்டுவது தொடர்பாக விவாதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இக்கூட்டத்தில் அதிமுக எம்பி, எம்.எல்.ஏ க்கள் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். இந்நிலையில் சென்னையில் இன்று நடைபெறும் அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

“ராகுல் பிறந்த போது உடனிருந்த நர்ஸ்” வைரலாகும் புகைப்படம்…!!

ராகுல் காந்தி பிறந்த போது மருத்துவமனையில் தன்னுடனிருந்த பெண் செவிலியரை சந்தித்து பேசிய போட்டோ வைரலாகி வருகின்றது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி 3 நாள் பயணமாக கேரள மாநிலத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வயநாடுக்கு வருகை தந்துள்ளார். மேலும் முதல் நாள் நடைபெற்ற ராகுல் பயணத்தில் அக்கட்சியின் தொண்டர்களுடன் பேரணியாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். பின்னர் வயநாட்டின் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள எம்.பி.க்கான அறைக்கு வந்த ராகுல் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதில் கேரள மாநில […]

Categories
அரசியல் தூத்துக்குடி மாநில செய்திகள்

அதிமுக பிரச்சினை வெடித்து வெளியே வர ஆரம்பித்துள்ளது… கனிமொழி பேட்டி …!!

அதிமுகவில் உள்ள பிரச்சினைகள் வெடித்து வெளியே வர ஆரம்பித்துள்ளது என்று தூத்துக்குடி MP கனிமொழி கூறியுள்ளார். அதிமுகவிற்கு ஒற்றை தலைமை வேண்டுமென்று அதிமுகவின் MLA தங்களது கருத்துக்களை கூறி வருவது அதிமுகவிற்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அதிமுக தலைமை கட்சி விவகாரங்களை பொதுவெளியில் பேச வேண்டாம் என்று கட்சி நிர்வாகிகளை வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி கூறுகையில் , அதிமுகவில் உள்ள பிரச்சினைகள் வெடித்து வெளியே வர ஆரம்பித்துள்ளன என்றார். தொடர்ந்து […]

Categories
அரசியல்

கட்சி குறித்து பொதுவெளியில் பேசக்கூடாது …..ஓபிஎஸ் இபிஎஸ் கண்டனம் ..!!

கட்சி குறித்து பொதுவெளியில் பேசுவதை தவிர்க்க வேண்டும் என்று ஓபிஎஸ் இபிஎஸ் கூட்டாக சேர்ந்து அறிக்கை வெளியிட்டுள்ளனர் . நாடாளுமன்ற தேர்தலுக்குப் பின் அதிமுகவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின இதனைத் தொடர்ந்து அதிமுகவில் அவ்வப்போது சலசலப்பு ஏற்பட்டு அதிமுக பின்னடைவை சந்தித்து வந்தது. இதற்கு காரணம் இரட்டை தலைமைதான் என்றும் அதனால் ஆலோசனை உடனடியாக எடுப்பதற்கு தாமதம் ஏற்படுவதாகவும் அதனால் அதிமுக பின்னடைவை சந்தித்து வருவதாகவும் அதிமுக வட்டாரங்கள் தெரிவித்து வந்தன. இதனை தொடர்ந்து அதிமுகவிற்கு […]

Categories
அரசியல்

“இபிஎஸ்,ஓபிஎஸ் தலைமை” சிறப்பாக செயல்படும் அதிமுக – திண்டுக்கல் சீனிவாசன்..!!

கட்சியும், ஆட்சியும் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தலைமையில் சிறப்பாக செயல்படுகிறது என்று அமைச்சர்  திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.  நாடாளுமன்ற தேர்தலுக்குப் பின் அதிமுகவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து அதிமுகவில் அவ்வப்போது சலசலப்பு ஏற்பட்டு அதிமுக பின்னடைவை சந்தித்து வந்தது. இதற்கு காரணம் இரட்டை தலைமைதான் என்றும், இரட்டை தலைமையால் முடிவுகள் எடுப்பதில் பிரச்சனைகள் ஏற்படுவதாகவும்  அதிமுக எம்எல்ஏக்கள் பேசத் தொடங்கினர். மேலும் அதிமுகவுக்கு ஒரே தலைமை தேவை என்று மதுரை வடக்கு தொகுதி எம்எல்ஏ ராஜன் செல்லப்பா தெரிவித்தார். […]

Categories
அரசியல்

“ஜூன் 12ல் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் “அதிமுக தலைமைக்குழு அறிவிப்பு ..!!

ஜூன் 12 ஆம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அதிமுக தலைமைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது . நாடாளுமன்ற தேர்தலுக்குப் பின் அதிமுகவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து அதிமுகவில் அவ்வப்போது சலசலப்பு ஏற்பட்டு அதிமுக பின்னடைவை சந்தித்து வந்தது. இதற்கு காரணம் இரட்டை தலைமைதான் என்றும், இரட்டை தலைமையால் முடிவுகள் எடுப்பதில் பிரச்சனைகள் ஏற்படுவதாகவும்  அதிமுக வட்டாரங்கள் தெரிவித்து வந்தன. இதனை தொடர்ந்து அதிமுகவிற்கு  ஜெயலலிதாவைப் போல் ஆளுமைத் திறன் […]

Categories
அரசியல்

“ஓ.பி.எஸ் செயல் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது “அ.தி.மு.க எம்.எல்.ஏ குற்றச்சாட்டு ..!!!

ஓபிஎஸ் தனது மகனுக்காக பதவி கேட்டதாக வெளியான தகவல் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என்று எம்.எல்.ஏ ராமசந்திரன் குற்றம் சாட்டியுள்ளார் . அதிமுகவில் முதல்வர்,  துணை முதல்வர்  என இரட்டை தலைமையால் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனால் அதிமுக பின்னடைவை சந்தித்து வருகிறது என்று எம்எல்ஏ ராஜன்செல்லப்பா நேற்று பத்திரிகையாளர்களிடம் குற்றம் சாட்டும் வகையில் கூறியுள்ளார்.     இதனை தொடர்ந்து அதிமுகவிற்கு தற்போது ஒற்றை தலைமை மிக அவசியம்  என்று அவர் கூறிய கருத்துக்கு பலரும் ஆதரவு […]

Categories
தேசிய செய்திகள்

பா.ஜ.க VS திரிணாமுல் மோதலில் 4 பேர் பலி…. மேற்கு வங்கத்தில் நீடிக்கும் பதற்றம்…!!

பா.ஜ.க மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் இடையே ஏற்பட்ட மோதல் 4 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. நடைபெற்ற மக்களவை தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு சரிக்கு சமமாக பாஜக வென்றதையடுத்து அங்கே தொடர் வன்முறை அரங்கேறி வருகின்றது. அங்குள்ள 24 பர்கானாஸ் மாவட்டம் கந்தேஷ்கலி என்ற இடத்தில் பா.ஜ.க சார்பில் வைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பம் மற்றும் பதாகைகளை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் அகற்றியதாக கூறப்படுகின்றது. இதனால் நேற்று இரவு இரு தரப்புக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இருவருக்கும் முற்றிய […]

Categories
அரசியல் திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“சசிகலா சிறையில் இருந்து வந்தாலும் வீட்டுக்குத்தான் போக வேண்டும்” அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்..!!

சிறையில் இருந்து வந்தாலும் சசிகலா வீட்டுக்குத்தான் செல்ல வேண்டும் என்று அதிமுக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.  ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுகவை சசிகலா கைப்பற்றினார். இதையடுத்து அவர் சொத்துகுவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டார். இதை தொடர்ந்து  ஏற்பட்ட குழப்பத்தால்  இரு அணிகளாக செயல்பட்டு வந்த  இ.பி.எஸ் ஓ.பி.எஸ் இருவரும் ஓன்று சேர்ந்து டி.டி.வி  தினகரனை அ.தி.மு.கவிலிருந்து விலக்கினர். அதிமுகவில் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட டி.டி.வி  தினகரன் தனியாக அமமுக என்ற கட்சியை ஆரம்பித்து வழிநடத்தி வருகிறார். இந்நிலையில் சிறையில் […]

Categories
அரசியல்

“தலைவர் பதவிக்கு சரியான நபரை தேர்ந்தெடுக்க வேண்டும் “காங்கிரஸ் மூத்த தலைவர் அறிவுரை ..!!

தலைவர் பதவியில் இருந்து விலக முடிவு செய்தால் சரியான நபரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி அறிவுரை வழங்கியுள்ளார். நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இந்நிலையில் தோல்விக்கான பொறுப்பை ஏற்று பல மாநிலங்களில் பல அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களுக்கான தலைவர் பதவியை ராஜினாமா செய்து கொண்டனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தோல்விக்கான பொறுப்பை ஏற்று தலைவர் பதவியில் இருந்து விலக […]

Categories
மதுரை மாநில செய்திகள்

“எய்ம்ஸ் அமைக்கும் பணியில் தொய்வு இல்லை” அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி..!!

எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணியில் எவ்வித சுணக்கமும் இல்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசின் ஒப்புதலுடன் ரூ.1,264 கோடி ஒதுக்கியதை _ யடுத்து மதுரை தோப்பூரில் அதற்க்கான பணி நடைபெற்று வருகிறது. எவ்வித சுணக்கமுமின்றி தொடரும்  பணியையும் , எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள இடத்தையும் ஆய்வு செய்வதற்காக வருகின்ற 10_ஆம் தேதி முதல் 15_ஆம் தேதி வரை டெல்லி மற்றும் ஜப்பானில் இருந்து 8 பேர் கொண்ட தொழில்நுட்ப குழுவினர் வர இருக்கின்றது. மேலும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு மாநில […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“மோடியின் முதல் வெளிநாட்டு பயணம்” வெளியுறவுத் துறை அறிவிப்பு…!!

இரண்டாவது  முறையாக பிரதமராக  பொறுப்பேற்றுள்ள மோடி மேற்கொள்ள இருக்கும் முதல் வெளிநாட்டு பயணத்தை வெளியுறவுத் துறை செயலாளர் வெளியிட்டுள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் மிகப்பெரிய வெற்றிப் பெற்ற பாஜக ஆட்சி அமைத்து பிரதமர் மோடி இந்தியாவின் பிரதமராக தொடர்ந்து இரண்டாவது முறையாக பதவி பிரமாணம் செய்து  கொண்டார். இந்நிலையில் 2வது முறையாக பிரதமராக பதவி ஏற்ற பிறகு பிரதமர் மோடி மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு பயணத்தின் திட்டத்தை வெளியுறவு செயலாளர் விஜய் கோகலே வெளியிட்டுள்ளார். அதில் பிரதமர் மோடி  […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“முழுமையாக காலியாகும் காங்கிரஸ்” தெலுங்கானா அரசியலில் பரபரப்பு..!!

தெலுங்கானா மாநிலத்தில் 12 காங்கிரஸ் கட்சி MLA_க்கள் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியுடன் இணைவதாக செய்தி  வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி 88 தொகுதிகளில் வெற்றி ஆட்சி செய்து வருகின்றது.சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அம்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் உத்தம் குமார் ரெட்டி, நல்கொண்டா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மக்களவையில் வெற்றிபெற்றதால் MLA_வாக இருந்த அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.இதனால் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் பலம் 18 ஆக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முதல்வர் தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்…!!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள், தேர்தல் பொறுப்பாளர்கள்  பங்கேற்ற  ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை மற்றும் சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி நல்ல வெற்றியை பெற்றது. 22 சட்டசபை இடைதேர்தலில் திமுக 13 இடங்களிலும் , அதிமுக 09 இடங்களிலும் வென்றது. அதே போல மக்களவையில் ஒரு தொகுதியில் மட்டும் அதிமுக கூட்டணியும் , 37 இடங்களில் திமுக கூட்டணி அசுர வெற்றி பெற்றது. சட்டமன்ற தேர்தல் வெற்றியால் அதிமுக […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“தமிழ் மக்களின் உண்மையான தலைவர் கருணாநிதி” ராகுல் காந்தி ட்வீட் …!!

தமிழ் மக்களின் உண்மையான தலைவர் கருணாநிதி என்று ராகுல் காந்தி ட்வீட் செய்து கருணாநிதியின் பிறந்தநாளை நினைவு கூர்ந்துள்ளார். ஜூன் 3_ஆம் தேதியான இன்று தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் , திமுகவின் தலைவருமான  கருணாநிதியின் பிறந்தநாள் தமிழகம் முழுவதும் திமுக_வினர் சார்பில் கொண்டாடப்படுகின்றது. அந்த வகையில் 96-வது பிறந்தநாளை முன்னிட்டு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் அவரது சிலைக்கும், நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினர். இந்நிலையில் கருணாநிதியின் பிறந்தநாளை நினைவு கூறும் வகையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழ் மக்களின் உண்மையான பிரதிநிதி கருணாநிதி….. காங்கிரஸ் புகழாரம்….!!

கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி தமிழ் மக்களின் உண்மையான பிரதிநிதி கருணாநிதி என்று இந்திய தேசிய காங்கிரஸ் புகழ்துள்ளது. ஜூன் 3_ஆம் தேதியான இன்று தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் , திமுகவின் தலைவருமான  கருணாநிதியின் பிறந்தநாள் தமிழகம் முழுவதும் திமுக_வினர் சார்பில் கொண்டாடப்படுகின்றது. அந்த வகையில் 96-வது பிறந்தநாளை முன்னிட்டு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் அவரது சிலைக்கும், நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினர். இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளை பல்வேறு மாநில முதல்வர்களும் , அரசியல் கட்சியினரும் நினைவு கூர்ந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“கருணாநிதியின் 96_ஆவது பிறந்த நாள்” முக.ஸ்டாலின் மரியாதை …!!

திமுக தலைவர் கருணாநிதியின் 96_ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட நிர்வாகிகள் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதையை செலுத்தினர். ஜூன் 3_ஆம் தேதியான இன்று தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் , திமுகவின் தலைவருமான  கருணாநிதியின் பிறந்தநாள் தமிழகம் முழுவதும் திமுக_வினர் சார்பில் கொண்டாடப்பட்டுகின்றது. அந்த வகையில் 96-வது பிறந்தநாளை முன்னிட்டு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் அவரது சிலைக்கும், நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினர். அதே போல சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞரின் சிலைக்கு மு.க.ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக M.L.A , M.P மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது …..!!

திமுக தலைவர் முக.ஸ்டாலின் தலைமையில் எம்பிக்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. ஜூன் 3_ஆம் தேதி திமுக எம்பிக்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் வைத்து திமுக தலைவர்  மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என்று கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் கடந்த வாரம் அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் திமுக பொருளாளர் துரைமுருகன், டி.ஆர்.பாலு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் திமுக_வின் மாவட்டச் […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

“8 வழிச்சாலை திட்டம்” மத்திய அரசின் மேல் முறையீட்டு மனு இன்று விசாரணை….!!

8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக சென்னை உயர்நீதி மன்றம் விதித்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வருகின்றது. மத்திய அரசு கொண்டு வந்த பாரத்மாலா என்ற திட்டத்தின் கீழ் சென்னை முதல் சேலம் வரை 276 கிலோ மீட்டர் தொலைவிற்கு சுமார் ரூ.10 ஆயிரம் கோடி செலவிவு செய்து 8 வழி சாலை அமைக்கும் திட்டம் முடிவு செய்யப்பட்டது.  இந்த திட்டத்தை செயல்படுத்த சேலம், தர்மபுரி, காஞ்சீபுரம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள சுமார் […]

Categories
அரசியல் கல்வி

“பாஜக கனவில் கூட நினைத்து பார்க்கக் கூடாது “ஸ்டாலின் எச்சரிக்கை ..!!

மும்மொழி கல்வித் திட்டத்தை பாஜக கனவில் கூட நினைத்து பார்க்கக்கூடாது எச்சரிக்கை  மு.க.ஸ்டாலின் விடுத்துள்ளார் . கல்விக் கொள்கையை முற்றிலுமாக தனியாரிடம் தாரை வார்க்கும் புதிய கொள்கைகளை கஸ்தூரிரங்கன் குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்து வருகிறது. இந்த பரிந்துரையை ஏற்க கூடாது என பல்வேறு தரப்பினர்  கூறி வருகின்றனர். மத்திய அரசு கொண்டு வரும் இந்த புதிய கல்விக் கொள்கையானது இருமொழிக் கொள்கையை  தவிர்த்து மும்மொழி கொள்கையை வலியுறுத்தி கட்டாயமான முறையில் முன்மொழிகிறது. இந்நிலையில் திராவிட […]

Categories
அரசியல் கல்வி

“நேருவின் வாக்குறுதியை காப்பாற்றுங்க ” வைரமுத்து வேண்டுகோள் ..!!

நேருவின் வாக்குறுதியை காப்பாற்ற வேண்டும் என்று மத்திய அரசிற்கு கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார் . கல்விக் கொள்கையை முற்றிலுமாக தனியாரிடம் தாரை வார்க்கும் புதிய கொள்கைகளை கஸ்தூரிரங்கன் குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்து வருகிறது. இந்த பரிந்துரையை ஏற்க கூடாது என பல்வேறு தரப்பினர்  கூறி வருகின்றனர். இந்நிலையில் கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார். ஹிந்தி பேசாத மக்கள் ஹிந்தி மொழியை கற்றுக்கொள்ள விரும்பும் வரை மொழித் திணிப்பை செய்யமாட்டோம் […]

Categories
தேசிய செய்திகள்

சோனியா காந்தி நாடாளுமன்ற குழு தலைவராக தேர்வு..!!

டெல்லியில் நடந்த கூட்டத்தில் சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் மக்களவை தேர்தலில் 52 தொகுதியில் மட்டும் வென்று காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்து. இதையடுத்து ராகுல் காந்தி தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக முன்வந்தார். ஆனால் காங்கிரஸ் காரிய கமிட்டி இதனை நிராகரித்து, ராகுலுக்கு கட்சியின் கட்டமைப்பை முழுவதுமாக மாற்றியமைக்க அதிகாரம் அளித்தது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை எம்.பி.க்களின் முதல் கூட்டம் டெல்லியில் உள்ள நாடாளுமன்ற மைய அறையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“வெறும் 30 % பெற்ற பாஜக” மக்களவையில் எப்படி வென்றது….காங்கிரஸ் தலைவர் கேள்வி..!!

உள்ளாட்சியில் 30 சதவீதம் வென்ற பாஜக மக்களவையில் எப்படி வெற்றி பெற்றிருக்க முடியுமென்று காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் கேள்வியெழுப்பியுள்ளார் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான 353 இடங்களை கைப்பற்றி தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை கைப்பற்றியது. பல்வேறு மாநிலங்களில் பாஜக முழுமையான வெற்றியை பெற்றது. அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள 28 நாடாளுமன்றத் தொகுதிகளில் பாஜக 25 இடங்களை கைப்பற்றியது. அம்மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் ஆட்சி செய்து கொண்டு இருக்கின்ற சூழலில் பாஜகவின் இந்த […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

கர்நாடகாவில் “மக்களவை முடிவை புரட்டி போட்ட உள்ளாட்சி” காங்கிரஸ் 509 , பிஜேபி 366 …..!!

கர்நாடகாவில் மக்களவை தேர்தலில் படு தோல்வி அடைந்த காங்கிரஸ் உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அரசின் ஆட்சி நடைபெற்று வருகின்றது. சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 28 நாடாளுமன்றத் தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணியான மதசார்பற்ற ஜனதா தளம் தலா ஒரு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.பாஜக 25 இடங்களையும் அதன் ஆதரவு சுயேச்சை ஒரு இடத்தையும் கைப்பற்றினர்.மக்களவைத் தேர்தல் தோல்வியை அடுத்து […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பாராளுமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி தேர்வு

பாராளுமன்ற காங்கிரஸ் கட்சியின் குழு தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் வெற்றிபெற்று காங்கிரஸ் கட்சி சார்பில் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட மக்களவை எம்.பி.க்களின் முதல் கூட்டம் டெல்லியில் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் உள்ள 52 மக்களவை எம்.பி.க்களுடன் சேர்த்து  மாநிலங்களவை எம்.பி.க்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர். பாராளுமன்ற வளாகத்தில் நடைபெறுகின்ற  இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற குழு தலைவர் பொறுப்புக்கு சோனியா காந்தியின் பெயரை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“மக்களவையின் காங்கிரஸ் தலைவர்” தொடங்கியது M.P_க்கள் கூட்டம்…!!

மக்களவையின் காங்கிரஸ் கட்சி தலைவரை தேர்வு செய்யும் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகின்றது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் வெற்றிபெற்று காங்கிரஸ் கட்சி சார்பில் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட மக்களவை எம்.பி.க்களின் முதல் கூட்டம் டெல்லியில் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்று வருகின்றது. இந்தக் கூட்டத்தில்காங்கிரஸ் கட்சியின் சார்பில் உள்ள 52 மக்களவை எம்.பி.க்களுடன் சேர்த்து  மாநிலங்களவை எம்.பி.க்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர். இந்தக் கூட்டத்தின்போது மக்களவையில் காங்கிரஸ் கட்சியின் தலைவரை காங்கிரஸ் கட்சியின் MP_க்கள் தேர்வு செய்கின்றனர். இதில் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெறுகின்ற  இந்தக் கூட்டத்தில், வரும் பாராளுமன்ற  கூட்டத் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“மத்திய அமைச்சரவையில் அதிமுகவுக்கு 2 இடம்” அமைச்சர் பேட்டி ..!!

மத்திய அமைச்சரவையில் அதிமுகவை சேர்ந்த 2 பேர் இடம்பெற்ற வாய்ப்புள்ளதாக அமைச்சர் பாண்டியராஜ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மோடியின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள பல்வேறு மாநில முதல்வர்கள் , ஆளுநர்கள் பங்கேற்றனர். இந்த சூழலில் தமிழகத்தில் பாஜகவின் கூட்டணி கட்சி அதிமுக என்பதால் தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வரும் டெல்லி சென்றனர். அதிமுக_விற்கு அமைச்சரவையில் இடம் கிடைக்குமென எதிர்பார்க்கப்பட்ட சுழலில் அதிமுக_விற்கு இடமில்லாமலே அமைச்சரவை பொறுப்பேற்றது. தமிழகத்தில் அதிமுக கூட்டணியின் பாஜக இடம்பெற்று தேனி மக்களவை […]

Categories
மாநில செய்திகள்

 மத்திய அரசு பொதுத்துறையில் “தமிழருக்கே வேலை” சட்டம் இயற்ற வைகோ வேண்டுகோள்..!!

 மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் 100% பணிவாய்ப்பு கிடைக்க சட்டம் இயற்ற வேண்டுமென்று வைகோ தெரிவித்துள்ளார். நாளுக்கு நாள் படித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் வேலையில்லா திண்டாட்டமும் சேர்ந்தே வாட்டி வதக்கி வருகின்றது.இதனால் படித்த மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் செய்வதறியாது தவிக்கும் நிலையில் தமிழகத்தில் உள்ள மத்திய அரசு பணியிடங்களில் வட மாநிலத்தவர்களை பணியில் அமர்த்துவது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து தமிழக அரசியல் கட்சிகள் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

கேரள முதல்வருக்கு ராகுல் கடிதம்….!!

வயநாடு மக்களவை தொகுதியில் வெற்றிபெற்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளா முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதியுள்ளார். கேரள மாநிலத்தின் பனமரம் என்ற பகுதியில் தினேஷ்குமார் என்ற விவசாயி கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் அறிந்து வேதனை அடைந்தேன். கேரளாவில் கடன் தொல்லை காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. இத்தனைக்கும் கேரள அரசு விவசாயிகள் கடனை திருப்பி செலுத்தும் காலத்தை டிசம்பர் மாதம் வரை நிறுத்திவைத்து இருக்கின்றது. விவசாயி தினேஷ்குமார் தற்கொலை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“வயநாட்டிற்கு புறப்படும் ராகுல்” வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கின்றார்…!!

வயநாடு மக்களவை தொகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க 7, 8 ஆகிய தேதிகளில் ராகுல் காந்தி சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கின்றார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி உத்தரபிரதேசத்தின் அமேதி மற்றும் கேரளாவின் வயநாடு ஆகிய இரண்டு மக்களவை தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் ராகுல் காந்தி அமேதியில் மக்களவை தொகுதியில்  தோல்வி அடைந்தார். அதே நேரம் கேரளாவின் வயநாடு மக்களவை தொகுதியில் வெற்றி பெற்றார். வயநாடு மக்களவை தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பி.பி.சுனீரைவிட 4 […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிடுவது கிரிமினல் குற்றமல்ல” பாஜக MP எச்சரிக்கை…!!

“ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிடுவது கிரிமினல் குற்றமல்ல” ஜெகதால் போலீஸ் நிலையம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட உள்ளேன் என்று பாஜக MP எச்சரிக்கை விடுத்துள்ளார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்து வந்தார். பாஜக_வும் எப்படியாவது மேற்கு வங்கத்தில் கால் ஊன்றிவிட வேண்டுமென்று தீவிரமான அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டு நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் 18 இடங்களில் வெற்றி பெற்றது. அம்மாநிலத்தில் திரிணாமுல் , கம்யூனிஸ்ட் என்று சொல்லப்பட்ட நிலையில் பாஜக தனக்கான […]

Categories
தேசிய செய்திகள்

முதல்வர் முன்பு “ஜெய் ஸ்ரீராம் கோஷம்” பாஜகவினர் 10 பேர் கைது…!!

மேற்கு வங்க முதல்வர் முன்பு ஜெய் ஸ்ரீராம் கோஷம் கோஷம் போட்டதாக பாஜகவினர் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. பெருவாரியான மாநிலங்களில் பாஜக_வின் செல்வாக்கு அதிகரித்துள்ளதாகவே இந்த தேர்தல் காட்டுகின்றது. மேற்குவங்கம் எப்போதும் திரிணாமுல் மற்றும் 35 ஆண்டுகள் ஆட்சி செய்த இடதுசாரிகள் கோட்டை என்று கருத்தப்பட்டதை பாஜக தகர்த்துள்ளது.வாக்கு எண்ணிக்கை முடிவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 22 இடங்களையும் ,  பாஜக  பா.ஜனதா 18 […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

அணுசக்தி மற்றும் விண்வெளி துறையை பெற்றுக்கொண்ட மோடி ….!!

அணுசக்தி, விண்வெளி, ஓய்வூதியம் ஆகிய துறைகளை பிரதமர் நரேந்திர மோடி தன் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக தொடர்ந்து இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சியை அமைத்தது. நேற்று மாலை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் மோடி தலைமையிலான புதிய அமைச்சரவைக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். தற்போது புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட மத்திய அமைச்சர்களுக்கு தனி தனி இலாகாக்களும் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையில் இடம் பெற்ற அமைச்சர்களில் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“உள்துறை அமைச்சரானார் அமித்ஷா” இலாகாக்கள் ஒதுக்கீடு…!!

நேற்று புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட அமைச்சர்களுக்கு இலாகாக்கள் வழங்கப்பட்டு வருகின்றது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களை கைப்பற்றியது. இதில் பாஜக மட்டும் 303 இடங்களில் அபார வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் மத்தியில் இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்தது. இதைத்தொடர்ந்து நேற்று மோடி தலைமையிலான புதிய அமைச்சரவை நேற்று பொறுப்பேற்றுக்கொண்டது. இதில்  57 அமைச்சர்களுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதை தொடர்ந்து புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட மத்திய அமைச்சர்களுக்கு ஒவ்வொரு இலாகாக்களும் வழங்கப்பட்டு வருகின்றது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“மத்திய அமைச்சரவையில் அதிமுக” உரிய நேரத்தில் பரிசீலிக்கப்படும்… பாஜக இல.கணேசன் கருத்து…!!

மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம்பெறுவது  நேரத்தில் பரிசீலிக்கப்படுமென்று   பாஜக_வின் இல.கணேசன்  தெரிவித்துள்ளார். மோடியின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள பல்வேறு மாநில முதல்வர்கள் , ஆளுநர்கள் பங்கேற்றனர். இந்த சூழலில் தமிழகத்தில் பாஜகவின் கூட்டணி கட்சி அதிமுக என்பதால் தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வரும் டெல்லி சென்றனர். அதிமுக_விற்கு அமைச்சரவையில் இடம் கிடைக்குமென எதிர்பார்க்கப்பட்ட சுழலில் அதிமுக_விற்கு இடமில்லாமலே அமைச்சரவை பொறுப்பேற்றது. தமிழகத்தில் அதிமுக கூட்டணியின் பாஜக இடம்பெற்று தேனி மக்களவை தொகுதியில் மட்டும் அதிமுக வெற்றி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜூன் 3_இல் திமுக M.L.A மற்றும் M.P_க்கள் கூட்டம்….!!

ஜூன் 3_ஆம் தேதி திமுக M.L.A , M.P மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுமென்று திமுக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடைபெற்று முடிந்த மக்களவை மற்றும் 22  சட்டப் பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. 38 மக்களவை தொகுதிகளில் போட்டியிட்ட இக்கூட்டணி 37 இடங்களிளிலும் , 22 சட்டமன்ற தொகுதிகளில் 13 இடங்களையும் கைப்பற்றியது. இதில் வெற்றி பெற்ற திமுக சட்டமன்ற வேட்பாளர்கள் மூன்று தினங்களுக்கு முன்பு கட்சியின் தலைவர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அமைச்சரவையில் இடமில்லை “சென்னைக்கு திரும்பாத OPS” டெல்லியில் இருக்கிறார்…!! 

தனது மகனுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்காததால் டெல்லியில் இருந்து OPS மற்றும் அவரது மகன் சென்னை கிளம்பாமல் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி அபார வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக ஆட்சியமைக்க இருந்ததையடுத்து பிரதமராக நரேந்திர மோடி தொடர்ந்து இரண்டாவது முறையாக  குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பதவியேற்றார்.  அவருடன் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி, சதானந்த கவுடா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டு அமைச்சர்களும் பொறுப்பேற்றனர். மோடியின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மோடி தான் முடிவு செய்வார் “மத்திய அமைச்சரவையில் அதிமுக” குறித்து தமிழிசை பதில்…!!

மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம்பெறுவது குறித்து பாஜக தலைமை மற்றும் பிரதமர் மோடி முடிவு செய்வார்கள் என்று தமிழிசை தெரிவித்துள்ளார். மோடியின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள பல்வேறு மாநில முதல்வர்கள் , ஆளுநர்கள் பங்கேற்றனர். இந்த சூழலில் தமிழகத்தில் பாஜகவின் கூட்டணி கட்சி அதிமுக என்பதால் தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வரும் டெல்லி சென்றனர். அதிமுக_விற்கு அமைச்சரவையில் இடம் கிடைக்குமென எதிர்பார்க்கப்பட்ட சுழலில் அதிமுக_விற்கு இடமில்லாமலே அமைச்சரவை பொறுப்பேற்றது. இந்நிலையில் தமிழக பாஜக_வின் மாநில […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“மக்களை பிரித்தாளும் பாஜக” மேற்கு வங்க முதல்வர் குற்றசாட்டு …!!

பாஜக ஆளும் மாநிலத்தில் மொழிகள் அடிப்படையில் மக்களை பிரித்து ஆள முயற்சிக்கிறார்கள் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. பெருவாரியான மாநிலங்களில் பாஜக_வின் செல்வாக்கு அதிகரித்துள்ளதாகவே இந்த தேர்தல் காட்டுகின்றது. மேற்குவங்கம் எப்போதும் திரிணாமுல் மற்றும் 35 ஆண்டுகள் ஆட்சி செய்த இடதுசாரிகள் கோட்டை என்று கருத்தப்பட்டதை பாஜக தகர்த்துள்ளது.வாக்கு எண்ணிக்கை முடிவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 22 இடங்களையும் […]

Categories

Tech |