Categories
தேசிய செய்திகள்

புதிய கல்வி கொள்கையை உலகின் சிறந்தாக மாற்ற திட்டம்….. நிர்மலா சீதாராமன்

புதிய கல்வி கொள்கையை உலகின் சிறந்ததாக மாற்ற திட்டம் உள்ளதாக  நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பாஜக புதிதாக பொறுப்பேற்ற நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் மத்திய நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் நியமிக்கப்பட்டார்.கடந்த ஏப்ரலில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று 2019_ 2020_க்கான முழு பட்ஜெட்டை மக்களவையில்  மத்திய நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து பேசினார்.அப்போது அவர் கூறுகையில் , புதிய தேசிய கல்வி கொள்கையை அரசு கொண்டு வர உள்ளது. உலகின் சிறந்த கல்வி […]

Categories
தேசிய செய்திகள்

“இனி வீடு வாங்க கவலையில்லை” நிர்மலாசீதாராமன் அதிரடி அறிவிப்பு…மகிழ்ச்சியில் பொதுமக்கள்..!!

குறைந்த விலை வீடுகளுக்கான வட்டியில் 1.5 லட்சம் வரை விலக்கு அளிக்க நடவடிக்கை எடுக்கபப்டும் என்று நிர்மலாசீதாராமன் பட்ஜெட் உரையில் தெரிவித்தார். இன்று மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2019-20ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை   தாக்கல் செய்தார்.அப்போது பேசிய அவர்,குறைந்த விலை வீடுகள் ,கடனில் மின்சார வாகனம் வாங்கினால் வட்டியில் கூடுதலாக 1.5 லட்சம் வரை விலக்கு அளிக்கப்படும்.இதன்படி 15 ஆண்டுகள் வீட்டுக்கடனுக்கு ரூபாய் 7 லட்சம் வரை மிச்சமாகும். பான் அட்டை இல்லாவிட்டால் ஆதார் எண்ணை அளித்து வருமான வரி […]

Categories
தேசிய செய்திகள்

“சில்லரை வணிகர்களுக்கு  ஓய்வூதியம்” நிர்மலா சீதாராமன் தகவல்…!!

பிரதான் மந்திரி கரம் யோகி மான் தன் யோஜனா என்ற பெயரில்  சில்லரை வணிகர்களுக்கு  ஓய்வூதிய திட்டம் வழக்கப்படுமென்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பாஜக புதிதாக பொறுப்பேற்ற நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் மத்திய நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் நியமிக்கப்பட்டார்.கடந்த ஏப்ரலில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று 2019_ 2020_க்கான முழு பட்ஜெட்டை மக்களவையில்  மத்திய நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து , பட்ஜெட் உரையை வாசித்து வருகின்றார். இதில் 3 கோடி சில்லரை […]

Categories
தேசிய செய்திகள்

20 ரூபாய் நாணயம் அறிமுகம்….நிர்மலாசீதாராமன்..!!

1,2,5,10,20 ரூபாய் நாணயங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று நிர்மலாசீதாராமன் பட்ஜெட் உரையில் தெரிவித்தார். இன்று மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2019-20ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை   தாக்கல் செய்தார்.அப்போது பேசிய அவர்.5 லட்சம் கோடிக்கு பொதுத்துறை நிறுவனப் பங்குகள் விற்கப்படும் என்றார் .குடிநீர் ,சாலை உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் ரூபாய் 100 கோடி ஒதுக்கப்படும் . வரி வருவாய் 6.3 லட்சம் கோடியில் இருந்து 11.36 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.நாட்டின் வளர்ச்சியில் வரி செலுத்துவோரின் பங்கு முக்கியமானது, […]

Categories
தேசிய செய்திகள்

“நாடு முழுவதும் சம அளவில் மின்சாரம்” நிர்மலா சீதாராமன் உறுதி ….!!

நாடு முழுவதும் சம அளவில் மின்சார வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார். பாஜக புதிதாக பொறுப்பேற்ற நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் மத்திய நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் நியமிக்கப்பட்டார்.கடந்த ஏப்ரலில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று 2019_ 2020_க்கான முழு பட்ஜெட்டை மக்களவையில்  மத்திய நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து , பட்ஜெட் உரையை வாசித்து வருகின்றார். அதில் , அனைத்து பங்குதாரர்களுடனும் கலந்தாலோசித்து விமானத் துறை, […]

Categories
தேசிய செய்திகள்

“வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் ஆதார்கார்டு “நிர்மலாசீதாராமன்..!!

வெளிநாட்டில் வாழும் இந்தியர்களின் பாஸ்போர்ட்டுடன் ஆதார் இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நிர்மலாசீதாராமன் பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார். இன்று மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலாசீதாராமன் 2019-20ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை   தாக்கல் செய்தார்.அப்போது பேசிய அவர்,கழிவுநீர் சுத்திகரிப்புகாக ரோபோட்டுகள் மற்றும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படும்.நாட்டில் உள்ள 74 சுற்றுலாத்தலங்கள் உலக தரத்திற்கு உயர்த்தப்படும்.சுய உதவிக்குழு பெண்கள் முத்ரா திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் கடன் பெற அனுமதி வழங்கப்படும்.வங்கிகளில் வாராக்கடன் கடந்த ஆண்டில் ஒரு லட்சம் கோடி ரூபாய் வரை  குறைக்கப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

குடிநீர் பிரச்சனைக்கு’ஹர் கர் ஜல்’ திட்டம்…நிர்மலாசீதாராமன் தகவல்…!!

இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய குடிநீர் பிரச்சனையை தீர்க்க “ஹர் கர் ஜல்” திட்டம்  மேற்கொள்ளப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இன்று மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2019-20ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை   தாக்கல் செய்தார்.அப்போது பேசிய அவர்,அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய திட்டம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி முழுமையாக செயல்படுத்தப்படும் என்றார் .குடிநீர்  பிரச்னையை தீர்ப்பதே மத்திய அரசின் பிராதன நோக்கம்,   2020க்குள் அனைத்து கிராமங்களிலும் உள்ள வீடுகளுக்கும் குழாய் மூலம் சுகாதாரமான குடிநீர் வழங்க “ஹர் கர் ஜல்” திட்டம் மூலம்  நடவடிக்கை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாடாளுமன்றத்தில் குரல் ஒலிக்குமா…? வைகோ அதிரடி பதில் …!!

நாடாளுமன்றத்தில் என்குரல் ஒலிக்காது என்றவர்களுக்கு எதுவும் நான் கூற விரும்பவில்லை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பதிலளித்துள்ளார். 2009_ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில்  நான் குற்றம் சாட்டுகிறேன் என்ற புத்தக வெளியீட்டு விழாவில் மத்திய அரசுக்கு எதிராக பேசியதாக ஆயிரம் விளக்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர் . இந்திய  இறையாண்மை _க்கு எதிராக பதியப்பட்ட இந்த வழக்கை MLA , MP_க்களை விசாரித்த  சிறப்பு நீதிமன்றம்  வைகோ குற்றவாளி என்று தீர்ப்பளித்து உத்தரவிட்டது. வைகோ மாநிலங்களவை உறுப்பினராக போட்டியிடும் சூழலில் இந்த […]

Categories
தேசிய செய்திகள்

“புதிய இந்தியாவை உருவாக்க மோடி அரசு முயற்சி ” நிர்மலா சீதாராமன் பேச்சு …!!

புதிய இந்தியாவை உருவாக்க மோடி அரசு முயற்சி செய்து வருகிறது என்று மக்களவையில்  நிர்மலா சீதாராமன்  தெரிவித்தார். இன்று மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2019-20ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை   தாக்கல் செய்தார். அபோது பேசியவர் , உணவு பாதுகாப்புக்காக கடந்த 5 ஆண்டுகளில் 2 மடங்கு பணம் செலவிடப்பட்டுள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் இந்தியா 5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் கொண்ட பொருளாதார நாடு என்ற நிலையை எட்டும். சிறு மற்றும் குறு தொழில்களில் வேலைவாய்ப்பை அதிகரிப்பதுதான் தற்போது எடுக்கப்பட்டுள்ள முதல் இலக்கு என்றார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“இன்று எனக்கு மகிழ்ச்சியான நாள்” வைகோ பேட்டி …!!

இன்று எனக்கு மகிழ்ச்சியான நாள் மற்றும் வாழ்க்கையில் முக்கியமான நாள் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். 2009_ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில்  நான் குற்றம் சாட்டுகிறேன் என்ற புத்தக வெளியீட்டு விழாவில் மத்திய அரசுக்கு எதிராக பேசியதாக ஆயிரம் விளக்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர் . இந்திய  இறையாண்மை _க்கு எதிராக பதியப்பட்ட இந்த வழக்கை MLA , MP_க்களை விசாரித்த  சிறப்பு நீதிமன்றம்  வைகோ குற்றவாளி என்று தீர்ப்பளித்து உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கின் தண்டனையாக ஓராண்டு சிறை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“வைகோ சிறைத்தண்டனை நிறுத்தி வைப்பு” சிறப்பு நீதிமன்றம் உத்தரவு …!!

தேச துரோக வழக்கில் வைகோ_வுக்கு ஓராண்டு சிறை தண்டனை ஒரு மாதத்திற்கு நிறுத்தி வைத்ததுசிறப்பு நீதிமன்றம். 2009_ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில்  நான் குற்றம் சாட்டுகிறேன் என்ற புத்தக வெளியீட்டு விழாவில் மத்திய அரசுக்கு எதிராக பேசியதாக ஆயிரம் விளக்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர் . இந்திய  இறையாண்மை _க்கு எதிராக பதியப்பட்ட இந்த வழக்கை MLA , MP_க்களை விசாரிக்கும்  சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது. காலை 10.30 மணிக்கு நீதிபதி தீர்ப்பை வாசிக்கும் போது  மதிமுக வழக்கறிஞர்கள்  மல்லை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

2019-20க்கான பட்ஜெட்டை நிர்மலாசீதாராமன் தாக்கல் செய்தார்..!!

2019-20 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கலானது தொடங்கியுள்ளது நிதியமைச்சர் நிர்மலாசீதாராமன் தொகுத்து வழங்கி வருகிறார்.  நாடாளுமன்றத்தில் 2019-20ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை அப்போதைய நிதி அமைச்சர் பியூஸ் கோயல் தாக்கல் செய்தார். இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் அமோக வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது. இந்நிலையில் மக்களவையில் 2019-20க்கான முழு பட்ஜெட்டை முதல் பெண் நிதி அமைச்சர் நிர்மலாசீதாராமன்  தாக்கல் செய்து வருகிறார்.அதில் புதிய இந்தியாவை உருவாக்க முயற்சி எடுத்திருப்பதாகவும் ,பொருளாதாரத்தில் இந்தியாவை 25% உயர்த்துவதற்கும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“சிறை செல்லும் வைகோ” குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பு ….!!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றவாளி என்று சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. திமுக ஆட்சி காலத்தில் வைகோ இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக ஆயிரம் விளக்கு காவல் துறையினர் 2009_ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனர்.இந்த வழக்கு MP மற்றும் MLA_க்கள் விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்த நிலையில் அவர் மீது குற்றம் நிரூபணமாக்கப்பட்டு குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை வெளியிட்ட நீதிபதி சாந்தி , உங்களுக்கான தண்டனையை அறிவிக்கப்பிக்கின்றேன் இன்று அறிவிக்கவா அல்லது திங்கள்கிழமை அறிவிக்கவா என்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#உதயநிதிக்கு_மண்டியிட்ட_திமுக … இந்தியளவில் ட்ரெண்டிங்… அதிர்ச்சியில் கழகத்தினர்..!!

திமுகவின் உதயநிதிக்கு இளைஞரணி செயலாளர் பொறுப்பு  வழங்கப்பட்டுள்ளதை சமூக வலைதளவாசிகள்  கலாய்த்து வருவதால் திமுகவினர் வேதனை அடைந்துள்ளனர். ரெட்ஜெயண்ட் மூவி என்ற பெயரின் திரைப்பட தயாரிப்பாளராக இருந்து வந்து , நடிகராக தோன்றி, முரசொலியில் நிர்வாக இயக்குனராக இருந்தவர்  திமுக தலைவர் முக.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின். சினிமா துறையில் தனது கவனத்தை செலுத்தி வந்த இவர் திமுகவின் அரசியல் கூட்டங்களில் பங்கேற்க ஆரம்பித்தார். திமுக சார்பில் நடைபெற்ற கிராம சபை கூட்டம் , போராட்டம் மற்றும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“உதயநிதிக்கு பொறுப்பு தாமதமாக வழங்கப்பட்டுள்ளது” சாமிநாதன் கருத்து …!!

 திமுக-வுக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ள  உதயநிதிக்கு இளைஞரணி செயலாளர் பொறுப்பு தாமதமாக வழங்கப்பட்டுள்ளது என்று சாமிநாதன் தெரிவித்துள்ளார். திமுகவின் இளைஞர் அணிச் செயலாளராக இருந்து வந்த சாமிநாதன் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு திமுக தலைவர் முக.ஸ்டாலினின் மகனும் , நடிகருமான உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை அக்கட்சியின் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் அதிகார பூர்வமாக வெளியிட்டார்.  மேலும் இளைஞர் அணிச் செயலாளர் பொறுப்பு வகித்த சாமிநாதனுக்கு  திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர் பொறுப்பு வழங்கப்பட்டது. உதயநிதி ஸ்டாலின் இளைஞர் அணிச் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“துறைவாரியான வளர்ச்சி அறிக்கையாக இல்லை” ஆய்வறிக்கை குறித்து ப.சிதம்பரம் விமர்சனம்..!!

மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படட ஆய்வறிக்கை துறைவாரியான வளர்ச்சி குறித்த அறிக்கையாக அமையவில்லை என்று ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். இன்று நடைபெற்ற மாநிலங்களவை கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்  பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார். அப்போது ஆய்வறிக்கையில் ,  2019-20 நிதியாண்டிற்கான நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 7 சதவீதமாகவும் , கடந்த நிதி ஆண்டில் பற்றாக்குறை 5.8 சதவீதமாகவும் இருந்தது என்றும் கூறினார். இந்நிலையில்  இது குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் ஆட்சியில் நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“இளைஞரணியை மிகத்திறம்பட உதயநிதி வழிநடத்துவார்” வைகோ வாழ்த்து

திமுக இளைஞரணியை மிகத்திறம்பட உதயநிதி ஸ்டாலின் வழிநடத்தி செல்வார் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாழ்த்தியுள்ளார். தமிழகத்தில் நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டமன்ற இடைதேர்தலில் திமுக_விற்காக தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டவர் நடிகர் உதயநிதி ஸ்டாலின். திமுக தலைவர் முக.ஸ்டாலினின் மகனும் , முரசொலியில் நிர்வாக இயக்குனராக இருந்து வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு முதல் முறையாக திமுகவில் அதிகாரமிக்க பதவிகளில் ஒன்றான இளைஞரணி செயலாளராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.   இதற்கான அறிவிப்பை அக்கட்சியின் பொது செயலாளர் பேராசிரியர் அன்பழகன் வெளியிட்டார். தமிழகம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“ஸ்டாலினை போன்று உதயநிதியும் செயல்படுவார்” கே.எஸ்.அழகிரி வாழ்த்து …!!

திமுக தலைவர் ஸ்டாலினை போன்று உதயநிதியும் செயல்படுவார் என்ற நம்பிக்கை உள்ளது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வாழ்த்தியுள்ளார். தமிழகத்தில் நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டமன்ற இடைதேர்தலில் திமுக_விற்காக தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டவர் நடிகர் உதயநிதி ஸ்டாலின். திமுக தலைவர் முக.ஸ்டாலினின் மகனும் , முரசொலியில் நிர்வாக இயக்குனராக இருந்து வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு முதல் முறையாக திமுகவில் அதிகாரமிக்க பதவிகளில் ஒன்றான இளைஞரணி செயலாளராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை அக்கட்சியின் பொது செயலாளர் பேராசிரியர் அன்பழகன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அமமுக_வின் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு …..!!

அமமுக சார்பில் புதிய நிர்வாகிகள் பட்டியலை கட்சியின் பொது செயலாளர் TTV தினகரன் அறிவித்துள்ளார். மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல் தோல்வியைடுத்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் பலர் திமுக மற்றும் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். குறிப்பாக அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக இருந்த தங்கதமிழ் செல்வன் திமுக_வின் இணைந்ததை தொடர்ந்து இசக்கி சுப்பையா அதிமுக_வில் இணைவதாக அறிவித்தார். மேலும் TTV ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களும் முதல்வரை சந்தித்து தங்களின் ஆதரவை தெரிவித்தனர். தொடர்ந்து நிர்வாகிகள் மாற்றுக் கட்சியை […]

Categories
மாநில செய்திகள்

“அளவாக குடித்தால் பிரச்சனை இல்லை” பேரவையில் தங்கமணி பேச்சு….!!

மதுபானம் அருந்துபவர்கள் அளவாக குடித்தால் எந்த பிரச்சினையும் இல்லை என்று பேரவையில் அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. துறைசார்ந்த மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வரும் நிலையில் இன்று பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் கட்சி MLA பிரின்ஸ் கூறுகையில் ,  மதுபானங்களின் தரம் குறைவாக உள்ளதால் உயிரிழப்பு ஏற்படுவதாக குற்றம்சாட்டினார்.இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் தங்கமணி , மதுபானம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுகவின் இளைஞரணி சாமிநாதனுக்கு புதிய பொறுப்பு ….!!

திமுகவின் மாநில இளைஞரணி செயலாளராக இருந்து வந்த  வெள்ளக்கோவில் சாமிநாதனுக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. திமுகவின் மாநில இளைஞரணி செயலாளராக இருந்தவர் வெள்ளக்கோவில் சாமிநாதன்.திமுக தலைவர் முக.ஸ்டாலினுக்கு பிறகு திமுக இளைஞரணி மாநில செயலாளராக இருந்து வந்த அவர் தற்போது அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு  திமுக_வின் புதிய இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை அக்கட்சியின் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் வெளியிட்டார்.இந்நிலையில் இளைஞரணி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட வெள்ளக்கோவில் சாமிநாதனுக்கு தற்போது புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. திமுகவின் உயர்நிலை செயல்திட்டக் குழுவில் உறுப்பினராக […]

Categories
மாநில செய்திகள்

“டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு” தமிழக அரசு அதிரடி …!!

தமிழக டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ 2000  ஊதிய உயர்வு வழங்கப்படுமென்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபை கூட்டம் நடைபெற்று மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகின்றது. இன்று நடைபெற்ற சட்டப்பேரவை  கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள டாஸ்மர்க் ஊழியர்கள் , விற்பனையாளர்கள் , உதவி விற்பனையாளர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை சார்பில் அமைச்சர் தங்கமணி அறிவித்துள்ள அறிவிப்பில் ,  டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாத தொகுப்பு ஊதியமாக 2000 உயர்த்தி வழங்கப்படும். இதனால்    […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“காழ்ப்புணர்ச்சி காரணமாகவே குடும்ப அரசியல்” RS பாரதி கருத்து ..!!

காழ்ப்புணர்ச்சி காரணமாகவே குடும்ப அரசியல் என விமர்சிக்கப்படுகிறது என்று  திமுக_வின் RS பாரதி தெரிவித்தார். திமுகவின் இளைஞர் அணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை அக்கட்சியின் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் அதிகார பூர்வமாக வெளியிட்டார். திமுக தலைவர் முக.ஸ்டாலின் உருவாக்கிய இளைஞர் அணியை இனிமேல் உதயநிதி ஸ்டாலின் வழிநடத்துவார். திமுக தலைவர் இளைஞர் அணி  செயலாளராக இருந்து திமுகவின் பொருளாளர் , செயல் தலைவரை என்று உயர்ந்து தற்போது தலைவராக இருந்து வருகின்றார். முக.ஸ்டாலின் இளைஞர் அணி செயலாளர் பொறுப்பில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உதயநிதிக்கு பொறுப்பு “இளைஞர்களை ஈர்ப்பதற்கான அறிவிப்பு” துரைமுருகன் கருத்து…!!

உதயநிதி ஸ்டாலினை  திமுகவின் இளைஞர் அணிச் செயலாளராக நியமிக்கப்பட்டது  வரவேற்கத்தக்கது என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டமன்ற இடைதேர்தலில் திமுக_விற்காக தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டவர் நடிகர் உதயநிதி ஸ்டாலின். திமுக தலைவர் முக.ஸ்டாலினின் மகனும் , முரசொலியில் நிர்வாக இயக்குனராக இருந்து வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு முதல் முறையாக திமுகவில் அதிகாரமிக்க பதவிகளில் ஒன்றான இளைஞரணி செயலாளராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை அக்கட்சியின் பொது செயலாளர் பேராசிரியர் அன்பழகன் வெளியிட்டார். தமிழகம் முழுவதும் உள்ள […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக_வின் இளைஞரணி செயலாளராக உதயநிதி…. அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியீடு …!!

திமுக_வின் இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டமன்ற இடைதேர்தலில் திமுக_விற்காக தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டவர் நடிகர் உதயநிதி ஸ்டாலின். திமுக தலைவர் முக.ஸ்டாலினின் மகனும் , முரசொலியில் நிர்வாக இயக்குனராக இருந்து வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு முதல் முறையாக திமுகவில் அதிகாரமிக்க பதவிகளில் ஒன்றான இளைஞரணி செயலாளராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் முக.ஸ்டாலின் உருவாக்கிய  இளைஞரணி திமுக_வில் உள்ள முக்கியமான அணியாக பார்க்கப்படுகின்றது.திமுகவில் 200க்கும் மேற்பட்ட அணிகள் இருக்கின்றன அதில் முக்கியமான அணியாக இளைஞரணி திகழ்கின்றது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“தமிழகத்தில் பூரண மதுவிலக்கு” பேரவையில் அமைச்சர் தங்கமணி..!!

தமிழகத்தில் 6,132 ஆக இருந்த மதுபான கடைகளின் எண்ணிக்கை 5,152 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக சட்ட பேரவையில்  அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கி அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு அதன் மீதான விவாதம் நடைபெற்றது. நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றதன் காரணமாக மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறாமல் சட்ட சபை ஒத்திவைக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து  ஜூலை 28ம் தேதி மீண்டும் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து இன்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“வேலூருக்கு 5_ஆம் தேதி தேர்தல்” தேர்தல் ஆணையம் அறிவிப்பு …!!

நிறுத்தப்பட்ட வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல்  ஆகஸ்ட் 5_ஆம் தேதி நடைபெறுமென்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடைபெற்ற சூழலில் வேலூர் மக்களவை தொகுதி_க்கான தேர்தல் பணப்பட்டுவாடாவை காரணம் காட்டி தேர்தல் ஆணையம் தேர்தலை இரத்து செய்தது.இந்திய வரலாற்றிலேயே பணப்பட்டுவாடா_வால் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் ரத்து செய்யப்படுகிறது என்றால் அது வேலூர் தொகுதி என்ற கடுமையான மோசமான வரலாறு பதிவாகி இருந்த நிலையில் தற்போது  மறு தேர்தலுக்கான தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஹரீஷ் ராவத் ராஜினாமா …..!!

தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை ஹரீஷ் ராவத் ராஜினாமா செய்துள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் படுதோல்வியை தொடர்ந்து அக்கட்சியின் பல்வேறு மாநில  நிர்வாகிகள் ராஜினாமா செய்தனர்.இதையடுத்து ராகுல் காந்தியும் தலைவர் பொறுப்பை செய்வதாக கட்சியின் உயர்மட்ட குழுவுக்கு கடிதம் கொடுத்தார். ராகுலின் ராஜினாமா முடிவை ஏற்க மறுத்த கட்சி தலைமை ராகுல் தனது ராஜினாமா முடிவை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியது.அதே போல பல்வேறு மாநில காங்கிரஸ் முதல்வர்களும் ராகுலே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நிர்வாகிகளை வைத்துதான் கட்சி இருக்கிறதா..? TTV தினகரன் கேள்வி …!!

நிர்வாகிகளை வைத்து தான் கட்சி இருக்கின்றதா என்று TTV தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல் தோல்வியைடுத்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் பலர் திமுக மற்றும் அதிமுகவில் இணைந்து வருகின்றனர்.குறிப்பாக அக்கட்சியின் முன்னணி நிர்வாகியாக இருந்த தங்கதமிழ் செல்வன் திமுக_வின் இணைந்தார். அவரை தொடர்ந்து இசக்கி சுப்பையா அதிமுக_வில் இணைவதாக அறிவித்தார். மேலும் TTV ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களும்  முதல்வரை சந்தித்து தங்களின் ஆதரவை தெரிவித்தனர். இந்நிலையில் சட்டப்பேரவை வளாகத்தில்  செய்தியாளர்களை சந்தித்த TTV […]

Categories
தேசிய செய்திகள்

“ராஜினாமா செய்யும் துணிச்சல் சிலருக்கு மட்டுமே” பிரியங்கா காந்தி ட்வீட் ..!!

தலைவர் பதவியை ராஜினாமா செய்யும் துணிச்சல் சிலருக்கு மட்டுமே இருக்கும் என்று பிரியங்கா காந்தி ட்வீட் செய்துள்ளார். மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் படுதோல்வியை தொடர்ந்து அக்கட்சியின் பல்வேறு மாநில  நிர்வாகிகள் ராஜினாமா செய்தனர்.இதையடுத்து ராகுல் காந்தியும் தோல்விக்கு பொறுப்பேற்று தனது தலைவர்  பொறுப்பை ராஜினாமா செய்வதற்கான விரிவான அறிக்கை வெளியிட்டார். ராகுலின் இந்த முடிவை காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெற்று புதிய தலைவரை தேர்வு செய்யும் வரை காங்கிரஸ் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“சொத்து வரியை குறைக்க நடவடிக்கை” பேரவை கூட்டத்தில் அமைச்சர் அறிவிப்பு..!!

தமிழகத்தில் சொத்து வரியை குறைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என பேரவையில் அமைச்சர் வேலுமணி தெரிவவித்துள்ளார். தமிழகத்தில் மாநகராட்சி,நகராட்சி,பேரூராட்சி என உள்கட்டமைப்பு வசதிகளுக்கு ஏற்ப சொத்துவரி,கழிவுநீர்வரி,குடிநீர் வரி மற்றும் குப்பை வரி  போன்றவை வசூலிக்கப் பட்டு வருகின்றன. இதில் சொத்து வரியில் தமிழக அரசு திருத்தம் செய்து புதிய அறிக்கை ஒன்றை 2018 ஆகஸ்ட் மாதம் வெளியிட்டது. அதில் சொத்துவரி 50லிருந்து 100 சதவீதம் வரை உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. சொத்துவரியை  திடீரென்று உயர்த்தியது மக்களிடையே பெரும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“தலைவராக ராகுலே தொடர வேண்டும்” திருநாவுக்கரசர் கருத்து…!!

காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியே தொடர வேண்டும் என்று திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 52 இடங்களை மட்டும் கைப்பற்றி படுதோல்வி அடைந்தது. தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று பல்வேறு மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ராஜினாமா செய்து வந்தனர். அதே போல ராகுல் காந்தியும் கடந்த மே 25_ஆம்தேதி நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில் தேர்தல் தோல்விக்கு பொறுப்பு ஏற்று கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்தார். ஆனால் ராகுலின் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“தலைவரானதாக எந்த தகவலும் வரவில்லை” மோதிலால் வோரா தகவல் …!!

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக நியமித்ததாக எந்த தகவலும் வரவில்லை என்று மோதிலால் வோரா தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் படுதோல்விக்கு பெறுபேற்று கட்சியின் தலைவர் ராகுல் காந்தி ராஜினாமா செய்வதாக அறிவித்தார். மேலும் தான் காங்கிரஸ்  தலைவர் கிடையாது புதிய தலைவரை தேர்வு செய்யுங்கள் என்றும் அவர் தெரிவித்தார்.இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக 90 வயதான மூத்த மோதிலால் வோரா செயல்படுவார் என தகவல் வெளியாகியது. இது குறித்து பேசிய மோதிலால் வோரா , […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“ராகுலே தலைவராக தொடர்வார்” காங்கிரஸ் நிர்வாகிகள் கருத்து …..!!

காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியே தொடர்வார் என்று உயர்மட்ட குழு தெரிவித்துள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் படுதோல்வியை தொடர்ந்து அக்கட்சியின் பல்வேறு மாநில  நிர்வாகிகள் ராஜினாமா செய்தனர்.இதையடுத்து ராகுல் காந்தியும் தலைவர் பொறுப்பை செய்வதாக கட்சியின் உயர்மட்ட குழுவுக்கு கடிதம் கொடுத்தார். ராகுலின் ராஜினாமா முடிவை ஏற்க மறுத்த கட்சி தலைமை ராகுல் தனது ராஜினாமா முடிவை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியது.அதே போல பல்வேறு மாநில காங்கிரஸ் முதல்வர்களும் ராகுலே தலைவராக  […]

Categories
அரசியல்

“இடமறிந்து செயல்படுங்கள் TTV “அதிருப்தி MLA அறிவுரை..!!

தினகரன் இருக்கும் இடமறிந்து செயல்படவேண்டும் என்று அதிமுக MLA கலைச்செல்வன் அறிவுறுத்தியுள்ளார் . அதிமுகவில் எம்எல்ஏக்களாக   பணியாற்றி வரும் ரத்தினசபாபதி,பிரபு கலைச்செல்வன் ஆகிய மூவரும் டிடிவி தினகரன்க்கு ஆதரவாக செயல்பட்டு வந்தனர். இதை தொடர்ந்து அதிமுக அரசு தலைமை கொறடா கட்சித்தாவல் சட்டத்தின் அடிப்படையில் 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி சட்டப்பேரவை  தலைவரிடம் பரிந்துரை செய்தார். அதன்பின் சட்டப்பேரவைத் தலைவர் மூன்று எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உரிய விளக்கம் அளிக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ராஜினாமாவை தொடர்ந்து ட்வீட்_டர் பக்கத்தை மாற்றிய ராகுல் …!!

ராஜினாமாவை செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து தனது ட்வீட்_டர் பக்கத்தில் இருந்த அகில இந்திய காங்கிரஸ் தலைவர் என்பதை ராகுல் காந்தி நீக்கியுள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் படு தோல்விக்கு பொறுபேற்ற அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தனது ராஜினாமா கடிதத்தை கட்சியின் உயர்மட்டக் குழுவிடம் கொடுத்தார்.ஆனால் ராகுலின் ராஜினாமாவை ஏற்க மறுத்த காங்கிரஸ் கட்சியின் தலைமை ராகுலே கட்சியின் தலைவராக தொடர வேண்டுமென்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் ராஜினாமா செய்வதற்கான காரணங்களை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக “மோதிலால் வோரா_வுக்கு” வாய்ப்பு…!!

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக மோதிலால் வோரா தேர்வு செய்யப்பட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தனது தலைவர் பொறுப்பை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். மேலும் மாநிலம் முழுவதும் பல்வேறு பொறுப்பாளர்கள் தங்களது பொறுப்பை ராஜினாமா செய்தார்கள். ஆனால் ராகுல் காந்தியின் ராஜினாமாவை காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி நிராகரித்ததோடு அவரின் ராஜினாமாவை திரும்ப பெற வேண்டுமென்று வலியுறுத்தினர்.மேலும் காங்கிரஸ் கட்சியின் முதலமைசர்கள் ராகுல் காந்தி _யிடம் ராஜினாமாவை திரும்ப பெற வலியுறுத்தினர். […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“ராஜினாமா செய்தார் ராகுல்” 4 பக்க விரிவான அறிக்கை வெளியீடு …!!

காங்கிரஸ் கட்சி தலைவர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்வதற்கான விரிவான அறிக்கையை ராகுல் காந்தி வெளியிட்டுள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படு தோல்வி அடைந்தது. கட்சியின் தலைவர் ராகுல் காந்தி அமோதி தொகுதியில் தோல்வியடைந்தார்.காங்கிரஸ் கட்சியின் தோல்வியையடுத்து அக்கட்சியின் பல்வேறு மாநில தலைவர்கள் பொறுப்புகளில்  இருந்து விலகினர். அதே போல தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தியின் தலைவர் பொறுப்பில் இருந்து  விலகுவதாக ராஜினாமா கடிதம் கொடுத்தார்.ஆனால் காங்கிரஸ் கட்சியின் காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக்குழு அவரின் ராஜினாமை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அமமுக_வில் இருந்து சென்றவர்கள் யாரும் தளபதிகள் அல்ல….TTV தினகரன் பேட்டி

அமமுக_வில் இருந்து வெளியேறியவர்கள் யாரும் தளபதிகள் அல்ல வெறும் நிர்வாகிகள் தான் என்று TTV தினகரன் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் தோல்வியையடுத்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்த கட்சி நிர்வாகிகள் அதிமுக மற்றும் திமுக_வில் இணைந்து வருகின்றனர். அக்கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த தங்க தமிழ் செல்வன் TTV_யுடன் ஏற்பட்ட மோதலில் திமுக_வில் இணைந்தார். அதை தொடர்ந்து நேற்று செய்தியாளர்களை சந்தித்த  இசக்கி சுப்பையா தாம் அதிமுகவில் இணைய போவதாக அறிவித்தார். இந்நிலையில் கர்நாடகா மாநிலம் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“நான் தலைவர் கிடையாது” புதிய தலைவரை தேர்வு செய்யுங்கள்…. ராகுல் வேண்டுகோள்…!!

காங்கிரஸ் கட்சியின் தலைவர் நான் கிடையாது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படு தோல்வி அடைந்தது. கட்சியின் தலைவர் ராகுல் காந்தி அமோதி தொகுதியில் தோல்வியடைந்தார்.காங்கிரஸ் கட்சியின் தோல்வியையடுத்து அக்கட்சியின் பல்வேறு மாநில தலைவர்கள் பொறுப்புகளில்  இருந்து விலகினர். அதே போல தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தியின் தலைவர் பொறுப்பில் இருந்து  விலகுவதாக ராஜினாமா கடிதம் கொடுத்தார்.ஆனால் காங்கிரஸ் கட்சியின் காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக்குழு அவரின் ராஜினாமை ஏற்க மறுத்து வருகின்றது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“மக்கள் விரும்பாத திட்டங்களுக்கு ஆதரவு கிடையாது” அமைச்சர் ஜெயக்குமார்..!!

“மக்கள் விரும்பாத திட்டங்களுக்கு தமிழக அரசு  ஆதரவு அளிக்காது” என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார் தமிழகத்தில் 23 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறு அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடும் போராட்டம் நடைபெற்று வரும் சூழலில், தமிழகத்தின் எதிர்ப்பை மீறி நாகை திருவாரூர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியிலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தொடங்குவதற்கு அனுமதி வழங்கியுள்ளது. மேலும் தமிழக நாடாளுமன்ற உறுப்பினரகள் ஹைட்ரோ […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி கிடையாது” அமைச்சர் உறுதி…!! 

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க முடியாது என்று சட்டப்பேரவையில் கனிமவளத்துறை அமைச்சர் C.V சண்முகம் உறுதியளித்துள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் புதிதாக 20 இடங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில் தமிழக சட்டசபையில் இன்று எதிர்க்கட்சி திமுக சார்பில் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர்  ராஜா  கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.. இதையடுத்து பேசிய  கனிமவளத்துறை அமைச்சர் CV.சண்முகம் பேசியதில் , தமிழகத்தில் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி அளித்தாலும் , தமிழக அரசு அனுமதி அளித்தால் மட்டுமே  திட்டம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சட்டசபையில் இருந்து காங்கிரஸ் வெளிநடப்பு…!!

காவேரி மேலாண்மை வாரியம் குறித்து ராகுல் பேசியதாக பொய் சொல்ல கூடாது என்று காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகின்றது. இதில் காவேரி மேலாண்மை வாரியம் குறித்து பேசிய தமிழக முதலவர் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி கர்நாடகத்தில் ஈடுபட்ட தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் காவேரி மேலாண்மை வாரியம் கலைக்கப்படும் என்றும் , மேகதாதுவில் அணைகட்ட அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவித்ததாக கூறினார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

10% இடஒதுக்கீடு “கொடிய விஷம் கொண்ட பாம்பு” ஸ்டாலின் விமர்சனம் …!!

கொடிய விஷம் கொண்ட பாம்பு என்று பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான 10% இடஒதுக்கீட்டை திமுக தலைவர் முக.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 % இட ஒதுக்கீட்டை அமுல்படுத்த வேண்டும் என்ற சட்ட மசோதாவை கடந்த மத்திய பாஜக அரசு  நிறைவேற்றியது. ஆனால் தமிழகம்  இந்த சட்ட மசோதாவை எதிர்த்து வந்தது. இந்நிலையில் இன்று நடைபெற்ற தமிழக சட்டபேரவை கூட்டத்தில் எதிர்கட்சி தலைவர் முக.ஸ்டாலின்  நீட் தேர்வில்  சமூக நீதியை பறிகொடுத்து விட்டோம். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

10% இடஒதுக்கீடு தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டம்…. பேரவையில் முதல்வர் பேச்சு ..!!

பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான 10% இடஒதுக்கீடு விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்படும் என்று சட்ட பேரவையில் முதல்வர் தெரிவித்துள்ளார். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 % இட ஒதுக்கீட்டை அமுல்படுத்த வேண்டும் என்ற சட்ட மசோதாவை நிறைவேற்றியது. ஆனால் தமிழகம்  இந்த சட்ட மசோதாவை எதிர்த்து வந்தது. இந்நிலையில் இன்று நடைபெற்ற தமிழக சட்டபேரவை கூட்டத்தில் எதிர்கட்சி தலைவர் முக.ஸ்டாலின்  நீட் தேர்வில்  சமூக நீதியை பறிகொடுத்து விட்டோம். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு தமிழக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“விலகி செல்வோரை தடுத்து நிறுத்த முடியாது”TTV தினகரன் கருத்து..!!

கட்சியில் இருந்து விலகி  செல்வோரை தடுத்து நிறுத்த முடியாது என்று அமமுக கட்சி பொதுச்செயலாளர்  ttv தினகரன் தெரிவித்துள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திலிருந்து முக்கிய நிர்வாகிகள்  தொடர்ச்சியாக வெளியேறி வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பாக கூட  தங்க தமிழ்ச்செல்வன் அமமுக கட்சியிலிருந்து விலகி திமுகவில் தனது தொண்டர்களுடன் இணைந்தது அரசியல் களத்திலேயே மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அமமுகவின் மற்றொரு முக்கிய நிர்வாகியான இசக்கி சுப்பையா அமமுகவில் இருந்து விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகியது.இதுகுறித்து   […]

Categories
அரசியல் திருநெல்வேலி மாநில செய்திகள்

“தொண்டர்களின் முதல்வராக எடப்பாடி” இசக்கி சுப்பையா பேட்டி ….!!

தொண்டர்களின் முதல்வராக எடப்பாடி பழனிசாமி திகழ்கின்றார் என்று அதிமுகவில் இணையும் இசக்கி சுப்பையா தெரிவித்துள்ளார். அமமுக_வில் இருந்து  செந்தில்பாலாஜி , கலையரசன் மற்றும் தங்க தமிழ்ச்செல்வன் என பலர் திமுகவில் இணைந்த நிலையில் தற்போது அமமுக_வின் அமைப்பு செயலாளராக இருந்த இசக்கி சுப்பையா அமமுக_வில் இருந்து விலகி அதிமுகவில் இணைய இருக்கிறார் இசக்கி சுப்பையா. அதிமுகவின் முன்னாள் அமைச்சராகவும் , அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த இசக்கி சுப்பையா  தனது ஆதரவாளர்களுடன் தென்காசியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் ,  டிடிவி […]

Categories
அரசியல்

அதிமுகவில் இணைய போகிறேன்…இசக்கி சுப்பையா அறிவிப்பு..!!

அமமுக கட்சியில் இருந்து விலகி இசக்கி சுப்பையா அதிமுகவில் இணையப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திலிருந்து முக்கிய நிர்வாகிகள்  தொடர்ச்சியாக வெளியேறி வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பாக கூட  தங்க தமிழ்ச்செல்வன் அமமுக கட்சியிலிருந்து விலகி திமுகவில் தனது தொண்டர்களுடன் இணைந்தது அரசியல் களத்திலேயே மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்திய  நிலையில் அமமுகவின் மற்றொரு முக்கிய நிர்வாகியான இசக்கி சுப்பையா அவர்கள் அமமுகவில் இருந்து விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகியது இந்நிலையில்  இசக்கிசுப்பையா செய்தியாளர்களை […]

Categories
மாநில செய்திகள்

உண்மை அறியாமல் பேச வேண்டாம்…கிரண்பேடிக்கு அதிமுக கண்டனம்..!!

தமிழகத்தின் தண்ணீர் பஞ்சம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கிரண்பேடி பதிவிட்டதற்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. தற்போது சென்னை  மழை பொழிவு இல்லாமல் கடுமையான வறட்சியைச் சந்தித்து வருகின்ற நிலையில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், சாத்தியமான பதில்களுடன் ஒரு கேள்வி: ”இந்தியாவின் 6-ஆவது மிகப்பெரிய நகரமான சென்னை தற்போது வறட்சியின் முதல் நகரமாக மாறியுள்ளது. 4 ஆண்டுகளுக்கு முன்பு பெய்த மழையால் அதே நகரம் வெள்ளத்தில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இரும்புப் பெண்மணி ஆண்ட தமிழகம் இது “இழிவுபடுத்தி பேசுவது பதவிக்கு அழகல்ல” டிடிவி தினகரன் பாய்ச்சல்…!!

ஒரு மாநிலத்தின் ஆளுநர் பொறுப்பில் இருந்து கொண்டு பக்கத்து மாநில மக்களை இழிவுபடுத்தி பேசுவது அவரது பதவிக்கு அழகல்ல என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.  தற்போது சென்னை  மழை பொழிவு இல்லாமல் கடுமையான வறட்சியைச் சந்தித்து வருகின்ற நிலையில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தனது ட்விட்டர் பக்கத்தில், ”இந்தியாவின் 6-ஆவது மிகப்பெரிய நகரமான சென்னை தற்போது வறட்சியின் முதல் நகரமாக மாறியுள்ளது. 4 ஆண்டுகளுக்கு முன்பு பெய்த மழையால் அதே நகரம் வெள்ளத்தில் மூழ்கியது. வறட்சிக்கு காரணம் […]

Categories

Tech |