Categories
மாநில செய்திகள்

விர்ச்சுவல் ரியாலிட்டியில் கீழடி பொருட்கள்: தயாராகும் உலகத்தர அருங்காட்சியகம்….!!

மெய்நிகர் (Virtual Reality) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கீழடி அகழாய்வில் கிடைத்த பொருட்களைக் கொண்டு கொந்தகையில் அமையவிருக்கும் புதிய அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தவுள்ளதாக அமைச்சர் கே பாண்டியராஜன் கூறியுள்ளார். மதுரையில் கீழடி அகழாய்வு தொல்பொருட்கள் கண்காட்சியை பார்வையிட்ட பின் தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாடுத் துறை அமைச்சர் கே பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது அவர், “கீழடி தொல்பொருட்களை மூன்று அறைகளில் கண்காட்சியாக வைத்துள்ளோம். ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் பார்த்துச் செல்கின்றனர். மதுரை விமான நிலையத்திலிருந்து 12 கி.மீ. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

‘ஸ்டாலினின் விமர்சனங்கள் மக்களிடம் எடுபடாது’ – விஜய பாஸ்கர்

மலிவான அரசியல் செய்து வரும் ஸ்டாலினின் விமர்சனங்கள் மக்களிடம் எடுபடாது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் கூறியுள்ளார். புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேமோகிராம் என்று அழைக்கப்படும் மார்பக புற்றுநோயை கண்டறிவதற்கான கருவியை சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் திறந்து வைத்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜய பாஸ்கர் கூறுகையில், “தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவித்தபடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மார்பக புற்றுநோய் கண்டறியும் கருவி அமைக்கப்படும் என்று அறிவித்ததன் கீழ் புதுக்கோட்டை […]

Categories
அரசியல் கன்னியாகுமாரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

குமரியில் காலியான இரு விக்கெட்டுகள்: அஸ்தமனத்தை நோக்கி அமமுக…!

அமமுகவின் கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் பச்சைமால், எம்ஜிஆர் மன்ற இணைச்செயலாளராக இருந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் நாஞ்சில் முருகேசன் ஆகியோரது தலைமையில் ஏராளமான அமமுகவினர் நாளை முதலமைச்சரை சந்தித்து தாய்க் கழகத்தில் இணைய சென்னைக்கு புறப்பட்டுச் சென்றனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்குப் பின்னர் அதிமுக பல பிரிவுகளாக உடைந்தது. அதில் சசிகலா தலைமையில் டிடிவி தினகரன் அமமுக கட்சியினை தொடங்கினார். அதிமுகவினர் அனைவருமே தன்னுடன்தான் இருக்கின்றனர் என அவர் கூறி வந்தார். […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மகாராஷ்டிரா அரசியலைத் தீர்மானிக்கும் இரு சந்திப்புகள்….!!

மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், உள் துறை அமைச்சர் அமித் ஷா இடையேயான சந்திப்பும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி இடையேயான சந்திப்பும் மகாராஷ்டிரா அரசியலை தீர்மானிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மகாராஷ்டிராவில் பாஜக, சிவசேனா கூட்டணி அரசின் பதவிக்காலம் நவம்பர் 8ஆம் தேதியுடன் முடிவடைவதால் அம்மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் அக்டோபர் 21ஆம் தேதி நடைபெற்றது. இதன் முடிவுகள் 24ஆம் தேதி வெளியிடப்பட்டன. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக 105 […]

Categories
அரசியல் திருநெல்வேலி மாநில செய்திகள்

திருமண நிகழ்ச்சியில் பேனர்: திமுக முன்னாள் எம்எல்ஏ மீது வழக்கு…..!!

திமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் அப்பாவு இல்ல நிகழ்ச்சிக்காக பேனர்கள் வைக்கப்பட்டதை அடுத்து காவல் துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள லெப்பை குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் அப்பாவு. ராதாபுரம் தொகுதியின் முன்னாள் திமுக சட்டப்பேரவை உறுப்பினரான இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவரது இரண்டாவது மகனின் திருமண விழா கடந்த 1ஆம் தேதி நடைபெற்றது. பின்பு இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சி பணகுடி மெயின் ரோட்டில் உள்ள ஜான் […]

Categories
மாநில செய்திகள்

‘ரஜினியை விட திறமையானவர்கள் நிறைய பேர் உள்ளனர்’ – கொந்தளித்த சீமான்

திருவள்ளுவருக்கு காவி வேட்டி அணிவித்து, உலக பொது மறையை மறைத்து தன் வயப்படுத்த நினைக்கிறது பாஜக என்று சீமான் தெரிவித்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில் 2018ஆம் ஆண்டு மே 19ஆம் தேதி மதிமுகவினரும், நாம் தமிழர் கட்சியினரும் மோதிக்கொண்டதில் மதிமுக தொண்டர் ஒருவரின் மண்டை உடைந்தது.இது தொடர்பாக திருச்சி விமான நிலைய காவல்துறையினர் இருதரப்பு மீதும் வழக்குப்பதிவு செய்தனர். இதில், நாம் தமிழர் கட்சி சார்பில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பிரபு, கரிகாலன், இனியன் உள்ளிட்ட […]

Categories
மாநில செய்திகள்

தமிழர்கள் சோமாலியர்கள் ஆகிவிடுவார்கள் – முகிலன் எச்சரிக்கை….!!

புதிய வேளாண் ஒப்பந்த சட்டத்தால் தமிழர்கள் சோமாலியர்களாக மாறிவிடுவார்கள் என்பதால் அனைவரும் அச்சட்டத்தை எதிர்த்து போராட வேண்டும் என்று சமூக செயற்பாட்டாளர் முகிலன் கூறியுள்ளார். ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வேண்டி மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து கடந்த 2017ஆம் ஆண்டு மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், தமுக்கம் மைதானம் உள்ளிட்ட பல இடங்களில் போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட 64 பேர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுவரும் நிலையில், ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பான வழக்கில் இன்று மதுரை […]

Categories
தேசிய செய்திகள்

சிக்குவாரா சின்மயானந்தா? – வலுக்கும் ஆதாரம்!

 சின்மயானந்தாவுக்கு எதிரான ஆதரங்கள் இருக்கும் மடிக்கணினியை சிறப்பு புலனாய்வுக்குழு கைப்பற்றியது. பாஜக மூத்தத் தலைவர்களில் ஒருவரான சின்மயானந்தா உத்தரப் பிரதேசத்தில் பல கல்லூரிகளை நடத்தி வருகிறார். தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக சட்டக்கல்லூரி மாணவி ஒருவர் சின்மயானந்தாவுக்கு எதிராக குற்றச்சாட்டு எழுப்பினார்.இதனைத் தொடர்ந்து, அந்த மாணவி மாயமானார். இதனால் மாணவியின் தந்தை காவல் நிலையத்தில் சின்மயானந்தா, தன் மகளை கடத்தியாகப் புகார் அளித்தார். இதற்கிடையே, காணாமல்போன சட்டக் கல்லூரி மாணவியை ராஜஸ்தானிலிருந்து மீட்டுக் கொண்டுவந்த உத்தரப் பிரதேச […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

திடீர் அரசியல் திருப்பம்….. மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி… கோட்டை விட்ட பாஜக…..!!.

மகாராஷ்டிராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி சிவசேனா ஆதரவில் அமைய வாய்ப்புள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. மகாராஷ்டிராவில் பாரதிய ஜனதா, சிவசேனா கூட்டணி அரசின் பதவிக்காலம் வருகிற 8ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு முன்னதாக வருகிற 7ஆம் தேதி புதிய அரசு அமையவுள்ளது. இதையடுத்து புதிய அரசை தேர்ந்தெடுக்கும் ஜனநாயகத் திருவிழா (தேர்தல்) கடந்த மாதம் 21ஆம் தேதி நடந்தது. வாக்குகள் 24ஆம் தேதி எண்ணப்பட்டன. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக 105 தொகுதிகளிலும், சிவசேனா […]

Categories
தேசிய செய்திகள்

‘பால் தாக்கரே இருந்தால் தைரியம் வருமா?’ பாஜகவுக்கு ரோஹித் பவார் கேள்வி…!!

பால் தாக்கரே உயிருடன் இருந்திருந்தால், பாரதிய ஜனதாவுக்கு இத்தனை தைரியம் வருமா? என்று தேசிய வாத காங்கிரஸ் எம்.எல்.ஏ ரோஹித் ராஜேந்திர பவார் கேள்வி எழுப்பியுள்ளார். தேசியவாத காங்கிரஸ் நிறுவனர் சரத் பவாரின் மருமகனும், மகாராஷ்டிரா மாநிலத்தின் கார்ஜட் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ரோஹித் ராஜேந்திர பவார் முகநூலில் பாஜகவின் தற்போதைய நிலைப்பாடு குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘மக்களால் பெரிதும் மதிக்கப்பட்ட பல தலைவர்களால் ஆசிர்வதிக்கப்பட்ட பூமி மகாராஷ்டிரா. அப்படிப்பட்ட ஒரு தலைவர் தான் பால […]

Categories
தேசிய செய்திகள்

2 வாரம் தான் ….. ”முதல்வருக்கு கெடு”….. அசால்ட் கொடுக்கும் தெலுங்கு ‘தல’

ஆந்திராவில் உள்ள மணல் தட்டுப்பாட்டை இரண்டு வாரங்களில் தீர்க்கவில்லை என்றால் பெரும் விளைவுகளை மாநில அரசு சந்திக்க நேரிடும் என்று நடிகர் பவன் கல்யாண் எச்சரித்துள்ளார். ஆந்திரப் பிரதேசத்தில் தற்போது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சராக இருந்து வருகிறார். ஜெகன் தற்போது அங்கு அதிரடியான மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இதற்கிடையில் ஆந்திராவில் தற்போது மணல் மீது ஜெகனின் அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. இதன் காரணமாக கடுமையாக ஏற்பட்டுள்ள மணல் தட்டுப்பாட்டின் […]

Categories
மாநில செய்திகள்

நீட் தேர்வை ஏன் திரும்ப பெறக்கூடாது ? உயர்நீதிமன்றம் காட்டம் …!!

நீட் தேர்வை ஏன் திரும்ப பெறக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.  நீட்தேர்வு ஆள்மாறாட்டம் குறித்த பல்லக்கு  கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அமர்வு விசாரித்தது இந்த வழக்கின் இன்றைய விசாரணையில் ஆள்மாறாட்டம் தொடர்பாக சிபிசிஐடி வழக்கறிஞர் தேசிய தேர்வு முகமையிடம் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள்  கைரேகை , ஆவணங்கள் பெறப்பட்டதாகவும் , தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு மருத்துக் கல்லூரி மற்றும் நிகர் நிலைப் பல்கலைக் கழகங்களில் விசாரணை நடைபெற்று வருவதாகவும், எவ்வளவு காலத்தில் விசாரணையை முடிக்க […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“நில தகராறு” அதிமுக பிரமுகர் படுகாயம்……. 18 பேர் மீது வழக்கு…..!!

திருவாரூர் மாவட்டத்தில் நிலத்தகராறு ஏற்பட்ட தகராறில் அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் படுகாயம்அடைந்தார். திருவாரூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பரமசிவத்தின் உறவினரான ஜெயமாலினி என்பவர் நிலம் வாங்கியது தொடர்பாக அதே ஊரைச் சேர்ந்த கோபாலன் என்பவருடன் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று அந்த வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஜெயமாலினி மற்றும் பரமசிவம் ஆகியோர் உடன், அங்கு வந்த கோபால், ராமன் மற்றும் பலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கூரிய கற்களால் தாக்கியதாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

காவி உடையா ? கொதித்தெழுவார்கள்….. பதிலடி கொடுப்பார்கள்…. வைகோ ஆவேசம் …!!

திருவள்ளுவர் குறித்து பாஜக பதிவிட்டுள்ள கருத்து சர்சையை ஏற்படுத்திய நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளியன்று தமிழ்நாடு பாஜகவின் ட்விட்டர் பக்கத்தில் வெளியான பதிவு ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பாஜக இட்ட அந்த பதிவில் காவி உடையணிந்து நெற்றியில் திருநீற்றைப் பூசியிருப்பது போல் திருவள்ளுவரின் படம் பதிவிடப்பட்டிருந்தது. இதற்க்கு திமுக உட்பட பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர். அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு குறள் விளக்கம்: எல்லா எழுத்துக்களும் […]

Categories
தேசிய செய்திகள்

பிரியங்கா காந்தியின் செல்போனை மத்திய அரசு ஹேக் செய்துள்ளது – காங்கிரஸ் குற்றச்சாட்டு …!!

 காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் செல்போனை மத்திய அரசு ஹேக் செய்துள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. இஸ்ரேலைச் சேர்ந்த என்எஸ்ஓ தொழில்நுட்ப நிறுவனம், ’பெகாசஸ்’ என்ற மால்வேரை (Pegasus malware) அரசியல் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட சிலரின் வாட்ஸ்அப் செயலிக்கு அனுப்பி அவர்களை உளவு பார்த்ததாகக் கூறி சான் பிரான்சிஸ்கோவில் உள்ள நீதிமன்றத்தில் ஃபேஸ்புக் நிறுவனம் குற்றஞ்சாட்டியுள்ளது. இந்தியாவில் சுமார் 40 கோடி மக்கள் வாட்ஸ்அப்பை பயன்படுத்திவரும் நிலையில் இவ்விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

திருக்குறளுக்கு புதிய விளக்கம் கொடுத்த ஹெச். ராஜா ட்வீட்டால் சர்ச்சை…!!

 ‘திருக்குறள் படித்து திருந்தப் பாருங்கள்’ என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ட்வீட் செய்திருந்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா ட்வீட் செய்துள்ளார். கடந்த வெள்ளியன்று தமிழ்நாடு பாஜகவின் ட்விட்டர் பக்கத்தில் வெளியான பதிவு ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பாஜக இட்ட அந்த பதிவில் காவி உடையணிந்து நெற்றியில் திருநீற்றைப் பூசியிருப்பது போல் திருவள்ளுவரின் படம் பதிவிடப்பட்டிருந்தது. மானுட நேயத்தைப் போதித்த திருவள்ளுவருக்கு மதச்சாயம் பூசுவது கண்டிக்கத்தக்கது […]

Categories
தேசிய செய்திகள்

சமூக அமைதிக்குத் துணை நிற்கும் இஸ்லாமிய அமைப்புகள்….!!

 சமூகத்தில் அமைதி நிலவிட அயோத்தி வழக்கின் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும் என இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அயோத்தி வழக்கின் 40 நாள் விசாரணை அக்டோபர் 16ஆம் தேதி முடிவடைந்ததைத் தொடர்ந்து, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. முன்னதாக வழக்கை சுமுகமாக தீர்த்து வைக்க உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கலிபுல்லா தலைமையில் அமைக்கப்பட்ட மத்தியஸ்தர் குழுவின் முதல் முயற்சி தோல்வியைத் தழுவியது. இதனைத் தொடர்ந்து தனது இரண்டாவது அறிக்கையை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

‘வாரிசு இருந்தால்தான் அரசியலுக்கு வரமுடியும்’ – ஸ்டாலின் காட்டம்

வாரிசு இருந்தால்தான் அரசியலுக்கு வரமுடியும், வாரிசு இல்லையென்றால் எப்படி வர முடியும் என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். புதுக்கோட்டையில் நடைபெற்ற திமுக நிர்வாகியின் இல்லத் திருமண விழாவில் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், ‘பெரியார், அண்ணா, கலைஞர் என அனைவரும் இன்றும் நம் உயிரோடு கலந்து உள்ளனர். அவர்கள் நம்மோடு இருக்கும் வரை எந்த கொம்பனாலும் இங்கு வந்து நுழைந்து விட முடியாது. வாரிசு அரசியலை பற்றி சிலர் விமர்சனம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”குறளை தப்பு இல்லாம சொல்லுங்க” அசிங்கபட்ட முக.ஸ்டாலின் ….!!

முக.ஸ்டாலின் திருக்குறளை தவறுமின்றி உச்சரித்தால் பாஜக பதிவை நீக்கி விடுகின்றோம் என்று பாஜக தெரிவித்துள்ளது. நேற்று தாய்லாந்தில் தாய் மொழியில் திருக்குறளை பிரதமர் மோடி வெளியிட்டார்.அதனை ஒட்டி தமிழக பாஜக சார்பில் டுவிட்டரில் காவி உடை நெற்றியில் விபூதியுடன் திருவள்ளுவர் படத்தை வெளியிட்டு செய்தி ஒன்று பதிவிடப்பட்டது. அதில் திருக்குறள் ஒன்றை பதிவிட்டு அதில் இறை நம்பிக்கை உள்ளவர்களை படிப்பவர்களுக்கு அவர்கள் கற்ற கல்வியால் என்ன பயன் என கேள்வி எழுப்பி உள்ளது அந்த குறளை கற்று திராவிடர் கழகமும் திமுகவை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழ் துரோகம் …. ”படிச்சு திருந்துங்க” …. பாஜகவுக்கு ஸ்டாலின் வேண்டுகோள் …!!

எத்தனை வர்ணம் பூசினாலும், உங்கள் வர்ண சாயம் வெளுத்துவிடும் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார். திருவள்ளுவர் தொடர்பான தமிழக அரசின் அதிகாரப்பூர்வ படத்தில் மதரீதியான அடையாளம் எதுவும் இருக்காது. இந்நிலையில் நேற்று தாய்லாந்தில் தாய் மொழியில் திருக்குறளை பிரதமர் மோடி வெளியிட்டார்.அதனை ஒட்டி தமிழக பாஜக சார்பில் டுவிட்டரில் காவி உடை நெற்றியில் விபூதியுடன் திருவள்ளுவர் படத்தை வெளியிட்டு செய்தி ஒன்று பதிவிடப்பட்டது. அதில் திருக்குறள் ஒன்றை வெளியிட்டுள்ளது. இறை நம்பிக்கை உள்ளவர்களை படிப்பவர்களுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”காவி உடையில் வள்ளுவர்” நம்பி வாழும் கம்யூனிஸ்ட் ….. கிளம்பிய சர்சை …!!

காவி உடை நெற்றியில் விபூதியுடன் திருவள்ளுவர் படத்தை தமிழக பாஜக வெளியிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளுவர் தொடர்பான தமிழக அரசின் அதிகாரப்பூர்வ படத்தில் மதரீதியான அடையாளம் எதுவும் இருக்காது. இந்நிலையில் நேற்று தாய்லாந்தில் தாய் மொழியில் திருக்குறளை பிரதமர் மோடி வெளியிட்டார்.அதனை ஒட்டி தமிழக பாஜக சார்பில் டுவிட்டரில் காவி உடை நெற்றியில் விபூதியுடன் திருவள்ளுவர் படத்தை வெளியிட்டு செய்தி ஒன்று பதிவிடப்பட்டது. அதில் திருக்குறள் ஒன்றை வெளியிட்டுள்ளது. இறை நம்பிக்கை உள்ளவர்களை படிப்பவர்களுக்கு அவர்கள் கற்ற […]

Categories
தேசிய செய்திகள்

5 ட்ரில்லியன் டாலர் இலக்கு…… தொழில் செய்ய இந்தியாவுக்கு வாங்க….. அந்நிய நாட்டாருக்கு மோடி அழைப்பு….!!

தாய்லாந்து சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு ஆதித்யா பிர்லா குடும்பத்தின் சிறப்பு விழா ஒன்றில் பங்கேற்று உரையாற்றினார். தாய்லாந்தில் பிரபல தொழிலதிபர் ஆதித்யா பிர்லா குடும்பத்தினரின் சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி இந்தியாவில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை சுட்டிக்காட்டிப் பேசினார். அதில் முதலீடு செய்வதற்கும் எளிதாக தொழில் புரிவதற்கும்  உலகிலேயே மிகச் சிறந்த இடம் இந்தியா என்று குறிப்பிட்டார். எளிதாக தொழில் செய்வதற்கான சூழல் வாழ்க்கை தரம் உட்கட்டமைப்பு உற்பத்தி திறன் காப்பு உரிமைகளின் […]

Categories
அரசியல்

ரஜினி ரசிகனாக மகிழ்ச்சி அடைகிறேன்……. செல்லூர் ராஜு சிறப்பு பேட்டி…!!

நடிகர் ரஜினிகாந்துக்கு மத்திய அரசு விருது வழங்கி இருப்பது ரஜினி ரசிகரான  எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரை நெடுஞ்சாலை அருகில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் அதிமுக உறுப்பினர் அட்டைகள் வழங்கும் விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அமைச்சர் செல்லூர் ராஜு பகுதிவாரியாக உறுப்பினர் அட்டைகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூட்டுறவு வங்கி முறைகேடுகளில் யார் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் மீது தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் […]

Categories
தேசிய செய்திகள்

5_ஆம் தேதிக்குள் வாங்க ”குடும்ப நலன் கருதி வாய்ப்பு” சந்திரசேகர ராவ் கெடு …!!

தெலுங்கானாவில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்துத் தொழிலாளர்கள் வரும் 5ஆம் தேதிக்குள் வேலைக்குத் திரும்ப வேண்டும் என்று அந்த மாநில முதலமைச்சர் சந்திர சேகர ராவ் அறிவுறுத்தியுள்ளார். தெலுங்கானாவில் நடைபெற்று வரும் போக்குவரத்துத் தொழிலாளர்களின் போராட்டம் குறித்து, அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ‘தெலங்கானா போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு மீண்டும் ஒருமுறை வாய்ப்பை வழங்குகிறோம். வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள், வருகிற 5ஆம் தேதிக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும். உங்களின் குடும்ப […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க தீவிரம் காட்டும் பாஜக…..!!

மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, கூட்டணி கட்சிகளான பாஜக, சிவசேனா கட்சிகளுக்கிடையே மாற்றுக் கருத்து நிலவி வருகிறது. இந்நிலையில், அங்கு ஆட்சி அமைப்பதில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது. மகாராஷ்டிராவில் அக்டோபர் 21ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதற்கான முடிவுகள் 24ஆம் தேதி வெளியாகின. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக கூட்டணி 161 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. 105 இடங்களில் பாஜக வென்ற போதிலும், தனித்து ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை அக்கட்சிக்குக் கிடைக்கவில்லை. இதனை […]

Categories
தேசிய செய்திகள்

எல்லாமே அமித்ஷா தான்…. ”ஆட்சியை கவிழ்த்தோம்”…. எடியூரப்பா_வின் சர்சை ஆடியோ

கர்நாடகா அரசியலில் குமாரசாமி அரசு கவிழ்ப்பதற்கு நடைபெற்ற அனைத்தும் அமித்ஷா_வுக்கு தெரிந்தே நடந்ததாக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் குமாரசாமி அரசுக்கு எதிராக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த விவகாரத்தில் அமித்ஷா மேற்பார்வையில் தேவையான ஏற்பாடுகள் செய்யப் பட்டதாக அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா  கூறிய ஆடியோ ஓன்று வெளியாகி கர்நாடக அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் மதச்சார்பற்ற ஜனதா அரசுக்கு எதிராக அந்த கூட்டணியைச் சேர்ந்த எம்எல்ஏக்களை போர்க்கொடி தூக்கியதால் குமாரசாமி அரசு கவிழ்ந்தது. இந்நிலையில் பாஜக […]

Categories
தேசிய செய்திகள்

”என்னையும் வேவு பார்த்தார்கள்” – திடுக்கிடும் தகவல்களை வெளியிட்ட மம்தா….!!

இந்தியாவைச் சேர்ந்த பலர் வாட்ஸ்அப் மூலம் வேவு பார்க்கப்பட்ட நிலையில், தன்னையும் மத்திய அரசு வேவு பார்த்ததாக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த பல பத்திரிகையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோரை, இஸ்ரேல் நிறுவனம் ஒன்று வாட்ஸ்அப் செயலி மூலம் வேவு பார்த்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இதனைத் தொடர்ந்து வாட்ஸ்அப் செயலி மூலம் பல இந்தியர்களின் தகவல்கள் திருடப்பட்டதாக அந்நிறுவனம் ஒப்புக்கொண்டது. இந்நிலையில், இதுகுறித்து பதிலளிக்க மத்திய அரசு அவர்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

உத்தரப் பிரதேசத்தில் 300 விவசாயிகள் மீது வழக்குப்பதிவு…..!!

உத்தரப் பிரதேசத்தில் 300 விவசாயிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் ஃபிலிப்பிட் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் விவசாயிகள் தங்களது விவசாய கழிவுப் பொருட்களை தெருக்களில் வைத்து எரித்ததாக கூறப்படுகிறது.இதுதொடர்பாக தேசிய பசுமைத் தீர்பாயத்தின் உத்தரவின் பேரில், அப்பகுதியைச் சேர்ந்த வருவாய் அலுவலர்கள் புகார் அளித்தனர். இதனையடுத்து சுமார் 300 விவசாயிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவசாயிகள் பில்சந்தா, நேரியா, அமரியா, புரன்பூர், சேரமாவூ, மதோடண்டா, ஜகனபாத், பிசால்பூர் மற்றும் கஜ்ராவூலா கிராமங்களைச் சேர்ந்தவர்கள்.விவசாயிகள் […]

Categories
தேசிய செய்திகள்

தாய்லாந்து மொழியில் திருக்குறள் வெளியிடவுள்ள நரேந்திர மோடி…..!!

தாய்லாந்து வாழ் இந்தியர்களிடையே உரையாற்றவுள்ள நரேந்திர மோடி, தாய்லாந்து மொழியில் திருக்குறள் நூலை வெளியிடவுள்ளார். மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக தாய்லாந்துக்கு பிரதமர் நரேந்திர மோடி புறப்பட்டார். அங்கு நடக்கும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பிலும் பிராந்திய ஒருங்கிணைந்த பொருளாதார கூட்டணியின் மாநாட்டிலும் அவர் கலந்து கொள்ளவுள்ளார். தாய்லாந்து வாழ் இந்தியர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில் சீக்கிய மதகுரு குருநானக்கின் 550ஆவது பிறந்தநாளை முன்னிட்டு நாணயம் வெளியிடவுள்ளார். திருக்குறளை தாய்லாந்து மக்களின் பிரதான மொழியான ‘தாய்’ மொழியில் வெளியிட்டு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

லால்பகதூர் சாஸ்திரி சிலைக்கு ராஜ்நாத் சிங் மரியாதை ….!!

மறைந்த முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் திருவுருவச் சிலைக்கு மலர்த்தூவி பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை செலுத்தினார். உஸ்பெகிஸ்தான் நாட்டின் தலைநகர் தாஷ்ண்ட்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு மாநாடு நேற்று தொடங்கியது. இருநாள்கள் நடக்கும் மாநாடு இன்று நிறைவடைகிறது. இந்தியா சார்பில், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மாநாட்டில் கலந்துகொள்கிறார்.ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகளுக்கிடையே பொருளாதார உறவை வலுப்படுத்துவது குறித்து இம்மாநாட்டில் விவாதிக்கப்படவுள்ளது. இதுமட்டுமின்றி அமைப்பில் உள்ள மற்ற நாடுகளுடன் உறவை வலுப்படுத்த […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

குடியரசுத் தலைவர் உங்கள் பாக்கெட்டிலா? – பாஜகவை கலாய்க்கும் சிவசேனா

மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமைக்கப்படும் என பாஜக மூத்தத் தலைவர் தெரிவித்ததற்கு, அவர் என்ன உங்கள் பாக்கெட்டில் உள்ளாரா என சிவ சேனா கேள்வி எழுப்பியுள்ளது. மகாராஷ்டிராவில் அக்டோபர் 21ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. தேர்தலின் முடிவுகள் 24ஆம் தேதி வெளியாகின. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக கூட்டணி 161 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. 105 இடங்களில் வென்ற போதிலும், தனித்து ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மையான 145 இடங்கள் அக்கட்சிக்குக் கிடைக்கவில்லை. இதனைத் தனக்குச் சாதகமாகப் […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாக களமிறங்கிய பாகிஸ்தானியர்கள்….!!

காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாக பாகிஸ்தானியர்கள் அந்நாட்டு முக்கிய நகரங்களில் பேரணி நடத்தினர். காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்தை, மத்திய அரசு சட்டத்திருத்த மசோதா கொண்டுவந்ததன் மூலம் நீக்கியது. இதனைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் பதற்றம் நிலவியது. காஷ்மீரின் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்திய – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே எல்லைப்பகுதிகளில் தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெற்றன. போக்குவரத்து, வர்த்தகம் ஆகியவற்றை பாகிஸ்தான் முடக்கிக்கொண்டது. இந்நிலையில் இஸ்லாமாபாத், கராச்சி, லாகூர் போன்ற […]

Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் நீடிக்கும் அரசியல் சிக்கல்: ஆளுநரை சந்தித்தார் ஃபட்னாவிஸ்

மகாராஷ்டிர மாநிலத்தில் புதிய அரசு அமைவதில் சிக்கல் நீடித்துவரும் பரபரப்பான சூழலில், முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் அம்மாநில ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்துப் பேசியுள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த 21ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதற்கான முடிவுகள் 24ஆம் தேதி வெளியாகின. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக கூட்டணி 162 இடங்களை கைப்பற்றியுள்ளது. 104 இடங்களில் வென்ற போதிலும், தனித்து ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை பாஜக-வுக்குக் கிடைக்கவில்லை. இதனை தனக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொண்ட சிவசேனா, வெறும் […]

Categories
தேசிய செய்திகள்

மோடியின் விமானத்திற்கு அனுமதி தர மறுத்த பாகிஸ்தான்….!!

சவுதி அரபியாவிற்கு அரசுமுறை பயணமாக செல்லும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விமானம் தங்கள் நாட்டு வான்வழியை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்க பாகிஸ்தான் மறுத்துள்ளது. காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு சட்டத்திருத்த மசோதா கொண்டுவந்ததன் மூலம் நீக்கியது. இதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் பதற்றம் நிலவியது. காஷ்மீரின் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதனிடையே, இந்திய – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே எல்லைப்பகுதிகளில் தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெற்றன. […]

Categories
தேசிய செய்திகள்

ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய மோடி …!!

ராணுவ வீரர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஜம்மு-காஷ்மீரில் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடினார். தீபாவளிப் பண்டிகை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டுவருகிறது. பிரதமர் மோடி வழக்கம்போல் இம்முறையும் தீபாவளியை ராணுவ வீரர்களுடன் கொண்டாடினார். ஜம்மு-காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்திற்குச் சென்ற பிரதமர் மோடி ராணுவ வீரர்களைச் சந்தித்து தன் வாழ்த்துகளை தெரிவித்தார். நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் மத்தியில் அவர் உரையாற்றினார். பாகிஸ்தான் ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க 1947ஆம் ஆண்டு அக்டோபர் 27 அன்று இந்திய ராணுவம் காஷ்மீருக்குச் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”ஸ்டாலினுக்கு வாய்ப்பூட்டு” ஏமாற்றுவதில் கைதேர்ந்தவர்கள் திமுகவினர் – கடம்பூர் ராஜீ

சதுரங்க வேட்டை படத்தைப் போன்று மக்களை ஏமாற்றுவதில் கைதேர்ந்தவர்கள் திமுகவினர் என செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலில் ஐப்பசித் திருக்கல்யாணத் திருவிழா நடைபெற்றது. இதன் 9ஆம் திருவிழாவில் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜு கலந்துகொண்டார். அதையடுத்து செய்தியாளர்களிடம் பேசுகையில், “அரசு விடுமுறை நாள்களில் திரையரங்குகளில் சிறப்புக் காட்சிக்கு அனுமதி ஏற்கனவே நடைமுறையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்குநேரியில் காங்கிரஸ் படுதோல்வி – காரணம்?

நடந்து முடிந்த நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகர் படுதோல்வி அடைந்துள்ளார். இடைத்தேர்தல் அறிவித்த சமயத்தில் நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதியை திமுகவிடம் பெரிதும் போராடி காங்கிரஸ் பெற்றது என தகவல்கள் அப்போது வெளியானது. காங்கிரஸ் பலம் பெற்ற தொகுதி என கூறப்பட்ட நிலையில் தற்போது நாங்குநேரியில் காங்கிரஸ் படுதோல்விக்கான காரணம் என்ன என கேள்வி எழுந்துள்ளது.நாங்குநேரி சட்டப்பேரவை இடைதேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் 33 ஆயிரத்து […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சுர்ஜித்தை மீட்க முடியல….. ”வெட்கக் கேடானது” …. திருமாவளவன் வேதனை …!!

24 அடியில் சிக்கிய குழந்தையை மீட்க தொழில்நுட்ப கருவிகள் இல்லாதது வெட்கக் கேடு என்று திருமாவளவன் வேதனை தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுகாட்டுப்பட்டியைச் சேர்ந்த ஆரோக்கியராஜ், மேரி தம்பதியின் குழந்தை சுஜித். இவர் நேற்று மாலை 5.40 மணியளவில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த ஆழ்துளை கிணற்றில் தெரியாமல் தவறி விழுந்தார்.இதனை தொடர்ந்து ஆழ்துளைக் கிணற்றில் இருந்து சுஜித்தை மீட்க தீயணைப்புப் படையினர் நேற்று முதல் 21 மணி நேரத்திற்கு மேலாக […]

Categories
அரசியல்

தமிழிசையை தொடர்ந்து…… மற்றொரு பாஜக தலைவர்…… மிசோரின் ஆளுநராக நியமனம்….!!

மிசோரின் ஆளுநராக கேரள மாநிலத்தின் பாஜக தலைவர் பி.எஸ்.பி.ஸ்ரீதரன் பிள்ளை நியமிக்கப்பட்டுள்ளார்.  டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை அறிக்கை ஒன்று வெளியானது. அதில் கேரள மாநிலத்தின் பாஜக தலைவரான பிஎஸ் ஸ்ரீதரன் பிள்ளை மிசோரின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தது. மேலும் லடாக்கின் துணை ஆளுநராக ராதாகிருஷ்ணன் மாத்தூர் என்பவரும், ஜம்மு-காஷ்மீர் ஆளுநராக  கிரிஷ் சந்திர என்பவரும், கோவாவின் ஆளுநராக ஜம்மு-காஷ்மீர் ஆளுநராக இருந்த சத்யகோபால் என்பவரும் நியமிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஏற்கனவே தமிழக பாஜக […]

Categories
மாநில செய்திகள்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீபாவளி வாழ்த்து…!!

அனைவரது வாழ்விலும் அமைதி தவழட்டும், இன்பம் நிறையட்டும், நலங்களும் வளங்களும் பெருகட்டும் என்று  முதல்வர் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தீப ஒளித் திருநாளான தீபாவளி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.மக்களை பெருந்துன்பத்திற்கு ஆளாக்கிய நரகாசுரன் என்னும் அரக்கனை அன்னை மகாலட்சுமி துணையுடன் திருமால் அழித்த தினமே தீபாவளி பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. இத்தீபாவளி திருநாள், தீமைகள் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ஆதித்ய தாக்கரே முதலமைச்சராக வாய்ப்பு..?

மகாராஷ்டிரா தேர்தலில் யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், வொர்லி தொகுதியில் வெற்றிபெற்ற ஆதித்ய தாக்கரேவை முதலமைச்சராக்க வேண்டும் என்று சிவசேனா கட்சியின் எம்எல்ஏக்கள் பாஜகவிடம் வலியுறுத்தி வருகின்றனர். மகாராஷ்டிராவில் 288 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 21ஆம் தேதி நடத்தப்பட்டு, 24ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி பாஜக 105 இடங்களையும், சிவசேனா 56 இடங்களையும் கைப்பற்றியது. பாஜக சிவசேனாவுடன் தேர்தலுக்கு முன்பு செய்துகொண்ட உடன்படிக்கையின்படி மகாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சி நடைபெற விருக்கிறது. இருந்தபோதிலும், யாருக்கும் தனிப் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

விக்கிரவாண்டியில் திமுக தோல்வி! – ஒரு அலசல் டேட்டா ரிப்போர்ட் …!!

விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவின் தோல்விக்கான காரணம் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரு சட்டப்பேரவைத் தொகுதிக்கு கடந்த 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இதையடுத்து 24ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. ஆளும் தரப்புக்கு வெற்றி கிட்டியது. திமுகவின் போராட்டம் தோல்வியில் முடிந்தது. விக்கிரவாண்டியில் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 40 விழுக்காடு உள்ளனர். பட்டியலினத்தவர்கள் 25 விழுக்காடும் உள்ளனர். மீதமுள்ளவர்கள் இஸ்லாமிய, கிறிஸ்தவ சிறுபான்மையினரும் மற்ற சமுகத்தினர் சொற்ப அளவிலும் உள்ளனர். இத்தொகுதியில் இரு கட்சிகளும் (திமுக, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

‘உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வெற்றிபெறும்…!!

விரைவில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக வெற்றிபெறும் என அமைச்சர் கடம்பூர் ராஜு நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தீபாவளிக்கு வெளியான பிகில் திரைப்படத்திற்கு முதலமைச்சரின் ஆலோசனையின்பேரில் சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.பண்டிகை காலங்களில் வெளியாகும் திரைப்படங்களுக்கு சிறப்புக் காட்சி என்ற பெயரில் அதிக டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுவதாக தொடர்ச்சியாக புகார் வந்ததைத் தொடர்ந்து, அதை கட்டுப்படுத்தும் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மராட்டிய மண்ணில் அமைச்சராகும் தமிழர் கேப்டன் தமிழ்ச்செல்வன்?

மகராஷ்டிரா மாநில சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக சார்பில் வெற்றிபெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழ்ச்செல்வனுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி மகத்தான வெற்றிப் பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. இதில் பாஜக 105 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்நிலையில், மும்பையின் முக்கியத் தொகுதிகளில் ஒன்றான சியோன் கோலிவாடாவில் பாஜக சார்பில் போட்டியிட்ட கேப்டன் தமிழ்ச்செல்வன் இரண்டாவது முறையாக வெற்றி வாகைச் சூடியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் பிலாவிடுதி […]

Categories
அரசியல்

கத்தரிக்காய் முற்றினால் கடை வீதிக்கு வந்துவிடும் – டிடிவி தினகரன் சூசகம் …!!

கத்தரிக்காய் முற்றினால் கடை வீதிக்கு வந்துவிடும் என்று, முதலமைச்சர் பழனிசாமியை புகழேந்தி சந்தித்தது தொடர்பாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவை சந்தித்த பின் அமமுக பொதுச் செயலாளர் தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “1991ஆம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு ஆர்கே நகர் தவிர, மற்ற இடைதேர்தலில் ஆளும் கட்சி தான் வென்றுள்ளது. இது பெரிய இமாலய வெற்றி என சொல்வதற்கு ஒன்றும் இல்லை.இடைத்தேர்தலில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

2 தொகுதியிலும் வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் வரும் 29-ம் தேதி பதவியேற்பு..!!

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளில் அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் வரும் 29-ம் தேதி பதவியேற்கின்றனர். தமிழகத்தில் காலியாக இருந்த விக்கிரவாண்டி , நாங்குநேரி ஆகிய இரண்டு தொகுதிக்கு கடந்த  21_ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் அதிமுக சார்பில் விக்கிரவாண்டியில் முத்தமிழ் செல்வனும் , நாங்குநேரியில் நாராயணனும் வேட்பாளராக நிறுத்தப்பட்டனர். திமுக தலைமையிலான கூட்டணியின் நாங்குநேரியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ரூபி மனோகரனும் , விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளர் புகழேந்தியும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டனர். அதே போல நாம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முன்னாள் முதல்வர் மகன் வெற்றி……. “2 வது இடம்” பாஜக கூட்டணியை பின்னுக்கு தள்ளிய நோட்டா….!!

மஹாராஷ்டிராவில் முன்னாள் முதல்வர் போட்டியிட்ட அதே தொகுதியில் அவரது இளைய மகன் வெற்றி பெற்ற நிலையில், பாஜக கூட்டணியை நோட்டா   பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது. மகாராஷ்டிராவில் முன்னாள் முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் எஸ்சி எஸ்டி வாக்குகள்  அதிகம் உள்ள லத்தூர் தொகுதியில் பலமுறை போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அவர் மரணமடைந்த நிலையில், அவரது இளைய மகன் தீரஷ் தேஷ்முக்  அதே தந்தை நின்ற அதே தொகுதியில் நின்று 67.63 வாக்கு சதவிகிதமும் மொத்தம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

42 நாள் ஏன்….? வாக்கு சீட்டு முறையை கொண்டு வாங்க…… சீமான் வலியுறுத்தல்….!!

தேர்தலில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். நடைபெற்று முடிந்த நான்குநேரி, விக்கிரவாண்டி தேர்தல் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் இரண்டு இடங்களையும் அதிமுக கைப்பற்றியது. இது குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து கூறுகையில், பொதுவாக இடைத்தேர்தலில் அதிகாரத்தில் இருப்பவர்கள் வெற்றி பெறுவது இயல்பான ஒன்றாகும். மேலும் இந்தியாவை பொருத்தவரையில் வாக்கு சீட்டு முறையை கொண்டு வந்து வாக்கு இயந்திரம் முறையை ஒழிக்க […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ஆட்சி அமைக்கும் சாவி….”10 மாதத்தில் 10 இடம்” கிங் மேக்கர் துஷன் சவுதாலா…!!

ஹரியானாவில் ஓராண்டு கூட நிறைவடையாத ஜனநாயக் ஜனதா கட்சி கிங் மேக்கராக உருவெடுக்கும் சூழல் நிலவுகிறது. 90 சட்டப்பேரவை கொண்ட ஹரியானாவில் தனிப்பெரும்பான்மை பெற 46 தொகுதிகள் கைப்பற்ற வேண்டும். ஆனால் பாஜக 40 இடங்களிலும் காங்கிரஸ் 31 இடங்களிலும் வெற்றி பெற்றது. சாவி சின்னத்தில் போட்டியிட்டு ஆட்சி அமைப்பதற்கான சாவியையும்  கைப்பற்றியிருக்கும் ஜனநாயக் ஜனதா கட்சி 10 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. வாக்கு எண்ணிக்கை முடிவில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் ஜனநாயக் ஜனதா கட்சியின் இளம் தலைவரான துஷன் சவுதாலா ஆட்சியை தீர்மானிப்பவராக இருந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

டைம் கொடுங்க… ”வாக்கு பெட்டி வரட்டும்” … நடத்திடுவோம் – தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிடுவதற்கு தேர்தல் ஆணையம் நான்கு வாரகாலம் கூறியிருக்கிறது. தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த கோரி வழக்கறிஞர்கள் ஜெயசுகின் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் அக்டோபர் 31-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்த தமிழக மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை வெளியிடுவதற்கு நான்கு வார கால அவகாசம் கோரியுள்ளது. மகாராஷ்டிரா , […]

Categories

Tech |