Categories
அரசியல் மாநில செய்திகள்

உள்ளாட்சித் தேர்தல்: கேப்டன் கேட்பது கிடைக்குமா?

உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடபெற சூழல் உருவாகி உள்ளது. இதில் அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக 3 மேயர் இடங்களை கேட்டுள்ளதாகவும், அதற்கு அதிமுக தயக்கம் காட்டி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. உள்ளாட்சித் தேர்தல் ஜு ரம் தமிழ்நாட்டை தொற்றிக் கொண்டுள்ளது. மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தலை நடத்த 90 சதவீதம் தயாராகி விட்டது. அதேபோல அரசியல் கட்சிகளும் தொண்டர்களிடம் விருப்ப மனுக்கள் வாங்கி விட்டன. இருபெரும் கட்சிகளான அதிமுகவும், திமுகவும் கூட்டணி வைத்தே […]

Categories
Uncategorized

பயணங்கள் தொடரும்…! அடடே ஓ.பி.எஸ்.!

பத்து நாட்கள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றிருந்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை திரும்பினார். துணை முதலமைச்சரும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஒ.பன்னீர்செல்வம், 10 நாட்கள் அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றிருந்தார். அவருடன் அவரது மகனும் தேனி நாடாளுமன்ற உறுப்பினருமான ஓ.ரவீந்திரநாத்தும் சென்றிருந்தார். இந்நிலையில் ஒ.பன்னீர்செல்வம் சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்திற்கு வந்த ஓபிஎஸ்ஸூக்கு கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:- கடந்த 10 […]

Categories
தேசிய செய்திகள்

வடகிழக்கில் அமைதியை கேள்விக்குள்ளாக்கும் குடியுரிமை திருத்த மசோதா.!

குடியுரிமை திருத்த மசோதாவை கொண்டு வருவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. இது வடகிழக்கு மாநிலங்களில் அமைதியின்மையை ஏற்படுத்தி வருகிறது. நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நேற்று (நவ.18) தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் குடியுரிமைத் திருத்த மசோதாவை கொண்டுவருவதில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு (என்.டி.ஏ.) உறுதியாக உள்ளது. இதனை கொண்டுவருவதால் வடகிழக்கு பிராந்தியத்தில் அமைதியின்மையை ஏற்படுத்தும். இந்த திட்டத்துக்கு அந்த பிராந்தியத்தில் மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். வடகிழக்கு […]

Categories
தேசிய செய்திகள்

அஸ்ஸாமில் குடியுரிமைத் திருத்த மசோதாவிற்கு எதிராக போராட்டம்!

கவுஹாத்தியில் பல்வேறு மாணவ அமைப்புகள் குடியுரிமைத் திருத்த மசோதாவிற்கு(சிஏபி) எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடுவதால் கலவரம் வெடிக்கும் நிலை உருவாகியுள்ளது. நடப்பு நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரிலேயே குடிமக்கள் திருத்த மசோதாவை நிறைவேற்றிவிட ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி நினைக்கிறது. வடகிழக்கு பகுதியில் அமைதி திரும்பியுள்ள நிலையில், இந்த மசோதாவால் மீண்டும் பிரச்னை வெடிக்கும் அபாயம் உருவாகியுள்ளது. மாணவர்கள் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது. நாகாலாந்து, மணிப்பூர், அஸ்ஸாம், மேகலாயா, […]

Categories
மாநில செய்திகள்

ஆதிதிராவிட நலத்துறையை பட்டியல் சாதிகள் நலத்துறை என அறிவிக்க வழக்கு…!!

ஆதிதிராவிட நலத்துறையை பட்டியல் சாதிகள் நலத்துறை என அறிவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 76 இனங்களை பட்டியல் இனத்தவர்கள் எனக் கண்டறிந்து, அவர்களுக்காக ஆதிதிராவிடர் நலத்துறை ஏற்படுத்தப்பட்டது. இந்த ஆதிதிராவிடர் நலத்துறையின் பெயரை, பட்டியல் சாதிகள் நலத்துறை என அறிவிக்கக் கோரி சென்னையை சேர்ந்த மாரிமுத்து என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அதில், பட்டியல் இனத்தவர்களுக்கான நலத்துறையின் பெயர், தவறாக மொழிபெயர்ப்பு செய்யப்பட்டிருப்பதாகவும், ஆதிதிராவிடர் என்பது பட்டியலினங்களில் உள்ள 76 […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஆன்லைன் வர்த்தக முறை என்பது தேவையற்ற ஒன்று – பாமக தலைவர் ஜி.கே. மணி

தனியார் திருமண மஹாலில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய பாமக தலைவர் ஜி.கே. மணி, ஆன்லைன் வர்த்தக முறை என்பது தேவையற்ற ஒன்று, கண்டனத்துக்குரியது என தெரிவித்தார். பாமக தலைவர் ஜி.கே. மணி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, ‘இந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிட்டு எங்கள் கூட்டணி அதிகமான இடங்களில் மிகப்பெரிய வெற்றிபெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதற்கு சான்றுதான் சமீபத்தில் நடந்து […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மக்கள் மத்தியில் நம்பகத்தன்மையை வளர்த்தெடுங்கள்! – மோடிக்கு மன்மோகன் அறிவுரை

நாட்டின் பொருளாதார நிலை மோசமாக உள்ளதாகவும் அதை சீர்செய்ய மக்களிடம் நம்பகத்தன்மையை மீட்டெடுக்க வேண்டும் எனவும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மோடி அரசுக்கு ஆலோசனை தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமரும் பொருளாதார நிபுணருமான மன்மோகன் சிங் நாட்டின் பொருளாதாரம் குறித்து தி இந்து ஆங்கில நாளிதழுக்கு சிறப்புக் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.அதில் அவர், நாட்டில் உருவாகியுள்ள பொருளாதாரத் தேக்க நிலை காரணமாக நுகர்வில் சுணக்கம் ஏற்பட்டு தனியார் முதலீடுகள் முடங்கியுள்ளன. இதை சரி செய்ய உடனடி நடவடிக்கைகளை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலினுக்கு வேறு வேலையே இல்லை – நிலோபர் கபில்…..!!

எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினுக்கு அரசைக் குறை கூறுவதைத் தவிர வேறு எந்த வேலையும் இல்லை என அமைச்சர் நிலோபர் கபில் கூறியுள்ளார். தமிழ்நாடு கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரிய உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை ஷெனாய் நகரில் இன்று நடைபெற்றது. இதில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ” எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த காலத்திலிருந்து இன்றுரை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

சிவசேனாவுக்கு சோனியா எதிர்ப்பா? – பதிலளிக்கிறார் சரத் பவார்…!!

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது குறித்து சோனியா காந்தியிடம் பேசவில்லை என தேசியவாத காங்கிரஸ் சரத் பவார் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் தொடர்ந்து அரசியல் குழப்பம் நீடித்துவரும் நிலையில், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் இடையேயான முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு இன்று டெல்லியில் நடைபெற்றது. சந்திப்புக்குப்பின் செய்தியாளர்கள் கேள்விகளுக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பதிலளித்தார். சிவசேனாவுடனான கூட்டணிக்கு சோனியா எதிர்ப்பு தெரிவித்தாரா என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு அவர், […]

Categories
தேசிய செய்திகள்

ஜே.என்.யூ. மாணவர்கள் நாடாளுமன்றம் நோக்கி பேரணி

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜே.என்.யூ) மாணவர்கள் நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக சென்றனர். அவர்களை காவலர்கள் தடியடி நடத்தி, குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக சென்றனர். அவர்களிடம் காவலர்கள் பேரணியை கைவிடுமாறு கேட்டுக்கொண்டனர். அதற்கு மாணவர்கள் மறுப்பு தெரிவித்து தொடர்ந்து நாடாளுமன்றம் நோக்கி முன்னேறி சென்றனர். இதையடுத்து அவர்களை காவலர்கள் தடியடி நடத்தி கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இதுகுறித்து டெல்லி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சிகரெட்டை தூக்கிப் பிடித்து நடிப்பவர்களை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

சினிமாவில் சிகரெட்டை தூக்கிப் பிடித்து நடிப்பவர்களை எல்லாம் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என ரஜினி, கமல் குறித்து கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் விமர்சித்தார். நாகை மாவட்டம் குத்தாலம் தாலுகாவில் தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் மாவட்ட ஆட்சியர், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்துகொண்டு 821 பயனாளிகளுக்கு ரூ. 3.55 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இருக்கு இங்க….”வெற்றிடம் இருக்கு” – பொன். ராதாகிருஷ்ணன் பளீர்…!!

தமிழ்நாட்டில் நிச்சயமாக வெற்றிடம் உள்ளது என பாஜக மூத்தத் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சுதந்திர போராட்ட வீரர் வஉசி-யின் நினைவு தினத்தை முன்னிட்டு பாஜக மூத்தத் தலைவரும், மத்திய முன்னாள் அமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணன் திருநெல்வேலி டவுனில் உள்ள வஉசி மணிமண்டபத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் எம்ஜிஆர், ஜெயலலிதா, காமராஜருக்கு நிகரான வெற்றிடம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரஜினி VS அஞ்சா நெஞ்சன்….. போஸ்டர்களால் பரபரப்பு…. நடப்பது என்ன?

ரஜினியுடன் அழகிரி இணைந்து அமர்ந்திருக்கும் சுவரொட்டிகளை மதுரை முழுவதும் ஒட்டி மு.க. அழகிரியின் ஆதரவாளர்கள் பரபரப்பை கிளப்பியுள்ளனர். தமிழ்நாட்டில் அரசியல் வெற்றிடம் இருப்பதாகவும், அதனை நடிகர் ரஜினிகாந்த் நிரப்புவார் எனவும் அண்மையில் செய்தியாளர்களுக்கு மு.க. அழகிரி பேட்டியளித்தார். இந்நிலையில், மதுரை தெருக்களில் அவரின் ஆதரவாளர்களால் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்’ என பெரிய எழுத்துகளில் இந்த சுவரொட்டியில் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. ரஜினியும் அழகிரியும் அருகருகே அமர்ந்து பேசுவது […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

தண்ணீர் அரசியல் செல்லாது – அரவிந்த் கெஜ்ரிவால்

தண்ணீரை வைத்து அரசியல் செய்வது சரி அல்ல என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார். நாடு முழுவதும் உள்ள நகரங்களில் வழங்கப்படும் குழாய் தண்ணீரின் தரத்தை மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் நேற்று வெளியிட்டார். டெல்லியிலிருந்து பெறப்பட்ட 11 மாதிரிக்களின் தரத்தை ஆராய்ந்ததில், அங்கு குழாய்களின் மூலம் வழங்கப்படும் தண்ணீரின் தரம் இந்திய தர நிர்ணயம் விதித்த அளவுகோலுக்கு கீழ் உள்ளது என ராம் விலாஸ் பஸ்வான் தெரிவித்தார். இதேபோல், சென்னை, பெங்களூரு, சண்டிகர், […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மகாராஷ்டிரா அரசியல் குழப்பத்தை தீர்ப்பாரா மத்திய அமைச்சர்?

முதலமைச்சர் பதவியை இரண்டு ஆண்டுகளுக்கு சிவசேனாவுக்கு அளிப்பது குறித்து இரு கட்சிகளிடம் பேசிவருவதாக மத்திய இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதனிடையே, மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, மகாராஷ்டிரா அரசியல் குழப்பம் குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, “சிவசேனா மூத்தத் தலைவர் சஞ்சர் ராவத்திடம் சமரசம் குறித்து பேசி வருகிறேன். முதலமைச்சர் பதவியை மூன்று ஆண்டுகள் பாஜகவுக்கும் இரண்டு […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் – வருமானம் அதிகரிப்பு…!!

சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால், வருமானம் இரட்டிப்பாகியுள்ளதாக கேரள தேவசம் போர்டு அறிவித்துள்ளது. மண்டல பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் நவம்பர் 16ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கோயிலில் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. இதனிடையே கோயிலை நிர்வகிக்கும் கேரள தேவசம் போர்டின் தலைவர் என். வாசு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “பக்தர்கள் கூட்டமும் வருமானமும் கோயிலில் அதிகரித்துள்ளது. 2 கோடியே 4 லட்சத்து 23 ஆயிரத்தி 533 ரூபாய் வருவாய் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

டிசம்பர் 2-ல் உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பு..!!

டிசம்பர் 2-ல் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான தேதி அறிவிப்பாணை வெளியிடப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.  தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் எப்போது நடைபெறும் என்று அனைவரும் எதிர்பார்த்து கொண்டுள்ளனர். அதிமுக சார்பில் விரைவில் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்ட்டது இதையடுத்து  டிசம்பர் 13 ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய  வேண்டும் என்று தமிழக தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.  இந்நிலையில் டிசம்பர் 2 ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் […]

Categories
மாநில செய்திகள்

21_க்குள்ள முடிவெடுங்க …. 15 நாளில் திறங்க…. எச்சரிக்கும் செந்தில் பாலாஜி …!!

நவம்பர் 21ஆம் தேதிக்குள் பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கவிட்டால் திமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில் பலாஜி தெரிவித்துள்ளார். கரூர் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள உழவர் சந்தையில் திமுக சார்பில் பொதுக்குழு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில், அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில் பாலாஜி, திமுக துணை பொதுச்செயலாளர் பெரியசாமி, திமுக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர். அப்போது, சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில் பாலாஜி […]

Categories
மாநில செய்திகள்

பால் பாக்கெட் தூக்கி ஏறியப்படும்.. ”யாருக்கும் பலன் இல்லை”….மாத்தி யோசிங்க …..!!

பால் பாக்கெட்டுகளில் திருக்குறளை அச்சிடுவதை விட பொது மக்கள் தினசரி செல்லும் இடங்களில் திருக்குறளை பதிவு செய்ய தமிழ்நாடு அரசு முன்வரவேண்டும் என தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டத்திற்கு வருகை தந்திருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், சென்னை ஐஐடி மாணவி பாத்திமா பேராசிரியர்கள் அளித்த மன உளைச்சலால் காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது போன்ற நிகழ்வு சென்னை ஐஐடி மட்டுமல்லாது நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களிலும் நடைபெறுகிறது. […]

Categories
மாநில செய்திகள்

வச்சுட்டாங்கையா ஆப்பு .. “பற்ற வைத்த பாஜக”.. பதறும் திமுக..!!

பஞ்சமி நிலம் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் குறித்து அந்நிறுவனத்துக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. முரசொலி அலுவலக நிலம் தொடர்பாக விளக்கமளிக்க உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆஜராக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் அழைப்பாணை அனுப்பியுள்ளதுதிருநெல்வேலியில் தனுஷ் நடித்த அசுரன் படத்தை பார்த்த திமுக தலைவர் ஸ்டாலின் அப்படத்தில் பஞ்சமி நிலம் குறித்த காட்சிகள் இடம்பெற்றதைக் கண்டு படக்குழுவினரை வியந்து பாராட்டினார். இதையடுத்து பாமக நிறுவனர் ராமதாஸ் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி அலுவலகம் […]

Categories
மாநில செய்திகள்

”பொது இடங்களில் திருக்குறள்” பதிவு செய்ய தொல். திருமாவளவன் வேண்டுகோள் …!!

பால் பாக்கெட்டுகளில் திருக்குறளை அச்சிடுவதை விட பொது மக்கள் தினசரி செல்லும் இடங்களில் திருக்குறளை பதிவு செய்ய தமிழ்நாடு அரசு முன்வரவேண்டும் என தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டத்திற்கு வருகை தந்திருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், சென்னை ஐஐடி மாணவி பாத்திமா பேராசிரியர்கள் அளித்த மன உளைச்சலால் காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது போன்ற நிகழ்வு சென்னை ஐஐடி மட்டுமல்லாது நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களிலும் நடைபெறுகிறது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”எங்களை யாராலும் அழிக்க முடியாது” துரைமுருகன் சூளுரை …!!

திமுகவை யாராலும் அழிக்க முடியாது என திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். திமுக பொதுக்குழு கூட்டம் சென்னை சைதாப்பேட்டையில் நடைப்பெற்றது. இதில் திமுக பொருளாளர் துரைமுருகன், எம்.பி தயாநிதி மாறன், எம்.பி. ஜெகத்ரட்சகன், எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் பேசுகையில், “மகாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்களில் தனித்து ஆட்சி அமைப்பதாகக் கூறிய பாஜக கூறிய தற்போது தினறி வருகிறது. இந்த மாநிலங்களில் மோடி அலை என்ன ஆனது. தமிழ்நாடு […]

Categories
மாநில செய்திகள்

வச்சுட்டாங்கையா ஆப்பு …… ”பற்ற வைத்த பாஜக”…. பதறும் திமுக….!!

பஞ்சமி நிலம் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் குறித்து அந்நிறுவனத்துக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. முரசொலி அலுவலக நிலம் தொடர்பாக விளக்கமளிக்க உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆஜராக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் அழைப்பாணை அனுப்பியுள்ளதுதிருநெல்வேலியில் தனுஷ் நடித்த அசுரன் படத்தை பார்த்த திமுக தலைவர் ஸ்டாலின் அப்படத்தில் பஞ்சமி நிலம் குறித்த காட்சிகள் இடம்பெற்றதைக் கண்டு படக்குழுவினரை வியந்து பாராட்டினார். இதையடுத்து பாமக நிறுவனர் ராமதாஸ் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி அலுவலகம் […]

Categories
மாநில செய்திகள்

”பெண்களை அனுமதியுங்க” தீர்ப்பை அவமதிக்காதீங்க- கி. வீரமணி கருத்து …!!

சபரிமலையில் பெண்களை அனுமதிக்க மறுத்தால், உச்ச நீதிமன்றத்தை அவமதிப்பாகும் என திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தெரிவித்துள்ளார். விருதுநகரில் நடைபெறும் பகுத்தறிவாளர் கழகப் பொன்விழா தொடக்க மாநாட்டில் பங்கேற்க மதுரை விமான நிலையம் வந்த திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி செய்தியாளர்களிடம் பேசினார்.அதில், “சபரிமலையில் பெண்களை அனுமதிக்கலாம் என்ற தீர்ப்புக்குத் தடையேதுமில்லை. அந்த வழக்கு ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. எனவே சபரிமலைக்கு பெண்கள் செல்ல தடையில்லாததால், பெண்களை அனுமதிக்க வேண்டும். இதனை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”நல்லாட்சி நாயகன் எடப்பாடி பழனிசாமி” அமைச்சர் ராஜேந்திர பாலாஜி …!!

மக்கள் எங்கள் பக்கம் உள்ளதால் உள்ளாட்சித் தேர்தலில் நல்லாட்சி நாயகன் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உறுதியான வெற்றியை பெறுவோம் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டார். இதில், 601 பயனாளிகளுக்கு இரண்டு கோடி மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் சந்திரபிரபா, சாத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜவர்மன் ஆகியோர் […]

Categories
மாநில செய்திகள்

சேலத்தை பிரிங்க….. ”ஆத்தூரை மாவட்டமாக்குங்க”….. சீமான் கோரிக்கை …!!

சேலம் மாவட்டத்தைப் பிரித்து ஆத்தூரைத் தலையிடமாகக் கொண்ட புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கைவிடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டிலிருந்த மாவட்டங்களைப் பிரித்துத் தனி மாவட்டமாக அறிவித்திருப்பதன் மூலம் மாவட்டங்களின் எண்ணிக்கை 37ஆக உயர்ந்து, அதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. பரப்பளவில் பெரியதாக இருக்கிற மாவட்டங்களை நிர்வாக வசதிக்காகத்தான் பிரிக்கப்படுகிறது என்று நம்புகிறேன். அதேநேரம், மாவட்டப்பிரிப்பு கோரிக்கையை நெடுநாளாகக் கொண்டிருக்கும் பெரிய […]

Categories
தேசிய செய்திகள்

”அயோத்தி தீர்ப்பு சரியில்லை” எதிர்த்து மறுசீராய்வு மனு ….!!

உச்ச நீதிமன்றம் வழங்கிய அயோத்தி வழக்கின் தீர்ப்பை எதிர்த்து அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம், மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அயோத்தி வழக்கின் 40 நாள் விசாரணை அக்டோபர் 16ஆம் தேதி முடிவடைந்ததைத் தொடர்ந்து, தீர்ப்பு நவம்பர் 9ஆம் தேதி வெளியிடப்பட்டது. சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் ராம் லல்லாவுக்குச் சொந்தம். அங்கு ராமர் கோயில் கட்டலாம். மசூதி கட்டிக்கொள்ள இஸ்லாமியர்களுக்கு அயோத்திலேயே 5 ஏக்கர் மாற்று இடம் வழங்கப்படும எனத் தீர்ப்பில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”உச்சி முதல் பாதம் வரை” திமுக ஜெயிக்கும் ….. உளறி தள்ளிய அமைச்சர் …!!

நாடாளுமன்றத் தேர்தலில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை திமுக வெற்றி பெற்றதாக அமைச்சர் கே.சி. வீரமணி உளறியிருப்பது அதிமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் அமைச்சர்கள் பலர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கும்போதும் சரி அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போதும் சரி பல்வேறு சர்ச்சைக்குரிய விவகாரங்களில் எக்குத்தப்பாக வாயை கொடுப்பதையும் சர்ச்சையில் சிக்குவதையும் வழக்கமாக வைத்துள்ளனர். குறிப்பாக அமைச்சர்கள் ஜெயக்குமார், செல்லூர் ராஜு, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் நெட்டிசன்கள் முதல் சீனியர் சிட்டிசன்கள் வரை […]

Categories
அரசியல்

தேமுதிக நிர்வாகிகளுக்கு விருப்ப மனு விநியோகித்த விஜயகாந்த்….!!

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் தேமுதிகவினருக்கு அக்கட்சி தலைவர் விஜயகாந்த் இன்று விருப்ப மனுக்களை வழங்கினார். மக்களவைத் தேர்தலைத் தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலிலும், அதிமுக தலைமையிலான கூட்டணியிலேயே தொடர்வதாக தேமுதிக அறிவித்துள்ளது.இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தல் அடுத்த மாதம் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதில் போட்டியிட விரும்பும் தேமுதிகவினர், அந்தந்த மாவட்ட அலுவலகங்களில் விருப்ப மனுக்களைப் பெறலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில், தேர்தலில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: ”புதிய மாவட்ட ஆட்சியர்கள் நியமனம்” – அரசாணை வெளியிட்டது தமிழக அரசு …!!

புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு புதியபுதிதாக மாவட்ட ஆட்சியர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தவுள்ளது.  தமிழகத்தில் வேலூர் , திருநெல்வேலி , விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிதாக மாவட்டங்கள் உருவாக்கப்பட்டது. அந்த வகையில் அதற்கான சிறப்பு IAS அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதை தொடர்ந்து இன்று புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டத்துக்கு காவல் கண்காணிப்பாளர்  நியமனம் செய்து அரசாணை வெளியிட்டது. இந்நிலையில் தற்போது சிறப்பு அதிகாரிகளாக செயல்பட்டவர்களை மாவட்ட ஆட்சியராக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

‘மேயர் பதவிக்கு உதயநிதி போட்டியிட்டால் மக்கள் பார்த்து கொள்வார்கள்’ – ஜி.கே.வாசன்

சென்னை மேயர் பதவிக்கு உதய நிதி போட்டியிட்டால் மக்கள் தகுந்த முடிவு எடுப்பார்கள் என்று ஜி.கே. வாசன் தெரிவித்தார். திருச்சியில் நடந்த கட்சி பிரமுகர் இல்லத் திருமண விழாவில் தமாகா தலைவர் ஜி.கே. வாசன் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ரஃபேல் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை அனைவரும் ஏற்க வேண்டும். இதன் பின்னராவது எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வ செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும். சென்னை ஐஐடியில் மாணவி மரணமடைந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் எந்த பதவியில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலினுக்கு கை பட்டா குத்தம்…கால் பட்டா குத்தம் – அமைச்சர் காமராஜ் காட்டம்

வேண்டாத பொண்டாட்டிக்கு கை பட்டா குத்தம், கால் பட்டா குத்தம் என்பதுபோல திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நாங்கள் அவருக்கு வேண்டாதவர்களாக இருக்கிறோம் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்தார். திருவாரூர் மாவட்டத்தில் அதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்பமனு பெறும் நிகழ்ச்சி அதிமுக மாவட்ட செயலாளரும் உணவு துறை அமைச்சருமான காமராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களுக்கு விண்ணப்ப படிவத்தினை வழங்கினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் காமராஜ், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவை பிறாண்டுவதிலேயே ஸ்டாலின் குறி – செல்லூர் ராஜு

 “திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுகவை பிறாண்டுவதிலேயே குறியாக இருக்கிறார்” என்று அமைச்சர் செல்லூர் ராஜூ நகைச்சுவையாக ஸ்டாலினை கலாய்த்துள்ளார். மதுரை மாநகராட்சிக்குட்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான 2019 மேயர், மாமன்ற உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விருப்பமனு பெறும் நிகழ்வு மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இதில் அமைச்சர் செல்லூர் ராஜு கலந்துகொண்டு வேட்பாளர்களின் விருப்ப மனுக்களை பெற்றுக்கொண்டார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகையில், “திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுகவை […]

Categories
Uncategorized

BREAKING: ”ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் மறுப்பு” மனுவை தள்ளுபடி …!!

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரத்துக்கு ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் சிபிஐ_யால் கைது செய்யப்பட்டு இன்றோடு 87 நாட்கள் ஆகின்றது. முதலில் அவர் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு கடந்த செப்டம்பர் மாதம் 16ம் தேதி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.இந்நிலையில் இந்த வழக்கில்தான் ஜாமீன் கேட்டு அவர்  டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் ஏற்கவே சிபிஐ_யால் கைது செய்யப்பட்டவர்களுக்கு உச்சநீதிமன்றம் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: புதிய மாவட்டங்களுக்கு SP நியமனம் – அரசாணை வெளியிட்டது தமிழக அரசு …!!

புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு புதிய SP நியமிக்கப்பட்டு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தவுள்ளது. தமிழகத்தில் வேலூர் , திருநெல்வேலி , விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிதாக மாவட்டங்கள் உருவாக்கப்பட்டது. அந்த வகையில் அதற்கான IAS அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதை தொடர்ந்து தமிழக அரசு 16 IPS அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவை பிறப்பித்துள்ளது. இதில் புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டத்துக்கு காவல் கண்காணிப்பாளர்  நியமனம் செய்யபட்டுள்ளனர். இதில் ,  […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

கலைமாமணி விருது பெற்ற விஜய் சேதுபதிக்கு வந்த சோதனை…!!

நடிகர் விஜய் சேதுபதிக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று தனிப்பட்ட முறையில் அவருக்கு அமைச்சர் பாண்டியராஜன் விருதை வழங்கினார். ஆனால் இன்று வெளியாகவிருந்த ‘சங்கத்தமிழன்’ திரைப்படம் ரிலீசாவதில் தாமதம் ஏற்பட்டதால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி தமிழ்நாடு அரசு நடிகர் விஜய் சேதுபதி உள்பட சில திரைத் துறையினருக்கு கலைமாமணி விருதை அறிவித்தது.ஆகஸ்ட் மாதமே இந்த விருது கொடுக்கப்பட்டது. ஆனால் படப்பிடிப்பில் பிசியாக இருந்ததால் விஜய் சேதுபதி அவ்விருதை பெற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் வெற்றிடம் இல்லை – தம்பிதுரை

“தமிழ்நாட்டில் தற்போது வெற்றிடம் ஏதுமில்லை மேலோகத்தில் சென்று பார்த்தால் வெற்றிடம் இருப்பது போல் தெரியும்” என்று நடிகர் ரஜினிகாந்தின் கருத்திற்கு, தம்பிதுரை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். கரூர் மாவட்டத்தில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்பமனு பெறும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அதிமுக கழக அமைப்புச் செயலாளர் பாப்பா சுந்தரம், தமிழ்நாடு போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் கீதா உள்ளிட்ட […]

Categories
மாநில செய்திகள்

என் மகளின் சாவுக்கு காரணமானவர்கள் கைது செய்யப்பட வேண்டும் – பாத்திமாவின் தந்தை

 என் மகளின் சாவுக்கு காரணமானவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என ஐஐடியில் தற்கொலை செய்துகொண்ட பாத்திமாவின் தந்தை சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்தார். கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்தவர் பாத்திமா லத்தீப். இவர் சென்னை ஐஐடியில் முதலாமாண்டு முதுகலை பட்டம் படித்துவந்தார். கடந்த சனிக்கிழமை பாத்திமா லத்தீப் தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.தற்கொலை குறித்து காவல் துறையினர் விசாரித்து வரும் நிலையில் மன அழுத்தத்தால் மாணவி தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், இன்று சென்னை […]

Categories
மாநில செய்திகள்

பாத்திமா தற்கொலை : விசாரணையை தொடங்கியது மத்திய குற்றப்பிரிவு போலீஸ் ..!!

மாணவி பாத்திமா தற்கொலை விவகாரம் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணையை தொடங்கியுள்ளது. மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சென்னை மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டு பிறகு நேற்று இருந்தே அதன் விசாரணையை மத்திய குற்றப்பிரிவு போலீசார்  தொடங்கினர்.  மத்திய குற்றப்பிரிவு விசாரணை குழுவினர் சென்னை ஐஐடி சென்று அங்குள்ள மூன்று பேராசிரியர்களிடம் விசாரணை நடத்தியதாக காவல்துறையினர் தெரிவிக்கிறார்கள்.  நேற்று சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் ஐஐடி_க்கு வந்து விசாரணை மேற்கொண்டார். இதையடுத்து மத்திய குற்றவியல் பிரிவு போலீசார் விசாரணை நடந்த […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: ”தீர்ப்பை முழுமையாக அமல்படுத்துங்கள்” உச்சநீதிமன்றம் அதிரடி …!!

சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பை முறையாக அமல்படுத்துங்கள் என்று உச்சநீதிமன்றம் உறுதிபடுத்தியுள்ளது. நேற்றைய தினம் சபரிமலை வழக்கை 7 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் பெண்கள் நுழைவதற்கு எதிரான எந்த உத்தரவையும் பிறப்பிக்கமாக் இருந்தது. உச்சநீதிமன்றம் தீர்ப்புக்கு இடைக்கால தடை என எதையுமே உச்சநீதிமன்றம் தெரிவிக்க வில்லை. இதனால் சற்று குழப்பம் நிலவி வந்த நிலையில் இன்று உச்சநீதிமன்ற நீதிபதி பாலி நரிமன் தெளிவு படுத்தியுள்ளார்.கர்நாடக முன்னாள் அமைச்சர் டிகே சிவகுமாருக்கு ஜாமீன் வழங்கியதை எதிர்த்து […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

BREAKING: மகாராஷ்டிரா : 3 கட்சியினர் நாளை ஆளுனருடன் சந்திப்பு …..!!

மகாராஷ்டிராவில் சிவசேனா ,காங்கிரஸ் , சிவசேனா தேசியவாத காங்கிரஸ் நாளை ஆளுநரிடம் சந்திக்கிறார்கள். மகராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி அமைக்க முடியாத நிலையில் தொடர்ந்து கொண்டிருந்த நிலையில்தான் அங்கே குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் , தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா ஆகிய மூன்று கட்சிகளும் தொடர்ந்து கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தையும் நடத்தி வருகிறார்கள். மூன்று பேருக்குமே ஒத்துக் கொள்ளக்கூடிய விஷயங்களைப் பட்டியலிட்டு அதன் அடிப்படையிலேயே இந்த கூட்டணி அமைக்கலாம் என்றும் , […]

Categories
மாநில செய்திகள்

சென்னை ஐஐடி_யை முற்றுகையிட்டு திமுக மாணவரணி போராட்டம் …!!

மாணவி பாத்திமா தற்கொலைக்கு காரணமான பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திமுக மாணவரணியினர் போராட்டம் நடத்தி வருகின்றது. சென்னை ஐஐடி மாணவி பார்த்திபா தற்கொலை வழக்கில் பேராசிரியர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு அமைப்பினர் கடந்த இரண்டு நாட்களாக ஐஐடி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்நிலையில் தற்போது திமுக மாணவரணி சார்பில் முற்றுகை போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது.திமுக மாணவர் அணி மாநில துணை செயலாள  தலைமையில் இந்த போராட்டம் […]

Categories
மதுரை மாநில செய்திகள்

உள்ளாட்சித் தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் ….!!

உள்ளாட்சித் தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் மதுரையில் நடைபெற்று வருகின்றது. உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கக்கூடிய நிலையில் மாநில உள்ளாட்சி தேர்தல் ஆணையர் பழனிச்சாமி தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வருகின்றது . இதில் மதுரை மாவட்ட ஆட்சியர், திண்டுக்கல் , தேனி , விருதுநகர் ஆகிய நான்கு மாவட்ட ஆட்சியர்கள் கலந்து கொண்டு இருக்கிறார்கள். இதில் உள்ளாட்சித் தேர்தலில் நடைபெறக் கூடிய மாநகராட்சி , நகராட்சி , பேரூராட்சி , ஊராட்சியை சேர்ந்த அதிகாரிகள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உள்ளாட்சித் தேர்தல் நடக்காது – ஸ்டாலின் பரபரப்பு பேட்டி …!!

உள்ளாட்சித் தேர்தலை முறையாக நடத்த வேண்டும் என்றுதான் நீதிமன்றம் சென்றோம் என்று முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் முக.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்த போது , தேர்தலை நடத்தக்கூடாது என்பது எங்களுடைய நோக்கம் கிடையாது. முறையா நடத்தவேண்டும். இடஒதுக்கீடு முறையை சரி செய்து , முறையாக தேர்தல் நடத்துங்க என்று தான் நீதிமன்றத்துக்குப் போனோம் .  சட்டமன்றத்திலும் , மக்கள் மன்றத்திலும் நாங்கள் இதைத்தான் சொல்லி வருகின்றோம். ஆனால் அதிமுக இதை பற்றி கவலைப்படவில்லை. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஊராட்சி பகுதிகளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை …!!

தமிழகத்தில் பொதுப்பணித்துறையால் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து முதல்வர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகின்றார். பொதுப்பணித் துறை , கட்டடங்கள் , நீர்வளத்துறை ஆகிய துறைகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பொதுப்பணித்துறை மாநில, மண்டல பொறியாளர்கள் பங்கேற்ற்றுள்ளனர். மேலும் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் பங்கேற்றிருக்கிறார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வரும் இந்த ஆலோசனை கூட்டத்தில் குடிமரத்து பணிகள் குறித்தும் , அத்திக்கடவு அவிநாசி திட்டம்  குறித்து விவாதிக்கப்படுகின்றது. மேலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளதா ? எந்த அளவுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் கிடைக்குமா? இன்று தீர்ப்பு……!!

மத்திய முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் தாக்கல் செய்த பிணை மனு மீது டெல்லி உயர் நீதின்றம் இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது. ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 74 வயதான காங்கிரஸ் மூத்தத் தலைவரும் மத்திய முன்னாள் நிதியமைச்சருமான ப. சிதம்பரம் ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.அவரை அமலாக்கத் துறையினர் அக்டோபர் 16ஆம் தேதி காவலில் எடுத்தனர். விசாரணைக்கு பின்னர் அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்தக் காவல் கடந்த 13ஆம் தேதியோடு முடிவடைந்தது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவின் ”தில்லுமுல்லு” முக.ஸ்டாலின் காட்டம் …!!

உள்ளாட்சித் தேர்தல் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். உள்ளாட்சித் தேர்தல் குறித்த மு.க. ஸ்டாலினின் ஃபேஸ்புக் பதிவு பின்வருமாறு: ”உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணைய செயலாளர் பழனிச்சாமியை, திடீரென்று மாற்றியிருப்பது கண்டனத்திற்குரியது! உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், தேர்தல் பணிகளைச் செய்து கொண்டிருந்தவரை மாற்றியது ஏன்? விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் “விசுவாசமாகப்” பணியாற்றியதற்காக விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர், மாநில தேர்தல் ஆணைய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளாரா? […]

Categories
அரசியல்

’இவர் மூலம்தான் எடப்பாடி எனக்கு தூது விட்டார்’ – அமமுக பழனியப்பன்

அதிமுகவில் சேரும்படி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொழிலதிபதிபர் ஒருவர் மூலம் தனக்கு தூது விட்டதாக அமமுகவின் துணை பொதுச் செயலாளர் பழனியப்பன் கூறியுள்ளார். அமமுகவின் நாமக்கல் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் பழனியப்பன், ”அதிமுகவில் சேர நான் யாரையும் தூது விடவில்லை. ஆனால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிதான், தொழிலதிபர் அன்பழகன் என்பவர் மூலம் என்னை அதிமுகவில் சேர தூதுவிட்டார். ஆனால் முதலமைச்சரின் தூதுக்கு நான் செவி […]

Categories
தேசிய செய்திகள்

‘சபரிமலையில் பீடி, சிகரெட் குடித்த பெண்கள்’ – அர்ஜூன் சம்பத் சர்ச்சைப் பேச்சு

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பீடி, சிகரெட், மது குடிக்கும் பெண்களை கோயிலுக்குள் அனுமதித்தவர் பினராயி விஜயன் என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் குற்றம்சாட்டியுள்ளார். சபரிமலையில் அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற தீர்ப்புக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்குகளை, 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டிருக்கிறது.இந்தத் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத், உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

படம் தான் பிடிக்கும்…. அப்போ ரஜினியை பிடிக்காதா ? – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி…!!

நடிகர் ரஜினி மீது எந்த காட்டமும் தனக்கில்லை என்றும், அவர் படங்களைத் தான் மிகவும் விரும்பிப் பார்ப்பதாகவும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பள்ளிக் கல்வித் துறை, பொது நூலகத் துறை சார்பாக திறன் மேம்பாட்டுத் திட்டம் மூலம் 1.05 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட இலவச போட்டித் தேர்வு மையத்தை பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்தார். தமிழ்நாட்டில் தனியார் பங்களிப்போடு தொடங்கப்பட்ட முதல் ஐஏஎஸ், […]

Categories

Tech |