Categories
அரசியல் தேசிய செய்திகள்

தலைவர்கள் விடுதலை….. மத்திய அரசு தலையீடாது….. அமித் ஷா உறுதி ..!!

காஷ்மீர் தலைவர்களை விடுதலை செய்வதில் மத்திய அரசின் தலையீடு இருக்காது என உள் துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நவம்பர் 18ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது. இதனிடையே, கடும் எதிர்ப்புக்கிடையே நேற்று மக்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது. இந்நிலையில், காஷ்மீர் பதற்றமாக இருக்கிறது, அங்குள்ள தலைவர்களை எப்போது விடுதலை செய்வீர்கள் என மக்களவை காங்கிரஸ் குழுத் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி நாடாளுமன்றத்தில் இன்று கேள்வி எழுப்பினார். இதற்கு […]

Categories
அரசியல்

அரசியலின் கத்துக்குட்டியே குருமூர்த்தி -அமைச்சர் ஜெயக்குமார்…..!!!!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் அரசியலின் கத்துக்குட்டியே குருமூர்த்திஎன்று விமர்சித்தார்.  சென்னையில் ராஜாஜியின் 141-வது பிறந்தநாளையொட்டி சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் இருக்கும் அவரது உருவ சிலைக்கும், திருவுருவப் படத்திற்கும் அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன் மற்றும் பெஞ்சமின் ஆகியோர் மலர்தூவி தங்களது மரியாதையை  செலுத்தினர். இதைத்தொடர்ந்து  செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறும்பொழுது….  ஒரு குழப்பம் நிறைந்த கட்சி திமுக.மேலும் நீதிமன்றத்திடம் சென்று தேர்தலை ரத்து செய்யவும் முயற்சித்தனர். தீர்ப்பு வந்த பின் அதை […]

Categories
அரசியல்

தீவு வாங்கி நித்யானந்தாபோல் முதல்வர் ஆகலாம்….ஸ்டாலினை விமர்சித்த ஜெயக்குமார்…!!

முதல்வராக எண்ணுபவர்கள் வேணுமென்றால் நித்யானந்தாபோல் தனியாக தீவு வாங்கி, முதலமைச்சர் ஆகலாம் என்று ஸ்டாலினை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.!! சென்னையில் ராஜாஜியின் 141-வது பிறந்தநாளையொட்டி சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் இருக்கும் அவரது உருவ சிலைக்கும், திருவுருவப் படத்திற்கும் அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன் மற்றும் பெஞ்சமின் ஆகியோர் மலர்தூவி தங்களது மரியாதையை  செலுத்தினர். இதைதொடர்ந்து  செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறும்பொழுது, ஒரு குழப்பம் நிறைந்த கட்சி திமுக.மேலும் நீதிமன்றத்திடம் சென்று தேர்தலை ரத்து செய்யவும் முயற்சித்தனர். […]

Categories
மாநில செய்திகள்

‘ஜிபூம்பா என்றவுடன் வெங்காயம் வந்துவிடாது!’ – அமைச்சர் காமராஜ்

ஜிபூம்பா என்றவுடன் வெங்காயம் வந்துவிடாது என்றும் எகிப்து, துருக்கியிலிருந்து வெங்காயம் இறக்குமதியானவுடன் நிலைமை சீராகும் எனவும் உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வெங்காய விலை குறித்து அறிக்கை வெளியிட்டதையடுத்து அதற்கு பதிலளிக்கும் விதமாக திருவாரூரில் உணவுத் துறை அமைச்சர் காமராஜ் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “தமிழ்நாட்டில் வெங்காய விலையை கருத்தில்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டுவருகிறது. அந்தவகையில் பண்ணைக் கடைகளை மானிய விலையில் வெங்காயம் 40 ரூபாய்க்கு விற்பனை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா – அனல் பறந்த விவாதம்!

குடியரிமை சட்டத்திருத்த மசோதாவை மக்களவையில் உள் துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் மதங்களின் அடிப்படையில் பாகுபாடு காண்பிக்கப்பட்டு இந்தியா வந்த அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வழிசெய்வதே குடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019. இந்து, கிறிஸ்தவம், சீக்கியம், பார்சி, சமணம் ஆகிய ஏதேனும் ஒரு மதத்தைச் சார்ந்தவராக இருந்தால் மட்டுமே குடியுரிமை வழங்க மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களுக்கு மசோதாவில் குடியுரிமை வழங்க வழிசெய்யாததை காங்கிரஸ், திரிணாமுல், திமுக, […]

Categories
தேசிய செய்திகள்

மக்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றம்!

குடியரிமை சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் மதங்களின் அடிப்படையில் பாகுபாடு காண்பிக்கப்பட்டு இந்தியா வந்த அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வழிசெய்வதே குடியுரிமை சட்டத்திருத்த மசோதா – 2019. இந்து, கிறிஸ்தவம், சீக்கியம், பார்சி, சமணம் ஆகிய ஏதேனும் ஒரு மதத்தைச் சார்ந்தவராக இருந்தால் மட்டுமே குடியுரிமை வழங்க மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களுக்கு மசோதாவில் குடியுரிமை வழங்க வழிசெய்யாததை காங்கிரஸ், திரிணாமுல், திமுக, சமாஜ்வாதி, ராஷ்டிரிய ஜனதா தளம், இடதுசாரிகள் […]

Categories
தேசிய செய்திகள்

‘இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்குங்கள்’ – அரசுக்கு ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் வேண்டுகோள்!

இந்தியாவில் நீண்ட காலமாக வாழ்ந்துவரும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடாளுமன்ற மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நேற்று நிறைவேற்றப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த மசோதாவை தாக்கல் செய்து பேசியபோது, புதிய மசோதாவில் அரசியல் சாசனத்திற்கு எதிராக எந்த அம்சமும் இடம்பெறவில்லை என தெரிவித்தார். ஒன்பது மணிநேரதிற்கும் மேல் நீடித்த இந்த விவாதத்திற்கு பிறகு நடைபெற்ற வாக்கெடுப்பில் 311 உறுப்பினர்கள் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

கலக்கத்தில் காங்கிரஸ்…. ”ஏமாற்றினால் தப்ப முடியாது”….. அதிரடி காட்டிய மோடி….!!

 கர்நாடகாவில் நிலையான ஆட்சிக்காக மக்கள் பாஜகவை தேர்ந்தெடுத்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி ஜார்க்கண்ட் மாநிலத் தேர்தல் பரப்புரையின்போது தெரிவித்துள்ளார். ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு ஐந்து கட்டமாக நடைபெறுகிறது. மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 12ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், ஹசரிபாக் மாவட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். நேற்று வெளியான கர்நாடக சட்டப்பேரவை இடைத்தேர்தல் குறித்து பேசிய அவர், “கர்நாடக மக்களை ஏமாற்றிவிட்டு தப்பித்து விட முடியாது என்பதை காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

நான் தோற்று விட்டேன்….. எனக்கு வேண்டாம்….. அதிரடி முடிவு எடுத்த சித்தராமையா …!!

கர்நாடக இடைத்தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, எதிர்க்கட்சி தலைவர் பதவியை சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். கர்நாடகாவில் காங்கிரஸ் – மஜத கூட்டணி ஆட்சி நடைபெற்றபோது, அக்கட்சிகளைச் சேர்ந்த 17 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து பாஜகவிற்கு தாவினர். இதனால் காங்கிரஸ் – மஜத கூட்டணி ஆட்சி கவிழ்ந்து பாஜக ஆட்சியமைத்தது. இதனையடுத்து அந்த தொகுதிகள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டன. இதில் காலியாக உள்ள 17 தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கு மட்டும் டிசம்பர் 5ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கான […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

மதுராந்தகம் ஏரியில் நீர் கசிவு… அதிகாரிகள் மெத்தனம்.. விவசாயிகள் கோரிக்கை..!!

மதுராந்தகம் ஏரியிலிருந்து மதகுகள் வழியாக நீர் கசிவதை  தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர் .  செங்கல்பட்டு மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியாக விளக்கும் மதுராந்தகம் ஏரி 694 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டது. ஏரி முழு கொள்ளளவை எட்ட 4 அங்குலமுள்ளது.  இந்த நிலையில் ஏரிகளில் இருந்து நீர் கசிவது விவசாயிகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. தானியங்கி மதகுகளில்  துருப்பிடித்து விரிசல் ஏற்பட்டு இருப்பது  இதற்கு காரணமாகும். ஏரியை பராமரிப்பதில் அதிகாரிகள் மெத்தனம் […]

Categories
அரசியல்

நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதாக கூறி தனது பிறந்தநாளை ரத்து செய்த சோனியாகாந்தி…!!

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு பிரதமர் நரேந்திர மோடிமற்றும்  தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.   தனது 73 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் சோனியா காந்திக்கு வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் ,நீண்ட ஆயுளுடனும் நல்ல உடல் நலத்துடனும் அவர் வாழ பிராத்திப்பதாக குறிப்பிட்டிருக்கிறார் .சோனியா காந்திக்கு வாழ்த்து தெரிவித்து தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் பதிவில், நாட்டில் மதச்சார்பின்மையையும் , கூட்டாட்சி தத்துவத்தையும் […]

Categories
அரசியல் உலக செய்திகள்

34 வயதிலேயே பிரதமரான பெண் ..!!

 மிக குறைந்த வயதில் பிரதம மந்திரியாக பின்லாந்து நாட்டை சேர்ந்த  சன்னா மரின் தேர்வு செய்யப்பட்டார் . பின்லாந்து  சோசியல் டெமாகிராக்டிக் தலைமையிலான ஐந்து  கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடந்து  வருகிறது.முன்னாள் பிரதமரான ஆண்டி ரின்னி தபால் துறையில் உள்ள பணிகளை செய்யாததால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.அதையடுத்து  அங்கு  நடைபெற்ற  தேர்தலில் போக்குவரத்து  துறை அமைச்சரான சன்னா மரியா போட்டியிட்டார். தேர்தலில் போட்டியிட்ட  அனைத்து வேட்பாளர்களும்  35 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது  குறிப்பிடத்தக்கது.இத்தேர்தலில் வெற்றிபெற்ற […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

இடைத்தேர்தலில் ஆட்சியை தக்கவைத்த எடியூரப்பா..!!

கர்நாடகாவில் 15 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் 6 தொகுதிகளில் வெற்றிபெற்றதன் மூலம் கர்நாடகாவில் பாஜக ஆட்சியைத் தக்க வைத்துள்ளது. கர்நாடகாவில் 17 எம்எல்ஏக்கள் ராஜிமானா செய்த நிலையில், காங்கிரஸ் – மஜத கூட்டணி ஆட்சி முடிவுக்குவந்தது. இதனிடையே கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் 17 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். இதையடுத்து பாஜக ஆட்சியமைத்தது. இந்த 17 தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 5ஆம் தேதி நடைபெற்றது. அதில் 68% வாக்குகள் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

இந்திய தண்டனை சட்டத்தில் திருத்தம் செய்யப்படும் -அமித் ஷா……

நாட்டிற்கு ஏற்ற வகையில் இந்திய தண்டனை சட்டத்தில் திருத்தம் செய்யப்படும் என காவல்துறை டி.ஜி.பி.க்கள் மாநாட்டில் அமித் ஷா கூறியுள்ளார். அனைத்து மாநிலங்களைச்சேர்ந்த காவல்துறை டி.ஜி.பி.க்கள் மற்றும் ஐ.ஜி.க்கள் கந்துகொண்ட  மூன்று  நாள் கொண்ட மாநாடு, மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் நடைபெற்றது. இம்மாநாட்டில் பிரதமர் மோடி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், மத்திய உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா உள்ளிட்டோர் தனி தனியாக கலந்து கொண்டனர். அம்மாநாட்டில், நேற்று முன்தினம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் […]

Categories
அரசியல்

உள்ளாட்சி தேர்தல் குறித்து ரஜினி அதிரடி அறிவிப்பு……!!!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் யாருக்கும் ஆதரவு அளிக்கப்போவதில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.  தமிழகத்தில் வருகின்ற  27மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெறுகின்றது. இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை முதல் தொடங்குகின்றது. வேட்புமனு தாக்கல் செய்யவதற்கான இறுதி நாள் டிசம்பர் 16ம் தேதி ஆகும். இதையடுத்து டிசம்பர் 17ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது. மேலும் இந்த வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி நாள் வரும் 19ம் […]

Categories
தேசிய செய்திகள்

போரட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் டெல்லி முதல்வர் …..!!

உன்னாவில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி இருக்கின்றனர்.பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதை தடுக்க உத்தரபிரதேச அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார் .உயிர் இழந்த இளம்பெண் குடுப்பத்திற்குபிரியங்கா காந்தி நேரில்சென்று ஆறுதல் தெரிவித்தார் . பாலியல் வன்கொடுமை கண்டித்து உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் தர்ணா […]

Categories
அரசியல் பேட்டி

சிறையில் அடைத்தபோதும் எனது மன வலிமை சிறிதும் குறையவில்லை- பா.சிதம்பரம்..!!

சிறையில் அடைத்த போதும் தனது மன வலிமை சிறிதும் குறையவில்லை என முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான பா.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.   ஐ.ன்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு 106 நாட்கள் திகார் சிறையில் இருந்த சிதம்பரத்துக்கு உச்சநீதிமன்றம் அண்மையில் ஜாமீன் வழங்கியது.இதையடுத்து சுமார் 4 மாதங்களுக்கு பிறகு அவர் தமிழகம் வந்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் அவரை  உற்சாகமாக வரவேற்றனர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பா.சிதம்பரம் நிர்பயா  வசதியை பயன்படுத்தி […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

கற்பழிப்பின் தலைநகரமாகியது இந்தியா – ராகுல் காந்தி வேதனை..

 இந்தியா உலகின் கற்பழிப்பு தலைநகரமாகிவிட்டது என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி தன்னுடைய வேதனையை தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியினுடைய முன்னாள் தலைவரும்,கேரள மாநிலம் வயநாடு தொகுதியின் எம்.பி.யுமான ராகுல் காந்தி கடந்த சில நாளாக தன்னுடைய  தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் கல்பேட்டாவில் நடைபெற்ற படை வீரர்களின் கொடி நாள் கொண்டாட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்ற போது , ”நமது நாட்டில் தொடர்ச்சியாக சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகள் மற்றும் பெண்களுக்கு எதிராக ஏற்படும் குற்றங்கள் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

2நிமிடம் நிற்கவேண்டும் … எம்.பி. அதிரடி கோரிக்கை…!!

திருவள்ளூர் மற்றும்  ஆவடியில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க மத்திய மந்திரியிடம் ,எம் .பி . தயாநிதிமாறன்  கோரிக்கை விடுத்துள்ளார் .  டெல்லியில்  ரெயில்வே மந்திரி    பியூஸ் கோயலை நேரில் சந்தித்துகோரிக்கை  மனுவை  கொடுத்த மத்திய சென்னை எம்.பி. தயாநிதி மாறன்.சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல் ரெயில் நிலையத்தில்  திருவள்ளூர்  மற்றும் ஆவடி வழியாக  30-க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படுகிறது . அதில்  தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்கின்றனர். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை; அன்பழகன் அறிவிப்பு!

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற இருப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் க. அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் ஒன்பது மாவட்டங்கள் தவிர எஞ்சிய மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக முன்னதாக வெளியிட்டிருந்த அறிவிப்பாணையை மாநில தேர்தல் ஆணையம் வாபஸ் பெற்றது. இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்த திமுக திட்டமிட்டுள்ளது. […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“தெலுங்கானா என்கவுண்டர் திட்டமிட்ட படுகொலை” CPIM மாநில செயலாளர் சர்ச்சை கருத்து….!!

தெலுங்கானா மாநிலத்தில் பெண் கால்நடை மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட நால்வர் சுட்டு கொல்லப்பட்டது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தெலுங்கானா மாநிலத்தில் கடந்த 27ஆம் தேதி இரவு பெண் கால்நடை மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பின் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். அந்த நான்கு பேரும் பேரிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த […]

Categories
தேசிய செய்திகள்

கிலோ ரூ.25: தடுப்புகளைத் தாண்டி வெங்காயம் வாங்கிய பெண்கள்.!

ஆந்திர அரசின் சார்பில் கிலோ ரூ.25க்கு விற்கப்பட்ட வெங்காயத்தை வாங்க பெண்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர். தடுப்புகள் மீது ஏறி குதித்து கடைக்குள் புகுந்து வெங்காயம் வாங்க முயற்சித்த சம்பவங்களும் நடந்தது. ஆந்திரா மாநிலம் விஜயநகரம் மாவட்டம் சிப்ருபள்ளி பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள பகுதியில் ஆந்திர அரசின் கிலோ ரூ.25க்கு வெங்காயம் விற்பனை ஆனது. இதனை வாங்க பெண்கள் மத்தியில் கடும் போட்டி ஏற்பட்டது.அதிக மக்கள் கூட்டம் காரணமாக பொறுமை இழந்த பெண்கள் தடுப்புகளை மீறி ஏறிக் […]

Categories
அரசியல்

முன்னாள் முதல்வர் நினைவிடத்திற்கு TTV தினகரன் பேரணியாக சென்று அஞ்சலி….!!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மூன்றாவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அஞ்சலி செலுத்தினார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு  பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் பிரபலங்களும் நினைவிடத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், ttv தினகரன் அவர்கள் பேரணியாக சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். முன்னதாக அண்ணாசாலையில் தொடங்கி ஜெயலலிதா நினைவிடம் வரை நடைபெற்ற பேரணியில் டிடிவிதினகரன் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் முன்னாள் சட்டமன்ற […]

Categories
அரசியல்

‘வைகோ மட்டும் தான் தமிழ்நாட்டின் ஆளுமைமிக்க அரசியல்வாதி’ – அமைச்சர் செல்லூர் ராஜூ

தமிழ்நாட்டின் ஆளுமை மிக்க அரசியல் தலைவர் என்றால், அது வைகோ மட்டும்தான் என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியிருக்கிறார். மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘ திமுகவைப் பொறுத்தவரையில் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராக இல்லை. அதன் விளைவாக அதனுடைய தோழமை கட்சிகளையும் தற்போது தூண்டிவிட்டு பல்வேறு வழக்குகளைப் போட்டு வருகின்றது. புதிய மாவட்டங்கள் பிரித்தாலும் அதிலுள்ள பஞ்சாயத்துகளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது என்ற சட்டம் இருந்து வருகிறது. அவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

“மீனவர்கள் பாதுகாப்பாக கரை திரும்ப ஏற்பாடு” – அமைச்சர் ஜெயக்குமார் உறுதி!

மீனவர்கள் அனைவரும் பாதுகாப்பாக கரை திரும்ப தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்ததையடுத்து, தென்மேற்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இந்தியப் பெருங்கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தீவிரப் புயலாக மாறக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் வங்காள விரிகுடா மற்றும் குமரிக்கடற்கரைப் பகுதிகளில் கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும்; ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் […]

Categories
அரசியல்

பெண்களின் பாதுகாப்பிற்காக பஞ்சாப் முதல்வர் எடுத்த அதிரடி முடிவு

பஞ்சாப்  முதல்வர் அமரீந்தர் சிங்  இரவில்  பெண்கள் பாதுகாப்பாக வீடு திரும்புவதற்காக போலீஸ் வாகனத்தில் இலவசமாக அழைத்துச் செல்லும் ஒரு புதிய  திட்டத்தை  அறிவித்துள்ளார். ஐதராபாத்தில் கால்நடை  பெண்  மருத்துவர் பிரியங்கா ரெட்டி   சில நாட்களுக்கு முன்பு  ஒரு கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு எரித்து கொல்லப்பட்டார்.இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் பெண்களின்  பாதுகாப்புக்காக  நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.  அந்த வகையில் பஞ்சாப் மாநில முதல்வர்  […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

11ஆவது முறையாக கட்சியின் தலைவரான லாலு பிரசாத்….!!

ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவராக பிகார் மாநில முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவராக லாலு பிரசாத் ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 11ஆவது முறையாக கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அவர், டிசம்பர் 23ஆம் தேதி 2017ஆம் ஆண்டு மாட்டுத்தீவன ஊழலில் சிக்கி, பிர்சா முண்டா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, அவர் உடல்நிலை பாதிப்படைந்தது. 2018ஆம் ஆண்டு உடல்நிலை பாதிப்படைந்ததைத் தொடர்ந்து, அவர் ராஞ்சியில் உள்ள தனியார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘ஜெ. ஜெயலலிதா எனும் நான்’ – இரும்பு மனுஷியாய் உருவெடுத்தவரின் கதை

கடந்த பல ஆண்டுகளாய் தமிழ்நாட்டில் கல்ட் பெண்மணியாய் வாழ்ந்தவர் முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா. வெற்றிக்கான பாதை அவருக்கு அத்தனை சுலபமாய் கிடைத்து விடவில்லை. ஒரு வெற்றி பெற்ற நடிகையிலிருந்து உலகறிந்த அரசியல்வாதியாய் ஜெ. தன் வாழ்க்கைப் பாதையில் பல இன்னல்களைச் சந்தித்தே வந்தார். ஒரு வலுவான தன்னம்பிக்கையுள்ள பெண்ணாக பலருக்கும் காட்சியளித்தவர் உண்மையில் வெகுளியாகவும் அப்பாவியாகவும் இருந்துள்ளார். அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் அவர் எப்படி வாழ்ந்துள்ளார் என்பதைப் பற்றி பார்ப்போம். ஒவ்வொறு பிரகாசமான கண்களுக்குப் பின்னும் […]

Categories
தேசிய செய்திகள்

தந்திரங்கள் சூழ்ந்த சமகால அரசியல்…!!

கொள்கைகளை விட்டுக் கொடுக்காத அரசியல் நாகரீகம் அப்போது இருந்தது. ஆனால் இன்றைக்கோ, கொள்கைகள், சித்தாந்தங்களை எல்லாம் புறந்தள்ளி பதவி, அதிகாரத்திற்காக எந்த எல்லைக்கும் செல்லத்தயார் என்பது போன்ற நிலைமை உருவாகியுள்ளது தந்திரங்கள், உத்திகள் வகுப்பதில் முற்காலத்தில் சாணக்கியர், கெளடில்யர் போன்றோரை ஆகச் சிறந்தவர்கள் என்று காலம் காலமாக நாம் உதாரணம் கூறுவதுண்டு. ஆனால் இன்றைய அரசியலில், அவர்களை எல்லாம் தூக்கிச் சாப்பிடுவது போல், அரசியல் நடவடிக்கைகளில் தந்திரங்கள், மந்திரங்கள் கையாளப்படுகின்றன. இதற்கு ஆகச் சிறந்த உதாரணம் என்றால், […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே தேசம்….. ஒரே ரேஷன் கார்டு…. ஜூன் 1ஆம் தேதி முதல் …!!

நாட்டின் எந்த ரேஷன் கடையிலும், ஒரு ரேஷன் கார்டைக் கொண்டு பொருட்கள் வாங்கும் வகையில் உருவாக்கப்பட்ட ‘ஒரே தேசம், ஒரே ரேஷன் கார்டு’ திட்டம் அடுத்தாண்டு ஜூன் மாதம் 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் கூறியுள்ளார். நாட்டில் எந்தப் பகுதியில் வசித்தாலும் அங்குள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கிக் கொள்ளும் வகையில், ‘ஒரே தேசம், ஒரே ரேஷன் கார்டு’ திட்டம் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது. முன்னதாக, இது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அரசின் அலட்சியத்தால் 17 பேர் உயிரிழப்பு – ஸ்டாலின் குற்றச்சாட்டு..!!

மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாடு அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நடூர் என்ற பகுதியில் தனியாருக்குச் சொந்தமான வீட்டின் சுற்றுசுவர் இடிந்து விழுந்ததில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அந்த சுவர் குறித்து பல முறை அரசு அதிகாரிகளிடம் முறையிட்டும், நடவடிக்கை எடுக்காமல் விட்டதே இத்தனை பேர் உயிரிழந்திருப்பதற்கு காரணம் என அப்பகுதியில் […]

Categories
தேசிய செய்திகள்

பாஜக ஆட்சியில் செல்ஃபோன் கட்டணம் மிகவும் குறைவு’ – ரவிசங்கர் பிரசாத்

பாரதிய ஜனதா ஆட்சியில் செல்போன் சேவை கட்டணம் குறைவாக இருப்பதாக மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்திருக்கிறார்.  ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தான் ஒரு ஜிபி இணைய சேவை பெற 269 ரூபாய் வரை வாடிக்கையாளர்கள் செலவிட நேர்ந்ததாகவும் தற்போதைய ஆட்சியில் ஒரு ஜிபி 11 ரூபாய் 78 காசுகளுக்கு வழங்கப்படுகிறது என்றும் அமைச்சர் தெரிவித்திருக்கிறார். தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் அறிவுறுத்தலின் பேரில் இந்த கட்டணம் வசூலிக்கப்படுவதாக அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நாமம் போடுவர் – ஜெயக்குமார்.!!

உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் திமுகவுக்கு நாமம் போடுவார்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் பேசியுள்ளார். சென்னை மெரினாவில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயகுமார், “தமிழ்நாடு மக்கள் எதிர்பார்த்த ஒன்றுதான் உள்ளாட்சித் தேர்தல், அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தான் செயல்படுத்த முடியும். இதனைக் கருத்தில் கொண்டே 2016ஆம் ஆண்டு தேர்தல் நடத்த அறிவிப்பு பிறப்பிக்கப்பட்டது. அதை எதிர்த்து நீதிமன்றம் சென்றது திமுக தான். உச்ச நீதிமன்றம் தேர்தல் நடத்த 2018ஆம் ஆண்டு உத்தரவிட்டபோதும், அவர்கள் எந்த […]

Categories
அரசியல்

“எனக்கும் முதலமைச்சராக ஆசை தான்” அதிமுக அமைச்சர் பகிர் பேட்டி…!!

தமிழ்நாடு முதலமைச்சர் ஆக வேண்டுமென தனக்கும் ஆசை இருப்பதாக  கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சரும், அதிமுகவின் முக்கிய பரமுகருமான   ஓ.எஸ். மணியன் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக நாகை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும்  கனமழையால் வேளாங்கண்ணி, பகுதியை சுற்றிலும் வெள்ளநீர் வீடுகளை சூழ்ந்து காணப்பட்டது. இந்நிலையில், தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் பாதிக்கப்பட்ட பகுதிக்கு நேரில்  சென்று பார்வையிட்டார். பின் அவருடன் வந்த அதிமுக தொண்டர்கள் தேங்கி […]

Categories
மாநில செய்திகள்

இலங்கை தமிழர்கள் விரும்பும் அரசியல் தீர்வை மோடி பெற்றுத்தர வேண்டும்” – ஸ்டாலின் கோரிக்கை.!!

இலங்கை தமிழர்கள் விரும்பும் அரசியல் தீர்வை மோடி பெற்றுத்தர வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளதாவது, “ஈழத் தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு செய்வது எனது முன்னுரிமை இல்லை” என்றும், “பெரும்பான்மை சிங்கள மக்களின் விருப்பத்திற்கு எதிராக, ஈழத்தமிழர்களுக்கு அதிகாரம் அளிக்க இயலவில்லை” என்றும் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச “தி இந்து” ஆங்கில பத்திரிகையில் பேட்டி அளித்திருப்பது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக எளிதில் வெற்றி பெறும்: ராஜன் செல்லப்பா பேட்டி

உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருப்பதாகவும், தேர்தலில் அதிமுக எளிதில் வெற்றி பெறும் எனவும் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜன் செல்லப்பா கூறியுள்ளார். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மூன்றாவது நினைவு தினத்தை முன்னிட்டு, ஆயிரம் நபர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை அதிமுக கிழக்கு மாவட்டச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான ராஜன் செல்லப்பா எம்எல்ஏ தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது, ‘தமிழ்நாட்டில் மாவட்டங்கள் 37 ஆக உயர்ந்திருக்கிறது. 6 […]

Categories
தேசிய செய்திகள்

கெத்தா நடந்து வாரான்….. GUN_னோட சுத்தி வாரான்…..வாக்குச்சாவடியில் பரபரப்பு ..!!

பாஜகவினர் நடத்திய போராட்டத்தால் தன்னை தற்காத்துக் கொள்ள காங்கிரஸ் வேட்பாளர் வாக்குச்சாவடி அருகே கையில் துப்பாக்கி எடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஜார்க்கண்டில் சட்டப்பேரவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு ஆறு மாவட்டங்களின் 13 தொகுதிகளுக்கு இன்று காலை தொடங்கப்பட்டது. இந்நிலையில், சைன்பூர் தொகுதியின் வாக்குச்சாவடி ஒன்றில் தல்தோகாஞ் பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளர் கே.என். திருப்பதிக்கு எதிராக பாஜகவினர் கண்டன கோஷங்களை எழுப்பி கல்வீச்சு தாக்குதலிலும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும் அவர் முன்னேறி செல்வதை அவர்கள் தடுக்க […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

BIG BREAKING : ”நம்பிக்கை வாக்கெடுப்பு”உத்தவ் தாக்கரே வெற்றி …!!

மகாராஷ்டிரா மாநில சட்டசபையில் சிவசேனா கூட்டணி அரசு சார்பில் உத்தவ் தாக்கரே பெரும்பான்மையை நிரூபித்தார்  மகாராஷ்டிராவில் நீண்ட அரசியல் குழப்பங்களுக்கு பிறகு சிவசேனா , காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு அமைந்தது. அம்மாநிலத்தின் 18_ஆவது முதலமைச்சராக உத்தவ் தாக்கரே பதவியேறார். இந்நிலையில் மகாராஷ்டிரா கூட்டணி அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சிறப்பு சட்டசபை கூட்டம் கூட்டப்பட்டது. இதில் மஹாராஸ்டிரா கூட்டணி அரசு பெருபான்மைக்கு தேவையான 145 இடங்களுக்கு 169 இடங்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எதையும் தாங்கும் இதயம் எங்கள் முதல்வர் – நிலோபர் கபில்

முதலமைச்சர் பழனிசாமி எந்த தேர்தலாக இருந்தாலும் அதை சந்திக்க தயாராக உள்ளதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் தெரிவித்தார். சென்னை நுங்கம்பாக்கதில் உள்ள தனியார் விடுதியில் பிரதம மந்திரியின் தொழிலாளர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் அமைப்பு சாராதொழிலாளர்கள் மற்றும் சிறு வணிகர்களுக்கு ஓய்வூதிய அட்டைகள் வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில், சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை செயலர் நஜிமுதீன், தொழிலாளர் ஆணைய செயலர் […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.1 மருத்துவம், ரூ 10 உணவு, 80%இடஒதுக்கீடு…. அதிரடி காட்டும் மஹா. முதல்வர்

மஹாராஷ்டிராவில் புதிதாக பொறுப்பேற்ற அரசு அதிரடி திட்டமாக 3  திட்டங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மகாராஷ்டிராவின் 18_ஆவது முதலமைச்சராக உத்தவ் தாக்கரே பதவியேற்கிறார். அவருடைய அமைச்சரவை விரைவில் விரிவாக்கம் செய்யப்பட இருக்கிறது.இந்த சூழ்நிலையில் சிவசேனா , தேசியவாத காங்கிரஸ் , காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் இணைந்து (மகா விகாஸ் அகதி ) என்ற கூட்டணி அமைத்து இருக்கிறார்கள். அந்த கூட்டணி எந்தவித பிரச்சினையும் இல்லாமல் சீராக செல்ல வேண்டும் என்பதற்காக குறைந்தபட்ச செயல் திட்டம் என்று […]

Categories
தேசிய செய்திகள்

நாக்பூர் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜராக தேவேந்திர ஃபட்னாவிஸுக்கு சம்மன்..!!

மகாராஷ்டிராவின் முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தேர்தல் பிரமாணப் பத்திரத்தில், தனது குற்ற வழக்குகளை மறைத்ததற்காக நாக்பூர் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜராகும் படி உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக சர்தார் காவல் நிலையத்தில் இருந்து முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் இல்லத்திற்குச் சம்மன் கடிதம் கொண்டு சேர்க்கப்பட்டது. அதில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அவர், தன் மீதுள்ள இரண்டு குற்ற வழக்குகளை மறைத்து, தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் தாக்கல் செய்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணியான ‘மகா […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

”நான் அப்படி சொல்லல ஜீ” பின்வாங்கும் பிரக்யா சிங்….!!

கோட்சேவை தேசபக்தன் என குறிப்பிட்ட பாஜக மக்களவை உறுப்பினர் பிரக்யா சிங், தான் கூறியது தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டதாக விளக்கமளித்துள்ளார். மக்களவையில் சிறப்பு பாதுகாப்பு குழு மசோதா 2019 தாக்கல் செய்யப்பட்டபோது, கோட்சே கூறிய கருத்துகளை திமுக மக்களவை உறுப்பினர் ஆ. ராசா எடுத்துரைத்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது, பாஜக மக்களவை உறுப்பினர் பிரக்யா சிங், கோட்சே ஒரு தேச பக்தன் என முழங்கினார். இது மக்களவையில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதனைத்தொடர்ந்து, அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

கோட்சேவை ‘தேசபக்தன்’ எனக் கூறியதால் பிரக்யாவின் பதவி பறிப்பு

நாதுராம் கோட்சே தேசபக்தன் என சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த பிரக்யா சிங் தாக்கூரின் நாடாளுமன்ற பதவி பறிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாலேகான் பகுதி ஏற்பட்ட குண்டுவெடிப்பில் குற்றமச்சாட்டப்பட்டவாரன சர்ச்சை எம்.பி பிரக்யா சிங் தாக்கூர் தற்போது மீண்டும் சர்ச்சையைக் கிளப்பி பதவியைப் பறிகொடுத்துள்ளார். 2019ஆம் ஆண்டு மத்திய பிரதேச மாநிலம் போபால் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வென்ற பிரக்யா சிங் தாக்கூர், அண்மையில் நாடாளுமன்ற பாதுகாப்புத் துறை நிலைக்குழு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். மகாத்மா காந்தியைக் கொன்ற […]

Categories
தேசிய செய்திகள்

‘மக்கள் எப்டி போனா என்ன… மாடுதான் முக்கியம்’ – உத்தரப்பிரதேச அரசின் பலே திட்டம்!

பள்ளி மாணவர்களுக்கு சரியான உணவை வழங்க முடியாத அரசு தற்போது மாடுகளுக்கு ஸ்வெட்டர் வழங்குவதன் மூலம், மனிதர்கள் எப்படி போனா எங்களுக்கு என்ன எங்களுக்கு மாடுகள்தான் முக்கியம் என்பது போல் இருக்கிறது. மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு இந்தியாவின் பல மாநிலங்களை பாஜகவே ஆட்சி செய்துவருகிறது. அப்படி பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் மறைமுகமாக பசுக் காவலர்கள் ஆட்சி மறைமுகமாக நடந்துவருகிறது. அப்படி உத்தரப் பிரதேசத்திலும் பசுக்காவலர்களின் ஆட்சி படு ஜோராக நடக்கிறது. மாடுகள் இறந்து […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

கூட்டணி குறித்து தேவேந்திர ஃபட்னாவிஸ் கருத்து…!

அஜித் பவாருடன் கூட்டணி வைத்தது குறித்து, சரியான நேரத்தில் பதில் அளிப்பதாக மகாராஷ்டிரா மாநில பாஜக எம்எல்ஏ தேவேந்திர ஃபட்னாவிஸ், தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து தேவேந்திர ஃபட்னாவிஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ அஜித் பவாருடன் கூட்டணி வைத்தது தவறு எனப் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்குச் சரியான நேரத்தில சரியான பதிலளிப்பேன்’ எனப் பதிவிட்டுள்ளார். இதற்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த அஜித் பவார், ‘ நான் என்சிபியில் தான் இருக்கிறேன். […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

க்ளைமேக்ஸை நெருங்கிய மகாராஷ்டிர அரசியல் களம் – 288 எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு!

மகாராஷ்டிராவில் தேர்தல் முடிவுகள் வெளியாகி, பல்வேறு அரசியல் குழப்பங்களுக்குப் பிறகு நேற்று சுமூகமான முடிவு எட்டப்பட்ட நிலையில், இன்று வெற்றிபெற்ற 288 சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டனர். ஒரு மாத காலமாக அடுத்தடுத்து நிகழ்ந்த அதிரடி திருப்பங்களுக்குப் பிறகு ஒரு வழியாக மகாராஷ்டிராவில் ஆட்சியமைவதற்கான சாதகமான சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. கடும் போராட்டத்திற்குப் பின் தான் நினைத்ததை சாதித்துள்ளது சிவசேனா. சிவசேனா ஆட்சியமைக்க ஆதரவுக்கரம் நீட்டி, காங்கிரஸோடு கூட்டணியமைக்க தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பாலமாக […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

தேவேந்திர ஃபட்னாவிஸை கலாய்த்த குமாரசாமி!

மகாராஷ்டிராவில் நடக்கும் விஷயங்களைப் பார்த்து, நான் மகிழ்ச்சி அடைய வேண்டும், ஆனால் வருத்தப்படுகிறேன் என்று தேவேந்திர ஃபட்னாவிஸின் பதவி விலகல் குறித்து கர்நாடக முன்னாள் முதலமைச்சரும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான குமாரசாமி ட்விட் செய்துள்ளார். மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் பதவியிலிருந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் நேற்று பதவி விலகினார். அவரைத் தொடர்ந்து முதலமைச்சர் பதவியிலிருந்து தேவேந்திர ஃபட்னாவிஸ் பதவி விலகுவதாக அறிவித்தார். மகாராஷ்டிராவின் அடுத்த முதலமைச்சராக சிவசேனாவின் உத்தவ் தாக்ரே நாளை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

எத்தனையோ பிரச்னை இருக்கு … இப்போ இ-சிகரெட் தடை மசோதா தேவையா? – செந்தில்குமார்

இந்தியாவில் விவாதிக்கப்பட வேண்டிய பல பிரச்னைகள் உள்ள நிலையில் இ-சிகரெட் தடைச் சட்டம் குறித்து விவாதிப்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக திமுக மக்களவை உறுப்பினர் செந்தில்குமார் தெரிவித்தார். இதுகுறித்து அவர், “இ-சிகிரெட் காரணமாக பாதிக்கப்படுபவர்கள் 1.02 விழுக்காடு மக்கள் மட்டுமே, இந்த விவாதத்திற்கு என்ன அவசரம். தேசிய அளவில் பல பிரச்னைகள் உள்ளன. குறிப்பாக பெண்களுக்கு அதிகாரம் அளித்தல், குழந்தைகள் பாதுகாப்பு, மருத்துவம், அனைவருக்கும் சமமான அதிகாரம் அளித்தல் போன்ற பிரச்சினைகள் உள்ளன. இதற்கு தரவேண்டிய முக்கியத்துவத்தை விட […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

ஒரே அரசாணை…. கதிகலங்கும் தனியார் பள்ளிகள்…. மாஸ் காட்டிய கல்வித்துறை …!!

தமிழக அரசு வெளியிட்டுள்ள அதிரடி அரசானையால் தனியார் பள்ளிகள் கதிகலங்கி உள்ளனர். தமிழக பள்ளிக்கல்வித்துறை பல்வேறு மாற்றங்களை தொடர்ந்து செய்து வருகின்றது. சமீப காலமாகவே அதிரடியான அறிவிப்புகளை பள்ளி கல்வித்துறை அறிவித்து மக்களின் செல்வாக்கை அதிகம் பெற்ற துறையாக பள்ளி கல்வித்துறை செய்யப்பட்டு வருகின்றது. புதிய பாடத்திட்டம் வந்தது முதல் 11_ஆம் வகுப்புக்கு பொது தேர்வு , 1200 மதிப்பெண் 600_ஆக குறைக்கப்பட்டது வரை பல மாற்றம் நிகழ்ந்துள்ளது. அதே போல இதுவரை பள்ளிகளில்வியின் 10,11,12_ஆம் வகுப்பு […]

Categories
மாநில செய்திகள்

மண்டையில ஏறல….. 109னு மாத்துங்க….. அதிமுக அமைச்சர் உளறல் ….!!

சமீபத்தில் அரசால் கொண்டு வரப்பட்ட கால்நடை ஆம்புலன்ஸ் எண், தனக்கு தெரியவில்லை என்று கூறிய அமைச்சர் கருப்பணன், அந்த எண்ணை 109 என்று மாற்றுங்கள் என்று சக அமைச்சர்களிடம் கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த பகுத்தம்பாளையத்தில் காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி மையத்தின் புதிய கட்டடம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் கால்நடை பாரமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பணன் […]

Categories

Tech |