Categories
மாநில செய்திகள்

தமிழக சட்ட பேரவையில் 3 சட்டத்திருத்த மசோதாக்கள் தாக்கல்!!

தமிழக சட்ட பேரவையில் 3 சட்டத்திருத்த மசோதாக்களை அமைச்சர்கள் தாக்கல் செய்தனர். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 6ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது . ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் உரையாற்றினார். ஆளுநர் உரையின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. மூன்றாவது நாளான இன்று கூட்டுறவு சங்க திருத்த மசோதாவை அமைச்சர் செல்லூர் ராஜு சட்ட பேரவையில் தாக்கல் செய்தார். அந்த மசோதாவின் படி கூட்டுறவு சங்கத்தலைவர் உறுப்பினர் தவறு செய்தால் மாவட்ட இணைப்பதிவாளரே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக ஆட்சியில் இஸ்லாமியருக்கு பாதிப்பா? வாய்ப்பே இல்லை – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

என்.ஆர்.சி சட்டத்தினால் தமிழ்நாட்டில் ஒரு இஸ்லாமியருக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் அவர்களுக்கு ஆதரவாக அதிமுகதான் முதல் குரல் கொடுக்கும் என்று வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சட்டப்பேரவையில் தெரிவித்தார். சட்டப்பேரவை கூட்டத் தொடரில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், சிறுபான்மை மக்களுக்கு நிதியுதவி வழங்குவதாகக் கூறும் அதிமுக, குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பினார். ஸ்டாலினின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் உதயகுமார், “குடியுரிமை திருத்தச் சட்டம் இன்னும் அமல்படுத்தப்படவில்லை. உச்ச நீதிமன்றத்தில் இது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

CAA எதிர்ப்பு: முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்த முகமது அபூபக்கர்

குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து முதலமைச்சர் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி கருத்து கேட்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் முகமது அபூபக்கர் வலியுறுத்தினார். சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, பேசிய இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியைச் சேர்ந் முகமது அபூபக்கர்: “என்ஆர்சி, என்பிஆர், சிஏஏ, இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தில் குடியுரிமை குறித்த தெளிவான சட்டங்கள் வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால், இப்போது திருத்தியமைக்கப்பட்ட குடியுரிமை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நெல்லை கண்ணன் கைது குறித்து முதலமைச்சர் விளக்கம்!

நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டதில் எந்த உள்நோக்கமும் இல்லை என்று முதலமைச்சர் பழனிசாமி சட்டப்பேரவையில் விளக்கமளித்துள்ளார். ஆளுநர் உரையின் மீது பேசிய காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் பிரின்ஸ், குடியுரிமை திருத்தச் சட்டத்தை சுட்டிக்காட்டி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோலம் போட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தது ஏன்? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் பழனிசாமி: கோலம் போடுபவர்கள் அவரவர் வீட்டு வாசலில் போட்டால் பிரச்னை இல்லை. அடுத்தவர் வீட்டில் கோலம் போட்டு அந்த வீட்டு உரிமையாளர் […]

Categories
தேசிய செய்திகள்

ஏர் இந்தியாவை விற்க இறுதி வரைவு தயார்

பொதுத்துறை விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியாவை தனியார்மயமாக்கும் முடிவுக்கான இறுதி வரைவறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவின் முன்னணி பொதுத்துறை விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியாவை தனியாருக்கு விற்பனை செய்வதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இன்று அமித் ஷா தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவுக்கான வரைவறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. இம்மாதத்திற்குள், விற்பனை ஒப்பந்தத்திற்கான அறிவிப்பாணை வெளியிடப்படும் என அரசு சார்பில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தாடி வைத்துக் கொண்டு ….. பைத்தியக்காரன்….. கோமாளி …. அமைச்சரையே வசைபாடிய MLA …!!

அமைச்சர் உதயகுமாரை கடுமையான  வார்த்தைகளால் திமுக MLA ஜெ.அன்பழகன் பேசியது சர்சையை ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்ற கூட்டத்தொடரில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் செய்தியாளர்களை சந்தித்த போது ,  இலங்கை தமிழகர்களுக்கு இரட்டை குடியுரிமை தரப்படும் என்று ஏன் இந்த கபட நாடக ஆடுறீங்க. இதே மசோதா மேலவையில் வரும்போது இந்திய குடியுரிமை திருத்த சட்ட மசோதாவுக்கு எதிராக அதிமுக 11 பேர் , பாமக அன்புமணி என அனைவரும் எதிர்த்து ஓட்டு போட்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக ஏதில் ? முதலிடம் …. ஆதங்கத்தில் அடுக்கிய MLA ….!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட திமுக MLA ஜெ.அன்பழகன் செய்தியாளர்களை சந்தித்தார். தமிழக சட்டசபை மரபுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் கூட்டத்தொடர் முழுவதும் நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து பேரவை வளாகத்தில் பேசிய அவர் , சட்டம் ஒழுங்கை பேணி காப்பதில் தமிழகம் முதல் இடம் என்று முதல்வர் சொல்லியிருகிறார்கள். ஏதில் ? முதலிடம் கொடுத்தார்கள். சட்ட ஒழுங்கு சரியில்லை என்றால் முதலிடம் கொடுத்துள்ளார்கள் என்கிறார். நெல்லை கண்ணனை கைது பண்ணீங்க சரி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடிமையா இருக்கீங்க……. ”உடனே கோவம் வருது”….. MLA அன்பழகன் காட்டம் …!!

சட்ட ஒழுங்கில் தமிழகம் முதலிடம் என்று ஆளுநர் உரையில் கூறி இருந்ததற்கு திமுக MLA அன்பழகன் கடும் விமர்சனம் செய்துள்ளார். இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அமைச்சர் எஸ்.பி வேலுமணியை ஒருமையில் பேசியதாக திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் கூட்டத்தொடரில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து சட்டப்பேரவை வாயிலில் செய்தியாளர்களை சந்தித்த திமுக MLA ஜெயக்குமார் அமைச்சர் மற்றும் அதிமுக அரசை கடுமையாக சாடினார். அப்போது அவர் கூறுகையில் , நான் பேசுவதை அவர்களால் தாங்க முடியவில்லை. குடியுரிமை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

 BREAKING:  கூட்டத்தொடரில் பங்கேற்க ஜெ.அன்பழகனுக்கு தடை….!!

தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்க ஜெ அன்பழகனுக்கு தடை விதித்து சபாநாயகர் உத்தரவிட்டார். தமிழக சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் துவங்கியது.இதில் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் ஆளுநர் உரையில் பதிலளித்து பேசிய உள்ளாட்சித் துறை அமைச்சரை ஒருமையில் பேசியதாகவும் , அவரை கைநீட்டி பேசுவதாகவும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து அவை முனைவரும் , துணை முதலமைச்சருமான  ஓ பன்னீர்செல்வம் அவரை உடனடியாக பேரவையில் நீக்க வேண்டும் என்று தீர்மானம் கொண்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING : NRC-யை முதல் ஆளாக அதிமுக எதிர்க்கும் ….!!

இஸ்லாமிய மக்களுக்கு அதிமுக அரசு பாதுகாப்பு அரணாக இருக்குமென்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார். தமிழகத்தின் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 2_ஆவது நாள் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றது.இதில் குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக இந்த பேரவைக் கூட்டத்தொடரில் விவாதிக்க வேண்டும் என்றுதான் திமுக இன்று காலை வெளிநடப்பு செய்தது. அதற்குப் பின்னர் குடியுரிமை சட்டத் திருத்தம் தொடர்பாக பேரவையில் விவாதம் நடத்த வேண்டும் என்று ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்தார். இதற்க்கு அமைச்சர் ஆர் பி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இப்படி பண்ணுறது தான் இவரோட வேலை – முதல்வர் ஆதங்கம்

திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணியை ஒருமையில் பேசியது அமளியை ஏற்படுத்தியுள்ளது. 2_ஆம் நாளான இன்று நடைபெற்று  வரும் தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணியை ஒருமையில் பேசியதாக சலசலப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி பேசும்போது, சட்டப்பேரவை கூட்டத்தொடர் எப்போதெல்லாம்  நடந்தாலும் திமுக உறுப்பினர் ஜெ அன்பழகன் பேரவையில் பிரச்சினையை ஏற்படுத்துவது போன்ற பேச்சுக்கள் தான் பேசுகிறார் என்று குறிப்பிட்ட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்க பேசினது தப்பு தான்…. நீங்களும் அப்படியே பேசுறீங்க…. முக.ஸ்டாலின் சமரசம் …!!

திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் பேட்சால் சட்டசபையில் திமுக – அதிமுக உறுப்பினர்களிடையே அமளி ஏற்பட்டது. 2_ஆவது நாளாக தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் திமுகவின் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் சபாநாயகரின் பேச்சை கேட்காமல் பேசிக்கொண்டிருந்த அந்த நேரத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி பேசினார். அப்போது அமைச்சர் உட்கார வேண்டும் என்று ஜெ அன்பழகன் பேசியதற்கு அவையில் சலசலப்பு ஏற்பட்டது. இப்படி பேசக்கூடாது என்று சட்டப் பேரவைத் தலைவர் சபாநாயகர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அமைச்சரை ஒருமையில் பேசிய திமுக MLA ….. பேரவையில் அமளி …..!!

சட்டப்பேரவையில் திமுக – அதிமுக உறுப்பினர்களிடையே அமளி ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 2_ஆவது நாளாக தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் திமுகவின் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் சபாநாயகரின் பேச்சை கேட்காமல் பேசிக்கொண்டிருந்த அந்த நேரத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி பேசினார். அப்போது அமைச்சர் உட்கார வேண்டும் என்று ஜெ அன்பழகன் பேசியதற்கு அவையில் சலசலப்பு ஏற்பட்டது. இப்படி பேசக்கூடாது என்று சட்டப் பேரவைத் தலைவர் சபாநாயகர் பேரவையில் அதற்கான விளக்கம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”சட்டம் ஒழுங்கு சரியில்லை” பேரவையில் முதல்வர் பதில் …!!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்ற திமுக MLA கேள்விக்கு முதல்வர் பேரவையில் பதிலளித்தார். 2_ஆவது நாளாக தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் திமுகவின் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் பேரவையில் பேசிக்கொண்டிருக்கும் போது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று அரசின் மீது சில கருத்துக்களை அவர் முன்வைத்தார். அதனைத் தொடர்ந்து பதிலளித்த முதலமைச்சர் பழனிசாமி , நாட்டிலேயே தமிழகத்தில் தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது என்றும் ,  அதற்கான விருதினை மத்திய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுகவை ஏன் தேய்பிறை என்று கூறினேன்?… அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

திமுகவை தேய்பிறை என்று கூறியதற்கான காரணம் குறித்து விளக்கம் அளித்தார் அமைச்சர் ஜெயக்குமார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற வாக்குகளையும், உள்ளாட்சித் தேர்தலில் பெற்ற வாக்குகளையும் கணக்கு வைத்துப் பார்த்தால் திமுக வாக்கு வங்கி சரிந்துள்ளது. இதை வைத்துதான் திமுகவை தேய்பிறை எனத் தெரிவித்ததாகக் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், இதேநிலை நீடித்தால் 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தோல்வியடையும் என்றார். அதேபோல், டிஎன்பிஎஸ்சி விவகாரம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஏன் தளபதி இப்படி பண்ணுறீங்க….. 2 நாளுமே வெளிநடப்பு தானா ? ஸ்டாலின் விளக்கம் …!!

தமிழக சட்டப்பேரவையில் இன்றைய கூட்டத்தொடரை புறக்கணித்து திமுகவினர் 2ஆவது நாளாக வெளிநடப்பு செய்தனர். 2_ஆம் நாளான இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய தமிழக சட்டப்பேரவையில் எதிர்கட்சியான திமுகவினர் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சி தலைவர் முக.ஸ்டாலின் கூறுகையில் , கடந்த 2_ஆம் ஆம் தேதி சட்டப்பேரவை தலைவருக்கு , இந்திய குடியுரிமை திரும்ப சட்டத்தை திரும்ப பெற வேண்டும். அதை சட்டமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினேன். இந்த […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மகன் , மருமகள் கைது …. நீதிமன்ற உத்தரவால் ஆடிப்போன சிதம்பரம் ….!!

நிலம் வாங்கியதை கணக்கில் காட்டவில்லை என்று தொடரப்பட்ட வழக்கில் கார்த்தி சிதம்பரம் கோரிக்கையை நீதிபதி நிராகரித்துள்ளார். 2015 மற்றும் 16 ஆம் ஆண்டில் முட்டு காட்டில் 1.8 ஏக்கர் நிலம் வாங்கியதில் 1.35 கோடி ரூபாய் கணக்கில் காட்டவில்லை என்று வருமான வரித்துறையினர் முன்னாள் மத்திய நிதியமைச்சர் அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீதும் அவரது மனைவி ஸ்ரீநிதி மீதும்  வழக்கு பதிவு செய்தனர். 2018-ஆம் ஆண்டு தொடரப்பட்ட இந்த வழக்கு எழும்பூரில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகின்றது. இந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

JUST NOW : திமுக_வினர் பேரவையில் இருந்து வெளிநடப்பு …!!

குடியுரிமை திருத்த சட்டமசோதாவை விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தமிழக சட்டசபையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்  தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் நேற்று தொடங்கியது. நேற்று தொடங்கிய ஆளுநர் உரையில் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றன. குடியுரிமை திருத்தச்சட்ட மசோதா குறித்து விவாதிக்க வேண்டுமென்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். இந்நிலையில் சபாநாயகர் தனபால் தலைமையில் தமிழக சட்டப்பேரவின் 2ம் நாள் நிகழ்வு தொடங்கியது. இதில் மறைந்த சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்களுக்கு சபாநாயகர் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

BREAKING : மாநில தேர்தல் ஆணையத்திற்கு எதிராக வழக்கு ….!!

மாநில தேர்தல் ஆணையத்திற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. ஜெய்சுகின் என்பவர்தான் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றதற்கு மூல மனுதாரராக இருந்தார்.அவர்தான் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உச்சநீதிமன்றத்தில் தொடர்ச்சியாக சட்ட போராட்டங்களை நடத்தி தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு மிக முக்கியமாக காரணமாக இருந்தார். இவர் தற்போது தமிழக மாநில தேர்தல் ஆணையத்திற்கு எதிராக உச்சநீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடுத்து இருக்கிறார். உச்சநீதிமன்றம், தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்பது  இது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

JUST NOW : 15 நிமிடத்திற்கு சட்டப்பேரவை ஒத்திவைப்பு ….!!

தமிழக சட்டசபையின் இன்றைய கூட்டத்தொடர் இரங்கல் தீர்மானத்தை அடுத்து 15 நிமிடம் ஒத்திவைக்கப்பட்டது. தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் நேற்று தொடங்கியது. நேற்று தொடங்கிய ஆளுநர் உரையில் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றன. குடியுரிமை திருத்தச்சட்ட மசோதா குறித்து விவாதிக்க வேண்டுமென்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். இந்நிலையில் சபாநாயகர் தனபால் தலைமையில் தமிழக சட்டப்பேரவின் 2ம் நாள் நிகழ்வு தொடங்கியது. இதில் மறைந்த சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்களுக்கு சபாநாயகர் தனபால் இரங்கல் குறிப்பு வாசித்தார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”மறைமுக தேர்தல் சட்ட மசோதா” இன்று தாக்கலாக வாய்ப்பு …!!

சட்டசபையின் இன்றைய கூட்டத்தொடரில் பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளது. தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் நேற்று தொடங்கியது. நேற்று தொடங்கிய ஆளுநர் உரையில் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றன. குடியுரிமை திருத்தச்சட்ட மசோதா குறித்து விவாதிக்க வேண்டுமென்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். இந்நிலையில் சபாநாயகர் தனபால் தலைமையில் தமிழக சட்டப்பேரவின் 2ம் நாள் நிகழ்வு தொடங்கியது. JNU பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு எதிராக தமிமுன் அன்சாரி சட்டப்பேரவைக்குள் நுழைந்தார். இன்றைய கூட்டத்தொடரில் மேயர், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

JUST NOW : சட்டப்பேரவை 2_ஆம் நாள் நிகழ்வு தொடங்கியது ….!!

பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டப்பேரவின் 2_ஆம் நாள் நிகழ்வு தற்போது தொடங்கியது. தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் நேற்று தொடங்கியது. நேற்று தொடங்கிய ஆளுநர் உரையில் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றன. குடியுரிமை திருத்தச்சட்ட மசோதா குறித்து விவாதிக்க வேண்டுமென்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். இந்நிலையில் சபாநாயகர் தனபால் தலைமையில் தமிழக சட்டப்பேரவின் 2ம் நாள் நிகழ்வு தொடங்கியது. JNU பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு எதிராக தமிமுன் அன்சாரி சட்டப்பேரவைக்குள் நுழைந்தார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

உள்ளாட்சி தேர்தல்: தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

 குஜிலியம்பாறையில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தவும், சிவகங்கை மாவட்டம் அல்லூரில் மறு வாக்குப்பதிவு நடத்தவும் கோரி வழக்கு தொடர்பாக தமிழ்நாடு தேர்தல் ஆணையத்திடம் உரிய விளக்கம் பெற்ற தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில்,” குஜிலியம்பாறை தாலுகா வடுகம்பாடி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு என்னை எதிர்த்து சேகர் என்பவர் போட்டியிட்டார். ஒன்பதாவது சுற்று முடிவில் 300 ஓட்டுகள் […]

Categories
தேசிய செய்திகள்

அம்பானி, அதானி உள்ளிட்ட தொழிலதிபர்களுடன் மோடி திடீர் ஆலோசனை

நாட்டின் பொருளாதார முன்னேற்றம் குறித்து முகேஷ் அம்பானி, அதானி, ரத்தன் டாடா உள்ளிட்ட முன்னணி தொழிலதிபர்களுடன் பிரதமர் மோடி திடீர் ஆலோசனையில் ஈடுபட்டார். வரும் பிப்ரவரி மாதம் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், நாட்டின் முன்னணி தொழிலதிபர்களுடன் பிரதமர் மோடி திடீர் சந்திப்பை மேற்கொண்டுள்ளார். ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி, டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடா, பாரதி ஏர்டெல் நிறுவனத் தலைவர் சுனில் பாரதி மிட்டல், அதானிக் குழுமத் தலைவர் கவுதம் அதானி, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”யூடர்ன் அடித்து ஐக்கியமான புகழேந்தி”…… அதிர்ச்சியில் TTV தினகரன் ….!!

அமமுகவிலிருந்து விலகிய புகழேந்தி இன்று சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் தனது ஆதரவாளர்களுடன் மீண்டும் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். அமமுகவிலிருந்து விலகிய புகழேந்தி இன்று சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் அதிமுகவில் தன்னை மீண்டும் இணைத்துக் கொண்டார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘ முதலமைச்சர், துணை முதலமைச்சர் தலைமையில் தாய்க் கழகத்தில் மீண்டும் இணைந்தோம். இவ்வளவு நாட்களாக கூவம் ஆற்றில் இருந்தோம். அங்கிருந்து நாற்றம் தாங்க […]

Categories
மாநில செய்திகள்

”1 கோடி கேட்குறாங்க” …. 4 வாரங்களில் பதிலளியுங்க …. நீதிமன்றம் உத்தரவு …!!

பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில், ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு அவரது தந்தை அளித்த விண்ணப்பத்தை நான்கு வாரங்களில் பரிசீலித்து முடிவெடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்ட விரோத டிஜிட்டல் பேனர் வழக்கு மற்றும் பள்ளிக்கரணையில் கடந்த செப்டம்பர் மாதம் பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கு மற்றும் 1 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு அவரது தந்தை தொடுத்த வழக்குகள், நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆளுநர் உரையல்ல… ஆளும்கட்சியின் உரை… கிண்டல் ட்விட் செய்த ஸ்டாலின்..!!

இது ஆளுநர் உரையல்ல, ஆளும்கட்சியின் உரை என்று மு.க ஸ்டாலின் கிண்டலாக ட்விட் செய்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2020ஆம் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் உரை நிகழ்த்தினார். ஆனால் ஆளுநர் உரையை புறக்கணித்து பிரதான எதிர்க்கட்சியான திமுக வெளிநடப்புச் செய்தது. இதேபோல் காங்கிரஸ், அமமுக, மனிதநேய ஜனநாயக கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் வெளிநடப்புச் செய்தன. இதைத்தொடர்ந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் […]

Categories
மாநில செய்திகள்

குடியுரிமை சட்ட எதிர்ப்பு தீர்மானம் – ஆய்வில் உள்ளதாக தனபால் தகவல்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரைக்குப்பின், பேரவைத் தலைவர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தொடரை எத்தனை நாள்கள் நடத்துவது என்று முடிவுசெய்வதற்காக நடத்தப்பட்ட தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களைச் சந்தித்தார் பேரவைத் தலைவர் தனபால். அப்போது அவர், ”நாளை காலை மறைந்த சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்களுக்கான இரங்கல் குறிப்பு, முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் பி.ஹெச். பாண்டியன் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும். இதனைத் தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவுக்கு எதிர்ப்பு: சட்டப்பேரவையை புறக்கணித்த டிடிவி, தமிமுன்.!

ஆளுநர் உரையை புறக்கணித்து சட்டப்பேரவை கூட்டத்தொடரிலிருந்து டிடிவி தினகரன், தமிமுன் அன்சாரி வெளிநடப்புச் செய்துள்ளனர். தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2020ஆம் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. ஆளுநர் உரையை புறக்கணித்து பிரதான எதிர்க்கட்சியான திமுக வெளிநடப்புச் செய்தது. இதேபோல் காங்கிரஸ், அமமுக, மனிதநேய ஜனநாயக கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் வெளிநடப்புச் செய்தன. இதைத்தொடர்ந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “அமமுக சார்பில் ஆளுநர் உரையை புறக்கணித்து வெளியேறியுள்ளோம். குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்ததை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சட்ட பேரவையில் வெளிநடப்பு… திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் ரத்து!

திமுகவின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியுள்ளது. பேரவைத் தலைவர் தனபால் தலைமையில் சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக் கூட்டம் இன்று நடத்தப்பட்டு இந்தப் பேரவை எத்தனை நாள்கள் நடத்துவது என்பது குறித்து முடிவுசெய்யப்படும். இந்தச் சட்டப்பேரவையில் திமுகவின் செயல்திட்டம் குறித்து விவாதிப்பதற்காக அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 5 மணிக்கு திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடக்கவிருந்தது. இந்நிலையில், சட்டப்பேரவையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறையிலேயே எம்எல்ஏக்கள் […]

Categories
மாநில செய்திகள்

சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் ஆளுநர் உரையின் சாரம்சங்கள்!!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் முக்கிய சாரம்சங்களை கூறினார். உள்ளாட்சித் தேர்தல் முடிவு வெளியானதைத் தொடர்ந்து பரபரப்பான அரசியல் சூழலில், 2020ஆம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. நீட் தேர்வு விவகாரம், குடியுரிமை திருத்தச் சட்டம் போன்ற விவகாரங்கள் குறித்து இந்தக் கூட்டத்தொடரில் விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூடி சட்டப்பேரவைக் கூட்டத்தை எத்தனை நாள்கள் நடத்தலாம் என்பது குறித்த முடிவும் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் காலை 10 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் 9 ஆம் தேதி வரை நடைபெறும்.!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 9 ஆம் தேதி வரை நடத்த அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக 15ஆவது சட்டப்பேரவையின் 8ஆவது கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இந்த புத்தாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்று உரையாற்றினார். அப்போது உரையின் இடையே குடியுரிமை திருத்த சட்ட மசோதா குறித்து விவாதிக்க வேண்டுமென்று என்று வலியுறுத்தி திமுக தலைவர் முக.ஸ்டாலின் மற்றும் அக்கட்சி உறுப்பினர்கள் பேரவையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING : ”மாற்றுத் திறனாளிகளுக்கு 4% இடஒதுக்கீடு” பேரவையில் ஆளுநர் உரை …!!

இன்று கூடிய தமிழக சட்டப்பேரவையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பல்வேறு அம்சங்களை பேசி வருகின்றார். தமிழக  15வது சட்டப்பேரவையின் 8ஆவது கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்று உரையாற்றி வருகின்றார். அப்போது அவர் பேசுகையில் , காவிரி – தெற்கு வெள்ளாறு இணைப்பு திட்டம் இந்த நிதியாண்டில் மேற்கொள்ளப்படும். மாமல்லபுரம் சுற்றுலா மேம்பாட்டிற்கு ரூ.563.50 கோடி மதிப்பீட்டில் திட்டம் .நடப்பாண்டு இதுவரை ஜிஎஸ்டி இழப்பீடாக ரூ.7,096 கோடி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”ஜெ.க்கு மணி மண்டபம் கட்டப்படும்” பேரவையில் ஆளுநர் உரை …!!

தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடரில் ஆளுநர் உரை நிகழ்த்தி வருகின்றார். தமிழக  15வது சட்டப்பேரவையின் 8ஆவது கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்று உரையாற்றி வருகின்றார். அப்போது அவர் பேசுகையில் , தமிழக அரசு திறமையான நிதி மேலாண்மைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது இலங்கை தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க தமிழக அரசு சார்பில் மத்திய அரசை வலியுறுத்துகிறேன். சேலம் தலைவாசலில் ரூ.1000 கோடியில் கால்நடை அறிவியல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இத பத்தி பேசுங்க கவர்னர்…. ”கொத்தாக கிளம்பிய உபிக்கள்”… முதல் நாளே இப்படியா ?

தமிழக சட்டப்பேரவையின் கூட்டம் தொடங்கிய நிலையில் திமுக வெளிநடப்பு செய்துள்ளது. தமிழக  15வது சட்டப்பேரவையின் 8ஆவது கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்று உரையாற்ற்றினார். இதில் குடியுரிமை திருத்த சட்ட மசோதா குறித்து விவாதிக்க வேண்டுமென்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் வலியுறுத்தினார். இதை ஏற்கமறுத்ததால் திமுக உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.அதே போல டிடிவி தினகரன், தமிமுன் அன்சாரி உள்ளிட்டோரும் ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING : ”தொடங்கியது சட்டப்பேரவை” திமுக வெளிநடப்பு …!!

தமிழக சட்டப்பேரவையின் கூட்டம் தொடங்கிய நிலையில் திமுக வெளிநடப்பு செய்துள்ளது. தமிழக  15வது சட்டப்பேரவையின் 8ஆவது கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்று உரையாற்ற்றினார். இதில் குடியுரிமை திருத்த சட்ட மசோதா குறித்து விவாதிக்க வேண்டுமென்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் வலியுறுத்தி பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

Categories
அரசியல் தேசிய செய்திகள்

எந்த ஆதாரமுமின்றி கைதுசெய்வதா? ப. சிதம்பரம் ஆதங்கம் ….!!

சமூக செயற்பாட்டாளர் சதாப் ஜாபர், முன்னாள் ஐ.பி.எஸ். அலுவலர் எஸ்.ஆர். தாராபுரி, பிரவீன் ராவ் ஆகியோர் எவ்வித ஆதாரமுமின்றி கைதுசெய்யப்பட்டுள்ளனர் என தனது ஆதங்கத்தை ப. சிதம்பரம் வெளிப்படுத்தியுள்ளார். உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் சமூக செயற்பாட்டாளர் சதாப் ஜாபர், முன்னாள் ஐ.பி.எஸ். அலுவலர் எஸ்.ஆர். தாராபுரி, பிரவீன் ராவ் ஆகியோர் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தியபோது கைதுசெய்யப்பட்டனர். தற்போது அவர்கள் நிபந்தனை பிணையில் வெளியே வந்துள்ளனர். இந்த நிலையில் காங்கிரஸ் மூத்தத் தலைவரும், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடக்கம்

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கவுள்ளது. நடப்பு ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால்‌ புரோகித்‌ உரையுடன் தொடங்குகிறது. சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வு குழு கூடி சட்டப்பேரவை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்தலாம் என்பது குறித்து முடிவு செய்து அறிவிக்கப்படும். மேலும், குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பிரதான எதிர்கட்சியான திமுக கேள்வி எழுப்பவுள்ளதால், பேரவை சூடுபிடிக்கும் என […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலகுவதாக நோட்டீஸ் ஒட்டிய ஜோதிபாசு!

மதுரை: பழங்காநத்தம் பகுதியில் செயல்பட்டு வந்த மகப்பேறு  மருத்துவமனை மாற்றப்பட்டதைக் கண்டித்து கட்சியிலிருந்து விலகுவதாக கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஜோதிபாசு என்பவர் நோட்டீஸ் ஒட்டி தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பழங்காநத்தம் பகுதியில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு பழங்காநத்தம் பழைய பேருந்து நிலையம் அருகே மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனை சுமார் 70 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்தது. ஆனால், தற்போது மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையை, இரண்டு கிலோமீட்டர் தொலைவில், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் மறைகிறதா ‘இரட்டை இலை’…. வரலாற்றை மாற்றி எழுதிய திமுக..!!

நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கட்சியே வெற்றிபெறும் என்ற வரலாறு திருத்தி எழுதப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 27 மாவட்டங்களில் மட்டும் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற்று, ஜனவரி 2ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியானது. 513 மாவட்ட கவுன்சிலர் பதவி இடங்களுக்கும், 5087 ஒன்றிய கவுன்சிலர் பதவி இடங்களுக்கும் தேர்தல் நடந்து முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

2021இல் எல்லாம் மாறும் – ஸ்டாலின் நம்பிக்கை.!

2021ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலையடுத்து தமிழ்நாட்டில் அனைத்தும் மாறும் என திமுக தலைவர் ஸ்டாலின் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள திமுக தென்சென்னை கட்சி அலுவலகத்தில் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் மார்பளவு சிலையை திமுக தலைவர் ஸ்டாலின் திறந்துவைத்தார். அதனைத் தொடர்ந்து பேசிய அவர், சிலை அமைப்பது கருணாநிதிக்குப் பெருமைத் தேடிதருவதற்கு அல்ல; அவரது உழைப்பையும், அவர் ஆற்றியுள்ள பணிகளையும் மக்களிடம் எடுத்துச் செல்வதற்காக எனக் கூறினார். இரண்டு நாள்களாக உள்ளாட்சித் தேர்தல் […]

Categories
அரசியல் திருவாரூர் மாநில செய்திகள்

எந்த காலத்திலும் சிறுபான்மையினருக்கு பிரச்சனை வராது….. அதிமுக உறுதி….!!

நாட்டில் உள்ள சிறுபான்மை இன மக்களுக்கு எந்த பாதிப்பும் வந்துவிடக்கூடாது என்பதில் அதிமுக அரசு உறுதியாக உள்ளது என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.  திருவாரூர் கீழவீதியில் உள்ள நியாய விலை கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசை  உணவுத்துறை அமைச்சர் காமராஜர் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும்  என்பதே தமிழக அரசின் உறுதியான நிலைப்பாடு என்றார். மேலும் இந்த நாட்டில் இருக்கக்கூடிய எந்த சிறுபான்மையின மக்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாடு பாஜகவின் அடுத்த தலைவர் யார்? – கமலாலயத்தில் தீவிர ஆலோசனை.!

தமிழ்நாடு பாஜகவின் தலைவரை தேர்வுசெய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் சென்னையிலுள்ள தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு பாஜகவின் தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டதையடுத்து தனது பதவியை ராஜினாமா செய்தார். இரண்டு மாதங்களைக் கடந்தும் உள்கட்சி பூசலால் தற்போதுவரை தமிழ்நாடு பாஜகவிற்கு மாநிலத் தலைவர் நியமனம் செய்யப்படவில்லை. தற்போது நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக சில இடங்களில் வெற்றிபெற்றுள்ளதைக் கருத்தில்கொண்டும் 2021ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்குள் கட்சியை பலப்படுத்துவதற்கும் மாநிலத் தலைவரை நியமிக்க […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

”புதிய பஞ்சாயத்து தலைவர்” சுகந்தலை ஊர் சார்பில் பாராட்டு ….!!

சுகந்தலை ஊராட்சி மன்ற தலைவராக பொறுப்பேற்ற திரு. வெங்கடேசனை பல்வேறு தரப்பினர் வாழ்த்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் இரண்டு கட்டமாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் நேற்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகின்றது. இரவு பகலாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் திமுக கூட்டணி அதிக மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர் இடங்களை கைப்பற்றியது. திமுக தலைமையிலான கூட்டணி 272 , 2338 இடங்களையும் , அதிமுக 241 , 2185 இடங்களையும் கைப்பற்றியது. தேர்தல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“எனது பிறந்தநாளை கொண்டாட மாட்டேன்”… நீங்களும் கொண்டாடாதீங்க… கனிமொழி எம்.பி. வேண்டுகோள்.!

குடியிருமை திருத்தச் சட்ட போராட்டம், உயிரிழப்பு ஆகியவற்றை மனதில் கொண்டு திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி பிறந்தநாள் கொண்டாட விருப்பமில்லை என தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், தனது பிறந்தநாளை (ஜனவரி 5ஆம் தேதி) கொண்டாட வேண்டாம் என தொண்டர்களுக்கு திமுக மகளிர் அணி செயலாளர், எம்.பி கனிமொழி வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குடியிருமை திருத்தச் சட்டம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒரு வெற்றிக்கு இரு அறிவிப்பா? காங்கிரஸ் குற்றச்சாட்டு.!!

ஒரு வெற்றிக்கு இரண்டு தேர்தல் முடிவுகளை அறிவித்து சிவகங்கை மாவட்டத்தில் ஜனநாயகத்தை கேலிக்கூத்து ஆக்கியுள்ளனர் என்று தமிழ்நாடு காங்கிரஸ் துணைத் தலைவர் குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழ்நாட்டில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அதன் வாக்கு எண்ணிக்கைகள் நேற்று நடைபெற்றது. ஆனால், வாக்கு எண்ணிக்கையின்போது பல இடங்களில் முறைகேடு நடைபெற்றதாக பல்வேறு எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டினர். இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சார்பில், அக்கட்சியின் துணைத் தலைவர் தாமோதரன், நிர்வாகி ராஜேந்திரன் ஆகியோர் வாக்குகள் எண்ணிக்கையில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் – மக்களுக்கு நன்றி தெரிவித்து அதிமுகவை விளாசிய ஸ்டாலின்.!

உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணிக்கு வாக்களித்த தமிழ்நாடு மக்களுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஆளுங்கட்சியின் அராஜகம், தேர்தல் ஆணையத்தின் அலட்சியம் தொடரத்தான் செய்கிறது. இதனையும் மீறி திமுக கூட்டணி மிகப் பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்று வருகிறது. திமுக மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையும், விருப்பமும், ஆளுங்கட்சி மீது மக்கள் கொண்டுள்ள வெறுப்பும் இதன் மூலமாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது. முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜாவின் மகள் தோல்வியடைந்துள்ளார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING : ஒன்றிய கவுன்சிலர் நிலவரம்… திமுக 2,318, அதிமுக 2,179..!!

ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஒன்றிய கவுன்சிலர் பதவியில் திமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றது. தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி, விழுப்புரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் தவிர்த்து ஏனைய 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்டு தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதையடுத்து பதிவான வாக்குகள் 315 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு நேற்று காலை 8 மணி முதல் விடிய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING : சாய்ந்தது அதிமுக… மாவட்ட கவுன்சிலர் போட்டியில் திமுக முன்னிலை!

ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட கவுன்சிலர் பதவியில் திமுக முன்னிலை வகித்து வருகின்றது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி, விழுப்புரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் தவிர்த்து ஏனைய 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதையடுத்து பதிவான வாக்குகள் 315 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு நேற்று காலை 8 மணி […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

நேற்று வெற்றி….. இன்று மரணம் …. சோகத்தை ஏற்படுத்திய பஞ்சாயத்து தலைவர் …!!

பெரம்பலூர் மாவட்டம் ஆதனூரில் ஊராட்சி மன்ற தலைவராக வெற்றி பெற்றவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படடுத்தியுள்ளது. தமிழகத்தில் இரண்டு கட்டமாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி 26 மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்று வருகின்றது. வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிப்பின் படி மாவட்ட கவுன்சிலர் , ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் சரிக்கு சமமாக திமுக , அதிமுக இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம் ஆதனூர் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் […]

Categories

Tech |