Categories
கரூர் மாவட்ட செய்திகள்

சுங்கச்சாவடியில் MLAக்கு துப்பாக்கி முனையில் மிரட்டல் ….!!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பால பாரதியை கரூர் அருகே சுங்கச்சாவடியில் துப்பாக்கி முனையில் மிரட்டியுள்ளனர்.   முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே. பாலபாரதி சனிக்கிழமையன்று மாலை ஈரோட்டில் நடைபெறும்  நிகழ்ச்சிக்காக திருச்சியிலிருந்து காரில் வந்துள்ளார். வரும் வழியில் கரூர் அருகே மணவாசி என்ற இடத்திலுள்ள சுங்கச்சாவடி  வசூல்மையத் தில் காரை தடுத்து நிறுத்தியுள்ளனர். அப்போது பாலபாரதி, தான் முன்னாள்  சட்ட மன்ற உறுப்பினர் என்று கூறி, அடையாள அட்டையை காட்டியுள்ளார்.  அவர் கூறியதை […]

Categories
அரசியல்

”நாங்கள் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம்” திருநாவுக்கரசர் கருத்து ….!!

திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர், திமுக – காங்கிரஸ் கூட்டணி ஒற்றுமையாகத் தான் உள்ளது என சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் திருச்சி சட்டமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர், தற்போது திமுக – காங்கிரஸ் கட்சிகளிடையே நிலவும் சுமுகமான பேச்சு வார்த்தைக் குறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், ‘ தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் சேர்ந்து திமுக தலைவர் ஸ்டாலினைச் சந்தித்து சுமுகமான […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

126ஆவது சட்ட திருத்த மசோதாவுக்கு மத்தியப் பிரதேச சட்டப்பேரவை ஒப்புதல்

126ஆவது சட்ட திருத்த மசோதாவுக்கு மத்தியப் பிரதேச சட்டப்பேரவை ஒப்புதல் அளித்துள்ளது. பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் இட ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் 126ஆவது சட்ட திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கும் வகையில் மத்தியப் பிரதேச சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆங்கிலோ இந்தியர்களுக்கான நியமனம் தொடர தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆங்கிலோ இந்தியர்களும் பின் தங்கிய வகுப்பை சேர்ந்தவர்கள்தான் என மாநில அமைச்சர் கோவிந்த் சிங் தெரிவித்ததைத் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கூட்டணினா..!… ”அப்படிதான் இருக்கும்” கே.எஸ்.அழகிரி கருத்து …!!

கூட்டணி என்றால் ஊடலும் கூடலும் இருக்கத்தான் செய்யும் என்று அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்துப் பேசிய பின்னர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். உள்ளாட்சித் தேர்தல் இடஒதுக்கீடு விவகாரத்தால், திமுக – காங்கிரஸ் கூட்டணியில் கருத்து வேறுபாடு நிலவிவந்த நிலையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி இன்று சந்தித்துப் பேசினார். உள்ளாட்சித் தேர்தலில் இடங்கள் ஒதுக்கீடு செய்வதில், திமுக […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“சொத்து தகராறு” அதிமுக பிரமுகர் வீட்டில் கல்வீச்சு….. அண்ணன் தம்பி கைது….!!

ராணிப்பேட்டையில் அதிமுக பிரமுகர் வீட்டில்  கல்வீசி தாக்குதல் நடத்திய ஒரே குடும்பத்தை சேர்ந்த  அண்ணன் தம்பி இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.    ராணிபேட்டை மாவட்டம் கலவை பகுதியை அடுத்த மாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரிதாஸ். இவர் அப்பகுதி அதிமுக பிரமுகர் ஆவார். இவருக்கும் இவரது அண்ணன் குடும்பத்தாருக்கும் இடையே நீண்ட நாட்களாக சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு சொத்து கேட்டு அதிமுக பிரமுகர் வீட்டின் வெளியே நின்று அவரது அண்ணன் மகன்களான […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக நிர்வாகிக்கு வந்த சோகம்…. 4 பேர் உயிரிழப்பால் அதிமுகவினர் அதிர்ச்சி …!!

ஸ்டெர்லைட் ஆலையின் அருகேயுள்ள பாலத்தின் கன்டெய்னர் லாரி காரில் மோதி விபத்துக்குள்ளனாதில் காரிலிருந்த பொள்ளாச்சி ஜெயராமனின் உறவினர்கள் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர். தூத்துக்குடி – மதுரை தேசிய நெடுஞ்சாலையானது எப்போதும் பரபரப்பாக காணப்படக்கூடிய ஒன்று. இச்சாலையின் வழியே பெரிய கன்டெய்னர்களை ஏற்றிச் செல்லும் லாரிகள், கனரக வாகனங்கள் ஆகியவற்றின் போக்குவரத்து அதிகளவில் இருக்கும். இந்நிலையில், நேற்றிரவு 11:30 மணியளவில் தூத்துக்குடியிலிருந்து மதுரையை நோக்கி ஸ்டெர்லைட் ஆலைப்பகுதியின் அருகே வேலை முடிக்கப்படாத பாலத்தின் வழியாகச் சென்றுகொண்டிருந்த கன்டெய்னர் […]

Categories
தேசிய செய்திகள்

‘சி.ஏ.ஏ. நாட்டின் மதச்சார்பற்ற கொள்கைக்கு எதிராக பின்னப்பட்ட சதி’ – சந்திரசேகர ஆசாத்

நாட்டின் மதச்சார்பற்ற கொள்கைக்கு எதிராக பின்னப்பட்ட சதிதான் குடியுரிமை திருத்தச் சட்டம் என பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர ஆசாத் குற்றஞ்சாட்டியுள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம் பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர ஆசாத் தலைமையில் டெல்லி தாராகஞ்ச் பகுதியில் நடத்தப்பட்டது. போராட்டத்தில் வன்முறை வெடித்ததாகக் கூறி காவல் துறையினர் அவரைக் கைது செய்தனர். இதையடுத்து, அவருக்குப் பிணை வழங்கப்பட்டது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பலமுறை சிறை சென்றாலும் அரசியலமைப்புக்கு எதிரான குடியுரிமை திருத்தச் […]

Categories
தேசிய செய்திகள்

மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்… மருத்துவ சங்கம் போர்க்கொடி!

மருந்துத் தயாரிப்பு நிறு வனங்கள், மருத்துவர்களுக்கு லஞ்சமாக பெண்களை அனுப்பி வைக்கிறார்கள் என்று பிரதமர் மோடி பேசியதாக சர்ச்சை எழுந் துள்ளது. இவ்விவகாரத்தில் பிரதமர் மோடி மன்னிப்பு கோர வேண்டும் என்றும் இந்திய மருத்துவ சங்கம் வலியுறுத்தியுள்ளது தலைநகர் தில்லியில் கடந்த ஜனவரி 2-இல் ஜைடஸ் காடிலா, டொரண்ட் பார்மாஸிட்டிகல்ஸ், வாக்ஹார்ட் உள்ளிட்ட மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களின் பிரதிநிதி களைச் சந்தித்த பிரதமர் மோடி அவர்களுடன் சந்தைப்படுத்துதல் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, மருந்துத் தயா ரிப்பு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

முதலமைச்சர் வேட்பாளர் யார்? – பாஜகவை கலாய்த்த ஆம் ஆத்மி!

பாஜகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என அறிவிக்காததை நக்கல் செய்யும் வகையில் ஆம் ஆத்மி தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டுள்ளது. டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி 8ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. டெல்லியில் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக என மும்முனை போட்டி நிலவிவருகிறது. மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி ஏற்கனவே அறிவித்துவிட்டது. அதேபோல பாஜகவும் தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று அறிவித்தது. கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல்: முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக!

 நடைபெறவுள்ள டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக நேற்று வெளியிட்டுள்ளது. டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. 2015ஆம் ஆண்டு பெற்ற மாபெரும் வெற்றியை தக்கவைத்துக்கொள்ள ஆம் ஆத்மி முனைப்பு காட்டிவருகிறது. அதே நேரத்தில், காங்கிரஸ் கட்சியும் பாஜகவும் ஆட்சியை பிடிக்க போராடிவருகின்றன. ஆம் ஆத்மி சார்பில் ஏற்கனவே மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்குமான வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாஜக சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவுள்ள முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய ராணுவத்துக்கு புதிய துணைத்தளபதி நியமனம்

இந்திய இராணுவத்தின் புதிய துணைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் எஸ்.கே. சைனி நியமிக்கப்பட்டுள்ளார். லெப்டினன்ட் ஜெனரல் எஸ்.கே. சைனி இந்திய இராணுவத்தின் புதிய துணைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே பதவியிலிருந்த லெப்டினென்ட் ஜெனரல் எம்.எம். நரவனே, ராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தார். ராணுவ துணைத் தளபதியான சைனி தேசிய பாதுகாப்புக் காவலரின் பயிற்சி மையத்தில் ஆயுத பயிற்றுவிப்பாளராகவும், டெல்லியின் தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் மூத்த இயக்குநராகவும்; இந்திய ராணுவ அகாடமியின் கமாண்டன்ட் டெஹ்ரா டன்னாகவும் பணியாற்றிய அனுபவமிக்கவர். இந்திய […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

தவறாக வழிநடத்துறீங்க…. பாஜக மீது பாயும் கெஜ்ரிவால் …!!

நிர்பயாவின் தாயாரை பாஜக தவறாக வழிநடத்துகிறது என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டியுள்ளார். டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “நிர்பயா பாலியல் வழக்கு விவகாரத்தில் டெல்லி அரசு தனது பொறுப்புகளை சரியாகச் செய்துவருகிறது. நாங்கள் கருணை மனுவை சில மணி நேரங்களுக்குள் அனுப்பினோம். எனவே குற்றவாளிகளை தூக்கிலிட தாமதப்படுத்துவதில் டெல்லி அரசுக்கு எந்தப் பங்கும் இல்லை” என்றார். டெல்லி அரசு குற்றவாளிகளை தூக்கிலிட தாமதப்படுத்துகிறது என்று மத்திய […]

Categories
தேசிய செய்திகள்

வேணாம்… வலிக்குது…. ”அரசியல் செய்யாதீங்க”…. கெஜ்ரிவால் அறிவுரை

நிர்பயா வழக்கு விவகாரம் தொடர்பாக அரசியலில் செய்யாமல், இதுபோன்ற வழக்குகளில் விரைவாக நீதி கிடைக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பாஜகவினரிடம் வலியுறுத்தியுள்ளார். டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பதிவில், “நான்கு குற்றவாளிகளை தூக்கிலிட தாமதமானதுக்கு ஆம் ஆத்மி அரசு காரணம் என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி குற்றம் சாட்டியுள்ளார். இதுபோன்ற பிரச்னையில் அரசியல் செய்வது வருத்தமாக இருக்கிறது. குற்றவாளிகள் விரைவில் தூக்கிலிடப்படுவதை உறுதிசெய்ய, ஒன்றிணைந்து செயல்பட […]

Categories
Uncategorized

ஆமதாபாத்-மும்பை தேஜஸ் அதிவிரைவு ரயில் தொடக்கம்

தேஜஸ் எக்ஸ்பிரஸ்ஸின் முதல் பயணத்தை ஆமதாபாத்தில் இன்று குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி, மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் ஆகியோர் கொடியசைத்து தொடங்கிவைத்தனர். ஆமதாபாத்- மும்பை இடையே ஐஆா்சிடிசி சாா்பில் தேஜஸ் விரைவு ரயில் இன்று தனது முதல் பயணத்தை தொடங்கியது. தனியாா் சாா்பில் இயக்கப்படும் இரண்டாவது ரயில் இதுவாகும். நாட்டின் முதல் தனியாா் ரயில் தில்லி-லக்னோ இடையிலான தேஜஸ் ரயில் ஏற்கனவே இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இரண்டாவது தனியார் ரயில் ஆமதாபாத்- மும்பை வழித்தடம் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

அரசியல் இலாபத்திற்க்காக பயன்படுத்தியதில்லை – சிவசேனா

சத்ரபதி சிவாஜி பெயரையும் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பெயரையும் ஒருபோதும் அரசியல் லாபத்துக்காகப் பயன்படுத்தியதில்லை என்று சிவசேனா தெரிவித்துள்ளது. சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னா, மும்பையின் நிழல் உலக தாதா கரம் லாலாவைப் பற்றி ஒரு கட்டுரையை வெளியிட்டது. சாம்னா செய்தித்தாளின் ஆசிரியர் சஞ்சய் ராவுத்தின் சர்ச்சைக்குரிய கருத்து குறித்து விளக்கம் தெரிவிக்கும் வகையில் இந்தக் கட்டுரை வெளியிடப்பட்டது. முன்னாள் பிரதமர் இந்திர காந்தி மும்பை வரும்போதெல்லாம் கரம் லாலாவை சந்திப்பார் என்று சஞ்சய் […]

Categories
தேசிய செய்திகள்

‘மோடி உங்க குடியுரிமையை காட்டுங்க’ – ஆர்.டி.ஐ.யில் பகீர் கேள்வி

பிரதமர் நரேந்திர மோடியின் குடியுரிமை குறித்த விவரங்களைத் தனக்கு வெளியிட வேண்டும் எனத் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேரளாவைச் சேர்ந்த ஒருவர் விண்ணப்பித்துள்ளார். மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். குறிப்பாக இந்தச் சட்டத்திற்கு எதிராக கேரளா, மேற்குவங்க மாநிலத்தில் தீவிர போராட்டம் நிலவிவருகிறது. இந்நிலையில், இந்தச் சட்டத்தை முன்வைத்து கேரளாவைச் சேர்ந்த ஒருவர் பிரதமர் மோடியிடம் விசித்திர கேள்வியை முன்வைத்துள்ளார். கேரளாவின் சாலக்குடி பகுதியைச் சேர்ந்த […]

Categories
அரசியல் சென்னை மாவட்ட செய்திகள்

தி.மு.க.-காங்கிரஸ் இடையே கருத்துவேறுபாடு இல்லை: கே.எஸ்.அழகிரி

தி.மு.க.-காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே எந்தவொரு வி‌‌ஷயத்திலும் கருத்து வேறுபாடு இல்லை. தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். கே.எஸ்.அழகிரி- நிருபர்கள் சந்திப்பு:  டெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைவரிடம் புதிய நிர்வாகிகள் நியமனம், தமிழக உள்ளாட்சி தேர்தல் குறித்து கருத்துகளை தெரிவித்தேன். துரைமுருகன் என்ன பேசியுள்ளார்? என்பது பற்றி எனக்கு தெரியாது. அதை தெரிந்துகொண்டபின் கருத்துகளை தெரிவிக்கிறேன். தி.மு.க.-காங்கிரஸ் கட்சி கூட்டணிக்கும், உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிக்கைக்கும் சம்பந்தம் இல்லை. அது முழுக்க முழுக்க உள்ளாட்சி சம்பந்தமானது. […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பணவீக்கம் குறித்து மோடி பதிலளிக்க வேண்டும்- ரன்தீப் சிங் சுர்ஜேவாலா

பணவீக்கம் அதிகரித்து வருவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி மவுனம் காப்பதாக குற்றம் சாட்டிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, அடுத்த 30 நாள்களுக்குள் இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர்களை அழைத்து விவரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். நாளுக்கு நாள் இந்திய பொருளாதாரம் சரிவை நோக்கிச் செல்கிறது என்றும் பணவீக்கம் அதிகரித்து வருகிறது என்றும் பலர் குற்றம் சாட்டிவருகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, இந்தியாவில் பணவீக்கம் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மகாராஷ்டிரா கூட்டணியில் குழப்பம்?

இந்திரா காந்தி குறித்து சர்ச்சையான கருத்து தெரிவித்த சிவசேனா மூத்தத் தலைவர், தனது கருத்தை திரும்பப்பெற்ற நிலையிலும், மகாராஷ்டிரா கூட்டணியில் தொடர்ந்து குழப்பம் நீடித்துவருகிறது. மகாராஷ்டிரா மாநிலம் பூனேவில் விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சிவசேனா மூத்தத் தலைவர் சஞ்சய் ராவத் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “நிழல் உலக தாதாவான ஹாஜி மஸ்தான் மந்திராலயாவுக்கு சென்றால் முழு அமைச்சகமே அவரை சந்திக்கச் செல்லும். கரிம் லாலாவை இந்திரா காந்தி […]

Categories
தேசிய செய்திகள்

தலிபானுடன் பேச்சுவார்த்தையா? – பதிலளிக்கிறார் முப்படைத் தலைமைத் தளபதி

பயங்கரவாதத்தைக் கைவிட்டால் அனைத்து தரப்புடனும் அமைதி பேச்சுவார்த்தையைத் தொடங்கலாம் என முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்துடன் அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேசன் என்ற அமைப்பு இணைந்து நடத்தும் ரைசினா பேச்சுவார்த்தை மாநாட்டில் முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் இன்று கலந்துகொண்டார். அப்போது, பாகிஸ்தானை மறைமுகமாக விமர்சித்த அவர், “அரசே பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும்வரை நாம் அச்சுறுத்தலோடுதான் வாழ முடியும். பிரச்னையின் காரணியை கண்டுபிடித்து அதனை அழிக்க வேண்டும். பயங்கரவாதத்திற்கு எதிரான […]

Categories
அரசியல் புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

முதலமைச்சர் மீது அடுக்கடுக்கான புகார்: காங்கிரஸ் எம்எல்ஏ தற்காலிக நீக்கம்!

காங்கிரஸ் பாகூர் சட்டப்பேரவை உறுப்பினர் தனவேலு கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்‍கப்பட்டுள்ளார். புதுச்சேரி ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பாகூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் தனவேலு, தன் தொகுதிக்கு முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் எந்தவித திட்டங்களையும் செயல்படுத்தவிடாமல் தடுத்துவருவதாகத் தொடர்ந்து குற்றஞ்சாட்டிவந்தார். பத்திரிகை வாயிலாகப் பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறிவந்த அவர் கடந்த வாரம் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை சந்தித்து முதலமைச்சர் மீது பல்வேறு புகார்களைத் தெரிவித்தார். இந்நிலையில், காங்கிரஸ் அலுவலகத்தில் இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”பொய் பிரச்சாரம் செய்யுறாங்க” எதிர்க்கட்சிகள் மீது EPS பாய்ச்சல் …!!

தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரம் செய்கின்றன என முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் காரட்டூர் மணி தலைமையில் கொங்கணாபுரம் பகுதியில் திமுக, அமமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி சுமார் 1500க்கும் மேற்பட்ட நபர்கள் தங்களை முதலமைச்சர் முன்னிலையில் அதிமுகவில் இணைத்துக்கொண்டனர். அவர்கள் மத்தியில் பேசிய முதலமைச்சர், அதிமுக தமிழ்நாட்டில் சிறப்பாக ஆட்சி நடத்திவருகிறது. தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகள் பல்வேறு பொய் பிரசாரங்களை செய்கின்றன. […]

Categories
தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

குடும்பத்தினருடன் பொங்கல் கொண்டாடிய ஓ.பி.எஸ்

துணை முதலமைச்சர் ஓ.பன்னீரசெல்வம் பெரியகுளத்தில் உள்ள தனது இல்லத்தில் குடும்பத்தினருடன் பொங்கல் வைத்து கொண்டாடி மகிழ்ந்தார். தமிழர் திருநாளாம் தை முதல் நாளான இன்று தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தை பொங்கலை அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது குடும்பத்தோடு கொண்டாடி மகிழ்ந்தனர். சேலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது குடும்பத்தினர், அதிமுக தொண்டர்களுடன் பொங்கலை கொண்டாடினார். அதேபோல் தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெரியகுளம் அக்ரஹாரத் தெருவில் உள்ள தனது […]

Categories
மாநில செய்திகள்

துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பொங்கல் வாழ்த்து!

மதுரை செல்லும்முன் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மக்களுக்கு தனது பொங்கல் வாழ்த்தினைத் தெரிவித்தார். இன்று (ஜனவரி 14) பிறந்தநாள் கொண்டாடவிருக்கும் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு நேற்று அதிமுக தொண்டர்கள், பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஓ. பன்னீர்செல்வம், உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும், பத்திரிகையாளர்களுக்கும் தனது பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்தபின் மதுரைக்குப் புறப்பட்டுச் சென்றார். பின்னர் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

அமைதியான மக்களிடம் கதையளக்க வேண்டாம்…. 5 விமர்சகர்களின் கேள்விக்கு பதிலளிக்கத் தயாரா?

குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பாக பிரதமர் மோடி தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று விமர்சகர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க தயாரா? என்று, மத்திய முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக, ப. சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் மேலும் கூறியிருப்பதாவது: “குடியுரிமையை வழங்குவதற்காகவே குடியுரிமைத் திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், அச்சட்டம் யாருடைய குடியுரிமையையும் பறிக்காது என்கிறார் பிரதமர். ஆனால், அச்சட்டம், தங்களை குடிமக்கள் இல்லை என அறிவித்து விடும் எனவும், தங்கள் குடியுரிமையை […]

Categories
தேசிய செய்திகள்

மோடிக்கு எதிராகப் பேசினால் உயிரோடு எரிக்கப்படுவீர்கள்…. உ.பி. பாஜக அமைச்சர் வெறிப்பேச்சு!

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத் ஆகியோருக்கு எதிராகப் பேசுபவர்களை உயிரோடுஎரிக்க வேண்டும்” என உத்தரப்பிரதேச அமைச்சர் ரகுராஜ் சிங், கொலை மிரட்டல் விடுத்துள்ளார். உத்தரப்பிரதேசத்தின் அலிகார் நகரத்தில் குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவான பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. மாநிலத்துணைத் முதல்வர் கேசவ் பிரசாத்மவுரியா, தொழிலாளர் துறை அமைச்சர் ரகுராஜ் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.அப்போதுதான், “சிஏஏ-வைஎதிர்ப்பவர்கள் வெறும் 1 சதவிகிதம் பேர்தான். இந்தியாவில் தங்கியிருந்து, எங்கள் வரிகளைச் சாப்பிட்டு எங்கள் தலைவர்களுக்கு எதிராக ‘முர்தாபாத்’ […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பத்திரிகையாளர் அன்பழகன் கைதுக்கு டிடிவி தினகரன் கண்டனம்..!!

பத்திரிகையாளர் அன்பழகன் கைதுக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னையில் மக்கள் செய்தி மையம் பதிப்பகம் நடத்தி வந்த பத்திரிகையாளர் அன்பழகன் கைது செய்யப்பட்டதற்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “சென்னை பத்திரிகையாளர் சங்கத் தலைவரும் மூத்த பத்திரிகையாளருமான அன்பழகன் இன்று அதிகாலை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளது கண்டனத்திற்குரியது. சென்னை புத்தகக் கண்காட்சியில் அவருக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் […]

Categories
Uncategorized

விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சர் நிதியுதவி

தமிழ்நாட்டில் வெவ்வேறு விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிதியுதவி வழங்கி உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டின் பல்வேறுப் பகுதிகளில் எதிர்பாராத விதமாக நடந்த வெவ்வேறு விபத்துகளில், 24 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், அவர்களது குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

வாடகை குழந்தை…. ”பிச்சை எடுத்த ஆந்திரப் பெண்”….. வசமாக சிக்கினார் …!!

குழந்தையை வாடகைக்கு எடுத்து பேருந்து நிலையத்தில் பிச்சை எடுத்த ஆந்திரப் பெண்ணை மாவட்ட ஆட்சியர் கையும் களவுமாக பிடித்து கைது செய்ய உத்தரவிட்டார். வேலூர் மாவட்டம், காட்பாடியில் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக மாராத்தான் ஓட்டத்தை மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் தொடக்கி வைத்தார். அப்போது அங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் குழந்தையை வைத்து ஒரு பெண் பிச்சை எடுத்துக்கொண்டிருந்ததை கவனித்த ஆட்சியர், அந்தப் பெண்ணை மடக்கிப்பிடித்து விசாரணை செய்தபோது, அந்தக் குழந்தை அந்த பெண்ணுடையது அல்ல என்பது […]

Categories
மாநில செய்திகள்

2019 – 2020ஆம் ஆண்டிற்கு கூடுதல் நிதியாக 6,580 கோடி ஒதுக்கீடு – நிதி அமைச்சர்..!!

நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்த 2019-2020 ஆம் ஆண்டிற்கான இரண்டாவது துணை நிதிநிலை அறிக்கையில் கூடுதலாக 6,580 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019-2020 ஆம் ஆண்டிற்கான இரண்டாவது துணை நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். அதில், மொத்தமாக 6 ஆயிரத்து 580 கோடி ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டு 1000 ரூபாய் ரொக்கப் பணத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாடு அரசுக்கு விருது மழை! – முதலமைச்சர் பெருமிதம்!

தமிழ்நாடு அரசால் விருது மழை பொழிந்து வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேரவையில் பெருமிதம் தெரிவித்துள்ளார். ஆளுநர் உரை மீதான பதிலுரையில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர், அரசுமுறைப் பயணமாக வெளிநாடுகளுக்கு சென்றதன் மூலம் லண்டனில் புகழ்வாய்ந்த கிங்ஸ் மருத்துவமனையின் கிளை, தமிழகத்தில் விரைவில் அமைக்கப்பட இருப்பதாகத் தெரிவித்தார். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு பிறகு 19 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் 63 புதிய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு அதன் மூலம் 83 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகியிருப்பதாகக் கூறிய அவர், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

’சசிகலாவை தர்பார் படத்தில் விமர்சித்தது சரிதான்’ – அமைச்சர் ஜெயக்குமார்.!

சசிகலா தொடர்பாக தர்பார் திரைப்படத்தில் விமர்சித்து காட்சிகள் வைத்தது வரவேற்கக்கூடியதுதான் என மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ராயபுரத்தில் நியாயவிலைக் கடைகளில் இன்று பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தை தொடங்கிவைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய, மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், “பொங்கல் பரிசுத்தொகுப்பு நான்கு நாள்களுக்குத் தொடர்ந்து, காலை ஒன்பது மணிமுதல் இரவு ஏழு மணிவரை வழங்கப்படும். ஒரு கடையில் 300 பேர் வீதம் தினசரி வழங்கப்படுகிறது. பணம் பாதாளம்வரை பாயும் என்பார்கள். ஆனால், […]

Categories
மாநில செய்திகள்

உதவி ஆய்வாளர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம்: முதலமைச்சரின் இரங்கலும் அறிவிப்பும்.!!

கன்னியாகுமரியில் சுட்டுக்கொல்லப்பட்ட உதவி ஆய்வாளர் வில்சன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழ்நாடு – கேரளா எல்லையான கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதி சோதனைச்சாவடியில் காவல் துறையினர் இன்று காலை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காரில் வந்த அடையாளம் தெரியாத இருவர், காவல் உதவி ஆய்வாளர் வில்சனை துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பினர். இதில் வில்சன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தமிழ்நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த […]

Categories
மாநில செய்திகள்

அதிமுகவுக்கு தில் இல்லை…. எடப்பாடிக்கு தைரியம் இல்லை…. துரைமுருகன்

அதிமுக_வுக்கு தில் இல்லை என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபையின் 3 ஆம் நாள் அமர்வு இன்று தொடங்கியது. அதில் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான திமுகவின் தீர்மானத்தை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள சபாநாயகர் தனபால் மறுப்பு தெரிவித்ததால் திமுக எம்எல்ஏக்கள் அவையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். இதனையடுத்து சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் கூறுகையில் , குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து கேரள அரசு கண்டன தீர்மானம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“எடப்பாடி பழனிசாமிக்கு தில் இல்லை”… வெளிநடப்பு செய்தபின் துரைமுருகன் காட்டம்!

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற அதிமுக அரசுக்கு தில் இல்லை என்று எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் விமர்சித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில், குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து விவாதிக்க திமுக அனுமதி கோரியது. அதற்கு பேரவைத் தலைவர் தனபால் மறுப்பு தெரிவித்ததையடுத்து, திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த துரைமுருகன், ‘குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து கேரள அரசு கண்டனத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதுபோல், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சோலிய முடிச்ச தளபதி…. ”செந்தில் பாலாஜிக்கு செக்” …. ஆட்டம் காணும் கரூர் …!!

தமிழகத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் திமுக நிர்வாகிகளை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது. தமிழக்கத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளில் திமுக முன்னிலையில் இருந்தாலும் அக்கட்சிக்குள் இருக்கும் உள்கட்சி பூசல்களையும் இந்த முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளது கட்சியின் தலைமையில் விவாதத்தை கிளப்பியுள்ளது. இதில் முதன்மையான இடத்தில் உள்ளது கரூர் மாவட்ட முடிவுதான். அங்குள்ள 12 மாவட்ட கவுன்சிலர்களில் 9 இடத்தை அதிமுக பிடித்துள்ளதால் திமுகவுக்கு வெறும் 3 இடம் மட்டும் தான் கிடைத்துள்ளது.அதே சறுக்கலை தான் ஒன்றிய கவுன்சிலில் […]

Categories
மாநில செய்திகள்

பெண்ணை காப்பாற்றும் போது உயிரிழந்த இளைஞர்…. குடும்பத்திற்கு ரூ 10,00,000 – முதல்வர் அறிவிப்பு.!!

திருவள்ளூரில் பெண்ணை காப்பாற்ற சென்று உயிரிழந்த இளைஞர் குடும்பத்திற்கு ரூ 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் முன்பதாக முதல்வர் பழனிசாமி ஒரு சில அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது திருவள்ளூரில் பெண்ணை காப்பாற்ற சென்று உயிரிழந்த யாகேஷ் குடும்பத்திற்கு ரூ 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றார். மேலும் பலத்த காயமடைந்த சார்லி என்ற இளைஞர் குடும்பத்திற்கு ரூ […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

வாய்ப்பில்லை ராஜா…. மத்திய அரசுக்கு அதிர்ச்சியை கொடுத்த CSO ….!!

நடப்பாண்டில் ஜிடிபி 5 சதவிகிதத்தைத் தாண்டாது என்று மத்திய புள்ளியியல் அலுவலகமும் தெரிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2019-20 நிதியாண்டிற்கான, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி (Gross domestic product – GDP) குறித்து, தரமதிப்பீட்டு நிறுவனங்கள் பல்வேறு கணிப்புகளை வெளியிட்டு வந்தன. ‘பிட்ச்’ நிறுவனம் 4.6 சதவிகிதம், ‘மூடிஸ்’ 4.9 சதவிகிதம், ‘இந்திய ரிசர்வ்வங்கி’, ‘ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா’ மற்றும் ‘ஐஎச்எஸ் மார்க்கிட்’ ஆகியவை 5 சதவிகிதம், ‘ஆசிய வளர்ச்சி வங்கி’ மற்றும் ‘கிரிசில்’ […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

”ரூ 2,00,000,00,00,000 நலத்திட்டம் கட்” மத்திய அரசின் அதிரடி முடிவு ….!!

நிதிப் பற்றாக்குறையைக் காரணம் காட்டி, ரூ. 2 லட்சம் கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை மோடி அரசு கைகழுவ இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2019-20 நிதியாண்டில் ரூ. 24 லட்சத்து 60 ஆயிரம் கோடியை மொத்தவரி வருவாயாக ஈட்டுவதற்கு, மத்திய அரசு இலக்கு நிர்ணயித்து இருந்தது. இதில் ஜிஎஸ்டி இழப்பீடு போன்றவை தவிர்த்து, மத்திய அரசுக்கு ரூ. 16 லட் சத்து 50 ஆயிரம் கோடி வரி வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்ப, 2019-20 நிதியாண்டுக் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

குடியுரிமை திருத்த சட்டம் : மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் காட்டமான பதிலடி …!!

குடியுரிமை திருத்த சட்ட விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் பேச்சுக்கு முதலமைச்சர் காட்டமான பதிலடி கொடுத்தார். சட்டசபையில் குடியுரிமை திருத்த சட்ட விவகாரம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பேசியதையடுத்து அதிமுக கழக உறுப்பினர்களுக்கும், தி.மு.க. உறுப்பினர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் சபையில் கூச்சல், குழப்பம் நிலவியது. அப்போது முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி எழுந்து தி.மு.க. உறுப்பினர்களுக்கு காட்டமாக பதிலளித்தார். சட்டப்பேரவையில் கவர்னர் உரை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு ஸ்டாலின் பேசினார். […]

Categories
தேசிய செய்திகள்

மோடி, அமித்ஷாவால் நாடு ஆபத்தில் உள்ளது… சிவசேனா எச்சரிக்கை

பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவின் நடவடிக்கைகளால் நாடு ஆபத்தில் உள்ளதாக, சிவசேனா-வின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘சாம்னா’ தனது தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது. இதுதொடர்பாக அந்த தலையங்கத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் என்ன விரும்பினார்களோ, அதுநடந்து கொண்டு இருக்கிறது.நாடு ஆபத்தில் உள்ளது. பிரிவினைவாத அரசியல் நாட்டிற்கு ஆபத்தானது. மும்பையில் 2008-ஆம் ஆண்டு தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள், முகமூடி அணிந்துஇருந்தனர். அதேபோலத் தான் தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக தாக்குதலில் ஈடுபட்டவர்களும் மூகமுடி அணிந்து […]

Categories
மாநில செய்திகள்

மத்திய அரசைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் போராட்டம்

பல்வேறு மாவட்டங்களில் மத்திய அரசைக் கண்டித்து தொழிற்சங்கங்களின் சார்பில் போராட்டங்கள் நடைபெற்றன. நாடு முழுவதும் தொழிலாளர்களின் உரிமைகளைப் பறித்து பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் மத்திய அரசைக் கண்டித்து அகில இந்திய அளவில் தொழிற்சங்க ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அதன் ஒருபகுதியாக தமிழ்நாடு முழுவதும் அனைத்து தொழிலாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு, தங்களது கண்டனங்களை பதிவுசெய்துவருகின்றனர். காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் திமுக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் வேலைநிறுத்த ஊர்வலம் காஞ்சிபுரம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சீ… சீ…. என்ன ? இது….. ஆளுநர் உரையை கிண்டல் செய்த ஸ்டாலின் ….!!

ஆளுநரின் உரை , பய அறிக்கையாக ( Statement of Fear) மட்டுமே இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். இன்று மூன்றாவது நாளாக நடைபெற்றுவரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். ஸ்டாலின் எழுப்பிய கேள்விகள்: நல்லாட்சி குறியீட்டில் முதலிடம் என சொல்லும் தமிழ்நாடு அரசு, குற்றங்களின் எண்ணிக்கையை எடுத்துக் கொள்ளாமலேயே சட்டம் ஒழுங்கில் சிறந்து விளங்குகிறது என எப்படி சொல்லலாம். 250க்கும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

MPஆ இருந்தா என்ன ? தலைமை தாங்குவீங்களா ? கைது செய்து மாஸ் காட்டிய காவல்துறை ….!!

மத்திய அரசைக் கண்டித்து சி.ஐ.டி.யு, எ.ஐ.டி யு.சி உட்பட பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர் சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை தலைமையேற்று நடத்திய இரண்டு மக்களவை உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர். கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையைக் கண்டித்தும் வேலையில்லா திண்டாடத்தைக் கண்டித்தும் சி.ஐ.டி.யு, எ.ஐ.டியு.சி உட்பட பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர் சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மக்களவை உறுப்பினர் பி.ஆர். நடராஜன், திருப்பூர் மக்களவை உறுப்பினர் சுப்புராயன் தலைமையில் நடைபெற்ற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்கள் உங்களின் எதிரி அல்ல ….. ஜன.25இல் முதல்வரின் முக்கிய சந்திப்பு …!!

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக சிறுபான்மையின சமூகத்தைச் சேர்ந்த தலைவர்களை முதலமைச்சர் பழனிசாமி ஜன. 25ஆம் தேதி சந்தித்துப் பேசவுள்ளார். நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்குப் பெரும் எதிர்ப்பலை கிளம்பியுள்ளது. இந்தச் சட்டத்தில் இஸ்லாமிய மக்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறி தமிழ்நாட்டிலும் பல்வேறு போராட்டங்கள் நடந்துவருகின்றன. தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரம் எதிரொலித்தது. இந்நிலையில் இன்று மனிதநேய ஜனநாயக கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் தமிமுன் அன்சாரி, முக்குலத்தோர் புலிப்படை கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை […]

Categories
மாநில செய்திகள்

என்ன விட்டுருங்க…. நான் அப்படி பேசல ….. நெல்லை கண்ணன் மனு …!!

பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா குறித்து அவதூறாகப் பேசியதாக, தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நெல்லை கண்ணன் மனு தாக்கல் செய்துள்ளார். மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, நெல்லை மேலப்பாளையத்தில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் மாநாடு நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய நெல்லை கண்ணன் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமித் ஷா குறித்து அவதூறாகப் பேசிய குற்றத்திற்காக கைது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அத பத்தி பேசிவீங்களா ? எதிர்க்க திராணி இருக்கா ? துரைமுருகன் காட்டம் …!!

 மத்திய அரசு கொண்டுவரும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழ்நாடு அரசு எதிர்த்து பேசத் தயராக உள்ளதா? என்று கூறுங்கள் உங்களை நம்புகிறோம் என்று துரைமுருகன் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் விமர்சித்து பேசினார். நேற்றைய சட்டசபையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் எம்எல்ஏ செம்மலை, எதிர்கட்சி துணை தலைவர் துரைமுருகன் இடையே நடந்த உரையாடல். செம்மலை: குடியுரிமை விவகாரத்தில் இலங்கைத் தமிழர்கள் மீது மிகுந்த அக்கரையோடு திமுகவினர் பேசுகிறீர்கள். 2009ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நிச்சயம் தாமரை மலரும்…. ”யாராலும் தடுக்க முடியாது”….. வானதி சீனிவாசன்

நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் தாமரை மலர்ந்துள்ளது என்றும், தமிழ்நாட்டில் தாமரை மலர்வதை யாராலும் தடுக்க முடியாது எனவும் வானதி சீனிவாசன் தெரிவித்தார். மத்தியில் ஆளும் பாஜக அரசு நிறைவேற்றியுள்ள இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. மாணவர்களும் இளைஞர்களும் அதனை தொடர்ந்து எதிர்த்து போராடி வருகின்றனர். இந்நிலையில், இதனை ஆதரித்து தமிழ்நாடு முழுவதும் பாஜக கட்சியினர் ஆதரவுப் பேரணியை நடத்தி வருகின்றனர். தற்போது ஈரோடு, கோயம்புத்தூர், நாமக்கல், திருப்பூர், நீலகிரி, சேலம் […]

Categories
தேசிய செய்திகள்

”அமெரிக்காவை வச்சு செய்யுங்க” இந்திய அரசே உடனே செய்யுங்க …..!!

ஈரான் ராணுவத் தளபதி கொல்லப்பட்டதற்கு இந்தியா, அமெரிக்காவுக்கு கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி ராஜா தெரிவித்துள்ளார். இதுகுறித்து கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயளாலர் டி ராஜா கூறுகையில், “அமெரிக்க ராணுவத்தால் ஈரான் ராணுவத் தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். அமெரிக்காவின் இந்தத் தாக்குதலால் கச்சா எண்ணெய் பெரும் உயர்வை சந்தித்துள்ளது. இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவைக்கு பெரும்பாலும் ஈரானையே சார்ந்துள்ளது. அமெரிக்காவின் இந்தத் தாக்குதல் இந்தியாவை பெரிதும் பாதிப்படையச் செய்திருக்கிறது. […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

அதைப் பற்றி பேசாதீங்க… யாருக்கும் அஞ்சமாட்டோம்…. சட்டப்பேரவையில் காரசார விவாதம்.!!

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக சட்டப்பேரவையில் மூன்றாவது நாளான இன்றும் காரசாரமாக விவாதம் நடைபெற்றது. இன்று நடைபெற்ற மூன்றாம் நாள் சட்டப்பேரவை நிகழ்வில், ஆளுநர் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய எதிர்க்கட்சிச் தலைவர் ஸ்டாலின்: ஆளுநர் உரை, அரசின் செய்தி அறிக்கைபோல் அமைந்துள்ளது . Railway guide போல் உள்ளது. அதில், குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து தேடித்தேடிப் பார்த்தேன் எதுவும் இல்லை என்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சபாநாயகர்: […]

Categories

Tech |